Tamil Madhura கவிதை அர்ச்சனாவின் ‘என் இமைகளில்’ (கவிதை)

அர்ச்சனாவின் ‘என் இமைகளில்’ (கவிதை)

தேடித் தேடிப் பார்க்கிறேன்

தொலைந்துவிட்ட என்னை

நிச்சயம் முயன்று முத்தமிடுவேன்

உனைக் காட்டிய கண்ணை

தெவிட்டாமல் பார்த்திருப்பேன்

என் விழி குடிக்கும் உன்னை

கண்ணாளா  உன் கண்ணசைவில்

துளிர்க்கும் எந்தன் பெண்மை!!

 

காட்சிகள் அனைத்தும் திரிந்து

நீ மட்டுமே நிற்க,

காதல் தழலில் கசங்குகிறேன்

நான் என்ன செய்ய?!!

கண்ணுள்ளே கனவில் மட்டும்

வந்துபோவதை நிறுத்து

என்னை உனதாக்கிக்கொள்

என் இமைகளில் முத்தம் கொடுத்து!!!

— அர்ச்சனா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ப்ரியவதனாவின் காதல் மனதுப்ரியவதனாவின் காதல் மனது

வணக்கம் தோழமைகளே நமது தளத்திற்கு தனது அழகான காதல் கவிதை மூலம் அடியெடுத்து வைத்திருக்கும் எழுத்தாளர் ப்ரியவதனாவை வரவேற்கிறோம். நிழலாய் தொடரும் நினைவுகளைக் கொண்ட காதல் மனம் என்ன சொல்கிறது என்று படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே.  அன்புடன்,

காதல் மொழி ❤️ – (கவிதை)காதல் மொழி ❤️ – (கவிதை)

கடத்திச்செல்லும் நின் குறுகுறு பார்வையில் இழையோடும் ஓராயிரம் காதல் மொழி… உன் பார்வையின் காந்தமா…பார்வை உணர்த்தும் காதலின்  காந்தமா விடை அறியா மனது… உன் நினைவுகள் குறுக்கிடும் தருணமெல்லாம் தானாக என் இதழ் நீளும் புன்னகை உணர்த்தும் உன் மீதான காதலை…

அர்ச்சனாவின் கவிதை – தஞ்சம் வரவா!அர்ச்சனாவின் கவிதை – தஞ்சம் வரவா!

தஞ்சம் வரவா?!!   விழியைத் திருப்பி என்னைப் பாரடா எனை அள்ளி உன்தன் மனதுள் ஊற்றடா உலகத்து மொழிகலெல்லாம் நமக்கு வேண்டுமோ? என் மனதை உரைத்திடும் மொழியும் இருக்குமோ? சிறகுகள் விரித்து நிற்கிறேன் பறந்திட வானவில்லில் காதல் வண்ணம் சேர்த்திட மலர்களைக்