Tamil Madhura சிறுகதைகள் மைக்ரோ ஹாரர் கதைகள் – 1

மைக்ரோ ஹாரர் கதைகள் – 1

கதை – 1 

அதிகாலை யாரோ ஜன்னல் கண்ணாடியைத் தட்டும் சத்தம் கேட்டுக் கண்விழித்தேன். விழித்ததும்தான் தெரிந்தது அது டிரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடியிலிருந்து வந்த சத்தம் என்று.

கதை 2

படுக்கை அறையின் அலமாரியிலிருந்து வெளியே வந்த அந்த உருவம் தனது நீண்ட கத்தி போன்ற ரத்தம் வழியும் நகத்தால் என் மார்பைத் துளைத்த அதே சமயம் என் சத்தம் வெளியே வராதவாறு மற்றொரு கையால் என் வாயை மூடியது. அந்தக் கடைசி வினாடிகளில் எனது அலாரம் மணியை 12:07 என்று காட்டியது. அப்பாடா என்ன ஒரு பயங்கரமான கனவு விழித்து வியர்வை வழிய எழுந்து மணியைப் பார்த்தேன் 12:06. படுக்கை அலமாரி கதவு மெதுவாகக் கிறிச்சிட்டது.

கதை 3 

நான் பூனைகளுடனும் நாய்களுடனும் இளம் வயதில் வளர்ந்ததால்  தூங்கும் போது நகத்தால் அவை கதவினைப் பிராண்டும் சத்தம் நன்கு பரிட்சியம். இப்போது நான் மட்டும் தனிமையில். அதே போல கதிவினை நகம் பிராண்டும் சத்தம் கேட்கிறதே…

கதை 4

ஷ்ஷ்… அப்பாடா நான் மட்டும்தான் இந்த வீட்டில் வசிக்கிறேன் என்று பெயர். ஆனால் நான் திறந்த கதவுகளை விட தினமும் மூடும் கதவுகள் அதிகம்.

கதை 5

“ராஜி…” கீழ்த்தளத்திலிருந்து தாய் அழைக்கும் சத்தம் கேட்டு அந்த சிறுபெண் மாடியிலிருந்து  இறங்கினாள். அவளை விருட்டென்று பின்னிருந்து பக்கத்து அறைக்குள் இழுத்தன தாயின் கரங்கள் “எனக்கும் அந்தக் குரல் கேட்டுச்சு… “

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

வல்லிக்கண்ணன் கதைகள் – ஊரும் ஒருத்தியும்வல்லிக்கண்ணன் கதைகள் – ஊரும் ஒருத்தியும்

திருமணமாகி வந்த நாள் முதலே ரஞ்சிதத்துக்குக் கணவன் ஊரைப் பிடிக்கவில்லை. இது என்ன ஊரு இது பட்டிக்காட்டுப் பயஊரு. இதுவும் ஒரு ஊரா” என்று பழிப்பது அவளுக்கு வழக்கமாக அமைந்துவிட்டது. ரஞ்சிதம் டவுனில் பிறந்து வளர்ந்தவள். எட்டாம் வகுப்பு வரை அங்கே

அசோகர் கதைகள் 2 – ஆசிரியர் பாவலர் நாரா. நாச்சியப்பன்அசோகர் கதைகள் 2 – ஆசிரியர் பாவலர் நாரா. நாச்சியப்பன்

கதை இரண்டு – ஐயம் தீர்க்கும் ஆசான்   அது ஒரு சிறு கிராமம். சுற்றிலும் வயல்கள் குழ்ந்து ஆங்காங்கே சிறுமரத் தோட்டங்கள் நிறைந்து அந்தக் கிராமம் அழகான தோற்றத்துடன் விளங்கியது. அழகான கிராமம் என்பதைத் தவிர அதற்கு வேறு ஒரு

பெண் உரிமை- கி.வா. ஜகன்னாதன்பெண் உரிமை- கி.வா. ஜகன்னாதன்

1   “கல்யாணி, உனக்கு இன்னும் பள்ளிக்கூடத்துக்கு நேரம் ஆகவில்லையா? எவ்வளவு நாழிகை அப்படியே உட்கார்ந்திருப்பாய்? எப்போது குளிக்கிறது, எப்போது சாப்பிடுகிறது?”   “இன்றைக்குத்தான் பள்ளிக்கூடம் இல்லையென்று சொன்னேனே, அம்மா. எங்கள் பழைய தலைமை ஆசிரியர் இறந்து போனார். அதற்காக விடுமுறை.”