Tamil Madhura கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ,Uncategorized ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 65

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 65

65 – மனதை மாற்றிவிட்டாய்

ஆதித்ய ராஜா கீழே திவ்ய ஸ்ரீ என்ற பெயரை எழுதி பல திருத்தங்கள் செய்து இறுதியில் தியா – தயா என்று இருந்தது.

ஆதி நீங்க கேட்ட மாதிரி நான் உங்க பேர்ல இருந்து உங்களுக்கு நிக் நேம் யாரும் கூப்பிடாதது வெச்சுட்டேன். பட் இத நான் உங்ககிட்ட ஸ்பெஷல தான் சொல்லுவேன். நம்ம லவ்வ உங்ககிட்ட சொல்லிட்டு தான் இத சொல்லுவேன். லவ் உடனே சொல்லலாம்னு பாத்தா நீங்க ஊர்ல போயி உக்காந்திட்டிங்க. சும்மா போன்ல மெசேஜ்ல எல்லாம் எனக்கு சொல்ல விரும்பும் இல்ல. நீங்க ஆசைப்பட்ட ஒரு விஷயம் உங்களுக்கு எதிர்பார்க்காத நேரத்துல கிடைக்கும்போது உங்க சந்தோசம் எப்படி இருக்குனு நான் நேர்ல பாக்கணும். அதுவும் எனக்கு உங்கள ஜஸ்ட் லவ் பண்றேன் பிடிச்சிருக்குனு ஒரு வார்த்தைல சொல்ல பிடிக்கல. அதை தாண்டி நிறையா சொல்லணும். நான் என்னை கல்யாணம் பனிக்கப்போறவனை எப்படி நினச்சேன். அவரு என்கிட்ட இப்டியெல்லம் நடந்துக்கணும்னு நினைச்சதை விட நான் அவர்கிட்ட எப்படி இருக்கணும்னு ஆசைப்பட்டேனு எல்லாமே உங்ககிட்ட சொல்லணும். நீங்க என்னோட இத்தனை வருஷ தேடல் சோ சிம்பிளா அது இருக்கக்கூடாது. அந்த மொமெண்ட் உங்க வாழ்க்கையிலே மறக்க முடியாத அளவுக்கு இருக்கனும். அந்த மாதிரி ஒரு டைமிங் தான் எதிர்பார்த்திட்டு இருக்கேன். பட் இங்க நிச்சயதார்த்தம் வேலையே ஆரம்பிச்சுட்டாங்க சோ அந்த அளவுக்கு நடக்கலேன்னாலும் உங்கள நேர்ல பாத்தாவது சொல்லணும் அத மாத்திக்க மாட்டேன். இப்போதைக்கு வெயிட் பண்ணறேன். சீக்கிரம் என்கிட்ட வந்திடுங்க.

தயா, எல்லாரும் நீங்க என்னென்ன அவங்ககிட்ட பேசுனீங்க, என் லவ் இல்லாம கல்யாணம் பண்றது கூட ஒரு வகைல கட்டாயம்னு சொன்னிங்கன்னு சொன்னாங்க. எல்லாருக்கும் தெரிஞ்சு கடைசியா எனக்கு தெரிஞ்சிருக்கு. ஆனா நீங்க பண்ணது கூட கரெக்ட் தான். ஒரு வேலை நீங்க என்கிட்ட லவ் சொல்லி நான் ஒத்துக்கிட்டு இருந்திருந்தா கூட ஒரு உறுத்தல் எனக்குள்ள இருந்திட்டே இருந்திருக்கும் வீட்டுக்கு தெரியாதே. ஏன்னா அவங்க எல்லாரும் என் கல்யாணத்த அந்த அளவுக்கு எதிர்பார்க்கிறாங்க. அவங்க இஷ்டப்படியும் நடக்கும்னு ஆசை. நான் லவ் பண்ணா என்ன இருந்தாலும் நானா சூஸ் பண்ணேன்னு நினச்சுடுவாங்களோனு தோணும். பட் U r so sweet நீங்க எனக்கு இந்த விஷயத்துல கூட கஷ்டமோ, உறுத்தலோ இல்லாம என்னை பாத்துக்கிட்டீங்க. எனக்கு உங்கள இப்போ பாக்கணும்னு தோணுது. ஆனா நீங்க இப்போ வரமுடியாது. பேசணும்னு தோணுது. ஆனா ஏனோ தெரில உங்கள லவ் பன்றேன்னு நான் முடிவு பண்ணதுல இருந்து உங்ககிட்ட சாதாரணமா எனக்கு பேசவரல. நிறையா லவ், கொஞ்சம் தடுமாற்றம், பல நேரத்துல உளறல் அதனாலயே ஏதாவது ஒரு ரீசன் சொல்லி உங்ககிட்ட சிக்காம ஓடிடறேன். ஒருவேளை லவ் பன்றேன்னு சொல்லிட்டா இதெல்லாம் கொஞ்சம் சரி ஆய்டும்னு நினைக்கிறேன். ஆனா அது நேர்ல தான். சரி கொஞ்சமாவது பொறுப்பா சீக்கிரம் வாங்க. ஏதோ நான் கொஞ்சம் மக்கா இருந்திட்டேன். கொஞ்சம் தான் ரொம்ப எல்லாம் இல்ல. அதனால நீங்க சொல்ல வரது, பேசுனது எல்லாம் புரிஞ்சுக்காம இருந்திட்டேன். அதுக்காக ப்ளீஸ் தயா என்னை பழிவாங்கிடாதீங்க. முடிஞ்சளவுக்கு சீக்கிரம் வந்துடுங்க.

