Tamil Madhura Uncategorized புரட்டாசி சனிக்கிழமை பெருமாள் வழிபாடு முறை

புரட்டாசி சனிக்கிழமை பெருமாள் வழிபாடு முறை

[youtube https://www.youtube.com/watch?v=g5ndHaR1dPc&w=560&h=315]

 

புரட்டாசி சனி விரத முறை:

விரதம் இருப்பவர்கள் சனிக்கிழமை காலையில் எழுந்து நீராடி, பெருமாள் படத்தின் முன் விளக்கேற்றி, துளசி இலை சேர்த்த தீர்த்தத்தை ஒரு செம்பில் ஊற்றி படம் முன் வைத்து வணங்க வேண்டும். அதை சிறிதளவு அருந்தி விரதம் துவங்க வேண்டும். விஷ்ணு புராணம், நாலாயிர திவ்ய பிரபந்தம், வெங்கடேச ஸ்தோத்திரம், விஷ்ணு சகஸ்ரநாமம் உள்ளிட்டவற்றை படிக்க வேண்டும்.

மதியம் எளிய உணவு சாப்பிடலாம். மாலையில் பெருமாள் கோயிலுக்கு சென்று நெய் அல்லது நல்லெண்ணெய் விளக்கேற்றி வழிபட வேண்டும். வசதி உள்ளவர்கள் புரட்டாசி கடைசி சனியன்று பெருமாளுக்கு சர்க்கரைப் பொங்கல், புளியோதரை படைத்து வழிபட்டு தானம் செய்யலாம்.

இந்த விரதம் மேற்கொண்டால் கிரகதோஷம் நீங்கும். குறிப்பாக சனிக்கிரகத்தால் ஏற்படும் கெடுபலன் அகலும். வறுமை நீங்கி செல்வவளம் பெருகும் என்பது ஐதீகம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 71ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 71

71 – மனதை மாற்றிவிட்டாய் திவி “வெயிட் வெயிட். அது முழுசா பொய்யுமில்லை, உண்மையுமில்ல. இரண்டுமே மிக்சிடு தான்.” “அதான் எப்படி? ” “அனு விசயத்துல சோபி பண்ணத பாத்தபிறகு எனக்கு அவளை சுத்தமா நம்பாதோனல. அதனால என் பிரண்ட் ஒருத்தன்கிட்ட

புத்தகப் பரிந்துரை “பைத்தியக் காலம்” – சத்யா GPபுத்தகப் பரிந்துரை “பைத்தியக் காலம்” – சத்யா GP

புத்தகப் பரிந்துரை – சத்யா GP   நர்ஸிம் அவர்களின் “மதுரைக் கதைகள்” சிறுகதைத் தொகுப்பைத் தொடர்ந்து அடுத்து வெளிவந்துள்ள சிறுகதைத் தொகுப்பு “பைத்தியக் காலம்”. இத்தொகுப்பில் 12 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. ஆ.வி, கல்கி, குமுதம், தமிழ் மின்னிதழ், உயிர்மை போன்ற