Tamil Madhura கவிதை அர்ச்சனாவின் ‘நீ – நான்’ (கவிதை)

அர்ச்சனாவின் ‘நீ – நான்’ (கவிதை)

நம் தளத்தில் தனது அழகான கவிதை மூலம் கால் பதித்திருக்கும் அர்ச்சனா அவர்களை வரவேற்கிறோம். அவரது கவிதைகளைப் படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அன்புடன்,

தமிழ் மதுரா

 

 

நீ – நான்

கவிதை ஒன்று கேட்டால்

என் பெயர் சொல்லும்

முட்டாள் கவிஞன் நீ!!

முத்தங்கள் கேட்டால்

கன்னங்களைக் கடிக்கும்

வளர்ந்த குழந்தை நான்!!

ஆசைகளை மறைத்துக்கொண்டு

அரிஸ்டாட்டில் பேசும்

அறிவுக்களஞ்சியம் நீ!!

அனைத்தும் அறிந்திருந்தும்

உன் பேச்சுக்கு தலையசைக்கும்

தஞ்சை பொம்மை நான்!!

உரசலும் தீண்டலும்

கேட்காமலே அள்ளிக்கொடுக்கும்

கலியுகக் கர்ணன் நீ!!

சீண்டல்கள் பிடித்தாலும்

கோபப் பார்வை வீசும்

குடும்பக் குத்துவிளக்கு நான்!!

காதலை நெஞ்சில் சுமந்து

கனவுகளைக் கண்ணில் சுமக்கும்

என் எதிர்காலம் நீ!!

வாழ்வதன் அர்த்தமாய்

வாழ்க்கையின் நோக்கமாய்

உன் நிகழ்காலம் நான்!!

— அர்ச்சனா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

அர்ச்சனாவின் ‘காதல் என்பது இதுதானோ’ (கவிதை)அர்ச்சனாவின் ‘காதல் என்பது இதுதானோ’ (கவிதை)

என் காதல் வானிலே இரவிலும் வானவில் தோன்றுதே என்னுள் பூத்த பூவொன்று வாழ்வில் வாசம் வீசுதே உள்ளங்கையில் புதிதாகக் காதல் ரேகையும் தோன்றுதே வெயிலிலும் ரகசியமாய் மழைச்சாரல் என்னை நனைக்குதே உன்னிடம் மட்டுமே சொல்லிட கதைகள் கோடி உள்ளதே உனக்காக மட்டுமே

நிலவு – (கவிதை)நிலவு – (கவிதை)

  நிலவு   இரவில் ஒளி கொண்டுவரும் சந்திரனே பகலுடன் சண்டையிட்டு வாரா இந்திரனே கருநிற மேகக்கூட்டத்தை ஒளியூட்டச் செய்பவனே விண்மீன் கூட்டத்தின் தலைவனே! ஒரு காலம் தோன்றுதலும் ஒரு காலம் மறைதலும் செய்யும் மாயனே உன்னைக் காண மனம் துடிக்குதடா

ஏக்கங்கள் (கவிதை)ஏக்கங்கள் (கவிதை)

  ஏக்கங்கள் வாடாமல் இதேபோல் இன்னும் எவ்வளவு காலம் மனம் வீசுவேனோ ? என்ற பூவின் ஏக்கம் தனக்கு தேன் கிடைக்குமா என்று பூவிதழை நாடும் வண்டின் ஏக்கம் மாதம் ஓர் நாளாவது விடுப்பு எடுக்காமல் இருப்பேனா ? என்ற நிலவின்