Tamil Madhura கவிதை கல்லும் கற்சிலையும் (கவிதை)

கல்லும் கற்சிலையும் (கவிதை)

கல்லும் கற்சிலையும்

 

என்னில் இருந்து உருவானவன் நீ.. மறவாதே (கல்)
என்னால் தான் உனக்கு பெருமைமறவாதே (கற்சிலை)

 

உன்னை உருவாக்க நான் பல வலிகளைத் தாங்கினேன்.
அது உன் கடமை.. தியாகமல்ல.

 

உனக்காக என்னில் பல பாதிகளை இழந்தேன்
தேவையற்றவைகளை அகற்றுவது தானே முறைஇதென்ன சாதனையா?

 

வாயடைத்த வற்றிய கோடுகளாக பிளவுபட்டு
தூக்கி எரியும் தருணம் கல் கூறியது

 

உன் வடிவமும், அழகும், பொலிவும் உள்ளவரைதான்
கற்சிலை என சிறப்புரைப்பார்கள்
சீர்செய்யாது சிதைந்து உடையும் சமயத்தில்
நீயும் வெறும் கல்லாக மாறுவாய்
அன்று என்னை உணர்வாய்
இது என் சாபமல்ல
ஏற்கவேண்டிய நடைமுறை
நான் ஏற்கிறேன் என்றுரைத்து காணாமல் போனது கல்

 

இத்தகைய உரையாடல் கல்லுக்கும் கற்சிலைகளுக்கும்
பொருந்துமோ என்னவோ?


ஆனால் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் நிச்சயம் பொருந்தும்
இல்லாவிடில் இத்தனை முதியோர் இல்லங்கள் இல்லாமல் இருந்திருக்குமே?

 

~ஸ்ரீ !!~

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கமலா ப்ரியாவின் “தேவை” கவிதைகமலா ப்ரியாவின் “தேவை” கவிதை

தேவை இந்த உலகம் வாய்ப்புகளால் சூழப்பட்டது இங்கே யாரும் கண்ணீர் விட்டு கரைந்து போக அவசியமில்லை போராடத் துணிந்த எவருக்குமே பிரகாசமான எதிர்காலம் படைக்கப்பட்டிருக்கிறது தகுதியுள்ள எவருக்கும் உதவிக்கு நீள்வதற்கு கரங்கள் ஆயிரம் காத்திருக்கின்றன அத்தனைக்கும் தேவை “நான் வாழ வேண்டும்;

அர்ச்சனாவின் ‘காதல் என்பது இதுதானோ’ (கவிதை)அர்ச்சனாவின் ‘காதல் என்பது இதுதானோ’ (கவிதை)

என் காதல் வானிலே இரவிலும் வானவில் தோன்றுதே என்னுள் பூத்த பூவொன்று வாழ்வில் வாசம் வீசுதே உள்ளங்கையில் புதிதாகக் காதல் ரேகையும் தோன்றுதே வெயிலிலும் ரகசியமாய் மழைச்சாரல் என்னை நனைக்குதே உன்னிடம் மட்டுமே சொல்லிட கதைகள் கோடி உள்ளதே உனக்காக மட்டுமே

அவனவளின் ஆதங்கம்அவனவளின் ஆதங்கம்

அவனவளின் ஆதங்கம்   குடும்பமே குழந்தையின் வருகையை குதூகலத்துடன் எதிர்நோக்கி காத்திருந்தது அவன்(ஆண்) தான் வேண்டுமென ஒரு சிலர் அவள்(பெண்) தான் வேண்டுமென ஒரு சிலர் குறையற்ற குழந்தை எதுவாயினும் சரி என்று ஒரு சிலர் நாட்கள் நகர்ந்தது வசந்தம் வந்தது