தயா ரொம்ப சேட்டை உங்களுக்கு நான் இங்க வெயிட் பண்ணிட்டு இருக்கேன். நீங்க இன்னும் வர லேட்டாஆகும் னு என் பிபியை ஏத்திக்கிட்டு இருக்கீங்க. எனக்கு அவ்வ்ளோவா பொறுமை எல்லாம் இல்லை. நானும் ஒழுங்கா இந்த விஷயத்துலையாவது அடக்கமா பொறுப்பா இருக்கனுன்னு பாக்கறேன். ஆனா அந்த பொறுமை போச்சு திவியோட கிரிமினல் மூளை உங்களுக்கு பிளான் போட்டு கூட்டிட்டு வர வெச்சு அதிரடியாதான் லவ் சொல்லும். நீங்களா வந்திட்டா உங்களுக்கு சேப்.

இதுவரை படித்தவனுக்கு உறங்கிக்கொண்டிருந்த திவியை கண்டு புன்னைகை புரிந்தான். ஒரு தடவையாவது என்னை எதிர்பார்க்கமாட்டேயானு கேட்டேன். ஆனா ஒரு ஒரு நிமிஷமும் எதிர்பார்த்திட்டு இருந்திருக்கேல? என்றவன் அடுத்து படிக்க

தயா நான் உங்ககிட்ட பிரச்னையை சொல்லக்கூடாதுனு நினைக்கல. உங்கள தவிர யாருகிட்டேயும் சொல்லமாட்டேனு தான் இருந்தேன்.. நீங்க என்னை எந்த அளவுக்கு நம்புனா எல்லாரும் இன்னுமா அவகிட்ட கேக்றேன்னு சொல்லும் போது கூடஎன் தியா என்கிட்ட பொய் சொல்லமாட்டானுநம்பிக்கையோட கேட்டீங்க. அத எனக்கு வீணாக்க இஷ்டமில்லை. அதனால தான் நான் தான் அப்டி பேசுனேன்னு சொல்லிட்டேன். ஆனா நீங்க அப்படி உடைஞ்சு போயி இருக்கறத என்னால பாக்க முடியல மத்தவங்களும் பீல் பன்னிருப்பாங்க. ஆனா அவங்க பீலிங் எல்லாம் இவ ஏன் இப்டி பண்ணா? இவளா இப்டி பண்ணாங்கற மாதிரி அவங்க பாவனைகள் இருந்தது. அவங்க கேள்விகளே அந்த விடீயோவை நம்பி என்னை யோசிச்சாங்க. ஆனா நீங்க அவ அப்டி பண்ணமாட்டா இருந்தும் இது எப்பிடின்னு ஒன்னும் புரியாம வாயடைச்சு போயி நின்னீங்க. உங்க கேள்வி என்னை நம்பி மத்த எல்லாத்தையும் யோசிச்சீங்க. அதனால தான் நீங்க அப்போ போன்னு சொன்னதும் உங்ககிட்ட வாதாடம போய்ட்டேன். என்னை இவ்ளோ நம்புற ஒருத்தரோட வார்த்தைக்கும் உணர்ச்சிக்கும் மதிப்பு கொடுக்கணும்னு தான் போய்ட்டேன். மத்தபடி சரி நீங்க கொஞ்சம் அமைதியாக்கிட்டு என்கிட்ட வந்து அடிச்சாவது என்ன நடந்தது சொல்லுன்னு கேப்பீங்க அப்போ எல்லாமே சொல்லிட்டா பிரச்சனை முடிஞ்சதுன்னு நம்பிக்கைல தைரியத்துல தான் போய்ட்டேன்.

