Tamil Madhura கவிதை கல்லும் கற்சிலையும் (கவிதை)

கல்லும் கற்சிலையும் (கவிதை)

கல்லும் கற்சிலையும்

 

என்னில் இருந்து உருவானவன் நீ.. மறவாதே (கல்)
என்னால் தான் உனக்கு பெருமைமறவாதே (கற்சிலை)

 

உன்னை உருவாக்க நான் பல வலிகளைத் தாங்கினேன்.
அது உன் கடமை.. தியாகமல்ல.

 

உனக்காக என்னில் பல பாதிகளை இழந்தேன்
தேவையற்றவைகளை அகற்றுவது தானே முறைஇதென்ன சாதனையா?

 

வாயடைத்த வற்றிய கோடுகளாக பிளவுபட்டு
தூக்கி எரியும் தருணம் கல் கூறியது

 

உன் வடிவமும், அழகும், பொலிவும் உள்ளவரைதான்
கற்சிலை என சிறப்புரைப்பார்கள்
சீர்செய்யாது சிதைந்து உடையும் சமயத்தில்
நீயும் வெறும் கல்லாக மாறுவாய்
அன்று என்னை உணர்வாய்
இது என் சாபமல்ல
ஏற்கவேண்டிய நடைமுறை
நான் ஏற்கிறேன் என்றுரைத்து காணாமல் போனது கல்

 

இத்தகைய உரையாடல் கல்லுக்கும் கற்சிலைகளுக்கும்
பொருந்துமோ என்னவோ?


ஆனால் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் நிச்சயம் பொருந்தும்
இல்லாவிடில் இத்தனை முதியோர் இல்லங்கள் இல்லாமல் இருந்திருக்குமே?

 

~ஸ்ரீ !!~

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

மழையாக நான் – கவிதைமழையாக நான் – கவிதை

நம் தளத்தில் தனது அழகான கவிதை மூலம் கால் பதித்திருக்கும் ஸ்ரீ அவர்களை வரவேற்கிறோம். அவரது கவிதைகளைப் படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். அன்புடன், தமிழ் மதுரா மழையாக நான் மழையாக வந்த நான் ஒவ்வொரு நொடியும்

மலையின் காதல் – கவிதைமலையின் காதல் – கவிதை

மலையின் காதல் தன் கதிரவனைக் காணாமல் கண் மூடியவளே! கோபத்தால் பனிக்குள் மூழ்கியவளே! உன் காதலை உணராமல் எங்கே சென்றான் அவன்! உன் முழுமையான மலை முகத்தை வெளிக்கொணர புன்னகையோடு காலையில் சூரியன் வெளிவருவான் உன்னை சூழ்ந்துள்ள கருமேகங்களை விலக்கி உன்னிடத்தில்

நிலவு – (கவிதை)நிலவு – (கவிதை)

  நிலவு   இரவில் ஒளி கொண்டுவரும் சந்திரனே பகலுடன் சண்டையிட்டு வாரா இந்திரனே கருநிற மேகக்கூட்டத்தை ஒளியூட்டச் செய்பவனே விண்மீன் கூட்டத்தின் தலைவனே! ஒரு காலம் தோன்றுதலும் ஒரு காலம் மறைதலும் செய்யும் மாயனே உன்னைக் காண மனம் துடிக்குதடா