Tamil Madhura கவிதை அர்ச்சனாவின் ‘என் இமைகளில்’ (கவிதை)

அர்ச்சனாவின் ‘என் இமைகளில்’ (கவிதை)

தேடித் தேடிப் பார்க்கிறேன்

தொலைந்துவிட்ட என்னை

நிச்சயம் முயன்று முத்தமிடுவேன்

உனைக் காட்டிய கண்ணை

தெவிட்டாமல் பார்த்திருப்பேன்

என் விழி குடிக்கும் உன்னை

கண்ணாளா  உன் கண்ணசைவில்

துளிர்க்கும் எந்தன் பெண்மை!!

 

காட்சிகள் அனைத்தும் திரிந்து

நீ மட்டுமே நிற்க,

காதல் தழலில் கசங்குகிறேன்

நான் என்ன செய்ய?!!

கண்ணுள்ளே கனவில் மட்டும்

வந்துபோவதை நிறுத்து

என்னை உனதாக்கிக்கொள்

என் இமைகளில் முத்தம் கொடுத்து!!!

— அர்ச்சனா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

மழையாக நான் – கவிதைமழையாக நான் – கவிதை

நம் தளத்தில் தனது அழகான கவிதை மூலம் கால் பதித்திருக்கும் ஸ்ரீ அவர்களை வரவேற்கிறோம். அவரது கவிதைகளைப் படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். அன்புடன், தமிழ் மதுரா மழையாக நான் மழையாக வந்த நான் ஒவ்வொரு நொடியும்

நிலவு – (கவிதை)நிலவு – (கவிதை)

  நிலவு   இரவில் ஒளி கொண்டுவரும் சந்திரனே பகலுடன் சண்டையிட்டு வாரா இந்திரனே கருநிற மேகக்கூட்டத்தை ஒளியூட்டச் செய்பவனே விண்மீன் கூட்டத்தின் தலைவனே! ஒரு காலம் தோன்றுதலும் ஒரு காலம் மறைதலும் செய்யும் மாயனே உன்னைக் காண மனம் துடிக்குதடா

புதுமை பெண்ணின் மாற்றம் – (கவிதை)புதுமை பெண்ணின் மாற்றம் – (கவிதை)

புதுமை பெண்ணின் மாற்றம் பாரதி கண்ட புதுமை பெண்ணாய் வாழ்பவள் பாரதியின் பொன்மொழி படி நடப்பவள் உன்னைக் கண்டு தலைகுனியும் போதும் உன் கண்களை தவிர்க்கும் போதும் மட்டும் மறக்கிறேன் நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் ~ஸ்ரீ!!~ Free Download WordPress