Tamil Madhura கவிதை அர்ச்சனாவின் கவிதை – முத்தம் தந்திடு!!

அர்ச்சனாவின் கவிதை – முத்தம் தந்திடு!!

couple-kissing-and-holding-heart_23-2147736074
முத்தம் தந்திடு!!
 
முட்களோடு சொற்கள் செய்து
காயம் தந்தாய் – எனது
கண்ணீரும் சிகப்பாய் மாறி
சிறகு கிழிந்ததே!

தென்றல் எந்தன் வாசல் வர
காத்து நிற்கிறேன் – இன்றோ 
புயல் வீசி என் கூடு சிதைய
பார்த்திருக்கிறேன்!!

மருகி மருகி எந்தன் உள்ளம்
குழந்தை ஆனதே – நீயும்
விலகிச் சென்ற நொடியை எண்ணி
அழுது கரையுதே!!

பகலெல்லாம் காத்திருக்கும் 
மல்லி அல்லியும் – இரவில்
சந்திரனைக் கண்ட பின்னே 
மெல்ல அவிழுமே!

காலமெல்லாம் காத்திருப்பேன்
காதல் சேமித்து – நீயும்
காதல் சொல்ல தவம் கிடப்பேன்
எனது உயிர் காத்து!!

மனம் இரங்கி விழிகளாலே
காதல் சொல்லிடு – இல்லை,
மரித்த பின்னே கல்லறைக்கு
முத்தம் தந்திடு!!

— அர்ச்சனா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கல்லும் கற்சிலையும் (கவிதை)கல்லும் கற்சிலையும் (கவிதை)

கல்லும் கற்சிலையும்   என்னில் இருந்து உருவானவன் நீ.. மறவாதே (கல்) என்னால் தான் உனக்கு பெருமை… மறவாதே (கற்சிலை)   உன்னை உருவாக்க நான் பல வலிகளைத் தாங்கினேன். அது உன் கடமை.. தியாகமல்ல.   உனக்காக என்னில் பல

பேதையின் பிதற்றல் – (கவிதை)பேதையின் பிதற்றல் – (கவிதை)

  பேதையின் பிதற்றலில் பெண் மனதின் பொருள்   எப்போது? எப்படி? என எதிர்பார்த்த தருணத்தை தர கனவை நனவாக்க வருபவனே உன்னுடனான என் முதல் சந்திப்பு எப்படி இருக்கும்? உன் உருவத்தைப் பருகும் வகையில் உன்னைப் பார்ப்பேனோ? உன்னைக் கண்டதால்

நிலவு – (கவிதை)நிலவு – (கவிதை)

  நிலவு   இரவில் ஒளி கொண்டுவரும் சந்திரனே பகலுடன் சண்டையிட்டு வாரா இந்திரனே கருநிற மேகக்கூட்டத்தை ஒளியூட்டச் செய்பவனே விண்மீன் கூட்டத்தின் தலைவனே! ஒரு காலம் தோன்றுதலும் ஒரு காலம் மறைதலும் செய்யும் மாயனே உன்னைக் காண மனம் துடிக்குதடா