Tamil Madhura கவிதை ஏக்கங்கள் (கவிதை)

ஏக்கங்கள் (கவிதை)

longing

 

ஏக்கங்கள்

வாடாமல் இதேபோல் இன்னும் எவ்வளவு காலம் மனம் வீசுவேனோ ?
என்ற பூவின் ஏக்கம்
தனக்கு தேன் கிடைக்குமா என்று பூவிதழை நாடும்
வண்டின் ஏக்கம்
மாதம் ஓர் நாளாவது விடுப்பு எடுக்காமல் இருப்பேனா ?
என்ற நிலவின் ஏக்கம்
தாவித் திளைக்காமல் என்றாவது அமைதியாக உறங்குவேனா ?
என்ற கடலின் ஏக்கம்
கோடையில் நிழலுக்கான ஏக்கம்
குளிரில் வெப்பத்திர்க்கான ஏக்கம்
மாலையில் மறைந்து விடுவேனோ ?
என்ற சூரியனின் ஏக்கம்
எப்போது தன்னை அழிப்பார்களோ ?
என்ற மரங்களின் ஏக்கம்
இரையாக மீன் கிடைக்குமா ?
என்ற கொக்கின் ஏக்கம்
தன் இருப்பிடம் விட்டு வெளிவந்தால் இரையாகி விடுவேனோ?
என்ற மீனின் ஏக்கம்
தன் இருப்பிடமே எதுவென அறியாமல் சுற்றித் திரியும்
பல பிஞ்சு உயிர்களின் ஏக்கம்
காலை எழும்போதே பள்ளி விட்டு வீடு திரும்பும் –
நேரம் கேட்கும் மழலையின் ஏக்கம்
என்றாவது பள்ளி செல்வோமா?
என்ற குழந்தைத் தொழிலாளர்களின் ஏக்கம்
சம்பாதித்த செல்வம் பாதுகாப்பாக இருக்குமோ ?
என்ற பணக்காரர்களின் ஏக்கம்
என்றாவது செல்வம் சேருமா ?
என்ற பாமரர்களின் ஏக்கம்
குடும்ப பொறுப்பு என்றாவது தீருமா ?
என்று பெற்றோர்களின் ஏக்கம்
பெற்றோர்கள் தங்களிடம் மனம் விட்டு பேசுவார்களா?
என்ற குழந்தைகளின் ஏக்கம்
பேரகுழந்தைகளின் நினைவுகளோடு
முதுமையை முதியோர் இல்லத்தில்
கழிக்கும் முதியோர்களின் ஏக்கம்

இந்த அனைத்து ஏக்கங்களும்
என்றாவது தீருமா?
மனிதர்கள் முற்றிலும் மகிழ்வடைவர்களா?
இவ்வுலகம் அனைத்தும் பெற்று நிறைவடையுமா ?
என்ற கடவுளின் ஏக்கம்
தெய்வமே அறியாத் தேடல்கள் இவை
மாற்றங்கள் மாறாதது – கீதை சொன்ன பாடம்
ஏக்கங்கள் தீராதது – வாழ்க்கை உணர்த்தும் பாடம்
வாழ்கையில் தேடலும் எதிர்பார்ப்பும் வேண்டும்
இதுவே நம் முன்னேற்ற பாதையின்
முன்னோடியாக அமையும்
கிடைக்குமா என ஏங்குவதை விடுத்து
கிடைக்கும் என நம்பிக்கையோடு
முயற்சிசெய்து எதிர்பார்த்து இருப்போம்
காலம் கைகூடும்
கனவுகள் நனவாகும்

~ஸ்ரீ !!~

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தேய்ந்துபோன கனவுகள் – கவிதைதேய்ந்துபோன கனவுகள் – கவிதை

  தேய்ந்துபோன கனவுகள் வானவில்லை ரசித்திருந்தேன் வண்ணத்துணிகள் பெற்றேன் வெளுப்பதற்கு.. வயிற்றுப்பசியார விழைந்தேன் பற்றுப் பாத்திரங்கள் கிடைத்தன தேய்ப்பதற்கு..   நான் செய்வதும் அகழ்வுதான்; குடைந்தெடுப்பது கற்சிலைகள் அல்ல கருங்கற்கள்.. அருகருகே அமர்ந்து கல்வி கற்க அனுமதிக்கப்படவில்லை அதனால் அடுக்கடுக்காய் வரிசைப்படுத்துகிறேன்

மழையாக நான் – கவிதைமழையாக நான் – கவிதை

நம் தளத்தில் தனது அழகான கவிதை மூலம் கால் பதித்திருக்கும் ஸ்ரீ அவர்களை வரவேற்கிறோம். அவரது கவிதைகளைப் படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். அன்புடன், தமிழ் மதுரா மழையாக நான் மழையாக வந்த நான் ஒவ்வொரு நொடியும்

அர்ச்சனாவின் ‘என் இமைகளில்’ (கவிதை)அர்ச்சனாவின் ‘என் இமைகளில்’ (கவிதை)

தேடித் தேடிப் பார்க்கிறேன் தொலைந்துவிட்ட என்னை நிச்சயம் முயன்று முத்தமிடுவேன் உனைக் காட்டிய கண்ணை தெவிட்டாமல் பார்த்திருப்பேன் என் விழி குடிக்கும் உன்னை கண்ணாளா  உன் கண்ணசைவில் துளிர்க்கும் எந்தன் பெண்மை!!   காட்சிகள் அனைத்தும் திரிந்து நீ மட்டுமே நிற்க,