உங்கள நான் ரொம்ப மிஸ் பண்றேன் தயா. எந்த மாதிரி நடந்திருக்க வேண்டிய பங்க்சன். இப்போ எப்படி இருக்கோம். வீட்ல எல்லாரும் என்ன நினைச்சிட்டு இருக்காங்களோ. பாவம் அவங்களும் என்கிட்ட ரொம்ப பாசத்தை எதிர்பார்த்திட்டாங்க. என்னை ரொம்ப நம்பிட்டாங்க. அது இல்லேனு என் வாயில இருந்தே சொன்னதும் அவங்களால அத ஏதுக்கமுடில. என்னை திட்டிட்டு அவங்க எல்லாரும் மட்டும் சந்தோஷமாவ இருப்பாங்க. அவங்களும் வருத்தப்பட்டுட்டே தான் இருப்பாங்க. ஆனா உண்மை தெரிஞ்சதும் எல்லாரும் பழையமாதிரி எல்லாமே மாறிடும். சோ இதுக்கெல்லாம் நீங்க தான் தயா மூலகாரணம் . சமத்தா சீக்கிரம் வந்து என்கிட்ட எல்லாத்தையும் கேட்டுட்டு என்னை கல்யாணம் பண்ணி உங்ககூடவே வெச்சுக்கோங்க. அதுக்கப்புறம் எல்லாரையும் சந்தோசமா பத்திரமா நான் பாத்துக்கிறேன். என்ற அவள் வார்த்தையும் அருகில் இருந்து ஸ்மைலியும் ஒட்டப்பட்டிருந்த அழகான ஜாலியான அதுவும் கூட்டமாக இருக்கும் கார்ட்டூன் படங்கள் கூறியது அவளின் மனநிலையும், ஆசையையும். எவ்வளோ நம்பிக்கையோட இருந்திருக்கா.. ஆனா நான் தான் காது குடுத்து கூட கேக்கல என்று நினைக்க அவனுக்கு ஆதங்கமாக இருந்தது.

ஏன் தயா நீங்க இவ்வளோ அவசரப்படறீங்க அதுவும் கல்யாண விசயத்துல. நான் இத உங்ககிட்ட இருந்து எதிர்பாக்கவேயில்லை. நம்ம இரண்டு பேரு வீட்லயும் நம்ம கல்யாணம் எந்த அளவுக்கு எதிர்பார்க்கிறாங்கனு புரிஞ்சும் தெரிஞ்சும் ஏன் இப்டி யாருக்கும் தெரியாம உடனே கல்யாணம் பண்ணியே ஆகணும்னு பிடிவாதமா இருக்கீங்க. நான் எவ்வளோ முயற்சி பண்ணிட்டேன். இத நிறுத்த ஆனா யாருமே நான் சொல்லவரத கூட கேட்கல என அவள் குடும்பத்தில் அனைவரிடமும் பேச முயற்சி செய்து பிரச்சனையாகி எல்லா கதவுகளும் அடைக்கப்பட்ட ‘நிலையில் இனி ஆண்டவன் கையில் என்று அமர்ந்தது எல்லாமே எழுதப்பட்டிருந்தது.

தயா நமக்கு நடந்த இந்த கல்யாணம் எந்த அளவுக்குனு சரி தப்புனு எனக்கு சொல்ல தெரில. ஆனா எப்டியோ என்னோட தேடல், ஆசை, எதிர்பார்ப்பு, வேண்டுதல் எல்லாமே நிறைவேறிடிச்சு. நான் உங்க மனைவியா உங்ககிட்ட வந்திட்டேன். இதுக்கு மேல என்ன வந்தாலும் நீங்க என் கூட இருப்பிங்க அந்த சப்போர்ட் போதும். எதுனாலும் சமாளிச்சிடுவேன்.

இன்னைக்கு அபி அண்ணி, தர்ஷி, அம்மு எல்லாரும் தயா பேரு பத்தி கேட்டதும் ஷாக் எனக்கு. உங்ககிட்ட தானே மொதல்ல சொல்லணும்னு வெச்சுஇருந்தேன். இவங்களுக்கு எப்படி தெரிஞ்சதுனு. அப்புறம் தான் தெரியது அவங்களுக்கு அந்த பேரு மட்டும் தெரிஞ்சிருக்கு அது நீங்கன்னு தெரில. சோ அப்டியே விளையாட்டா பேசி எஸ்கேப் ஆயிட்டேன். ஆனா அந்த பேரு எப்படி தெரிஞ்சிருக்கும். புரியல. சரி உண்மை தெரிஞ்சதும் அவங்ககிட்டேயே கேட்டு தெரிஞ்சுக்கறேன்.

ஆனா நீங்க அத கேட்டுட்டு வந்து என்கிட்ட கேட்டதை நினைச்சாதான் எனக்கு உங்கள என்னை பண்றதுனே தெரில. சிரிப்பு தான் வந்தது. யாராஇருந்தாலும் ஒன்னுயாரு டி அவன் நீ லவ் பண்ற ஆளுகேள்வி வந்திருக்கும். இல்லைமுன்னாடி எப்டியோ எனக்கு தெரியாது, ஆனா இனிமேல் நீ இப்டி தான் இருக்கணும்னு சொல்லி ஆர்டர் போட்டிருப்பாங்க. ” அது இரண்டலையுமே அந்த பொண்ணு மனசுல வேற ஒருத்தன் இருக்கானு முழுசா நம்பி தான் இந்த பதிலை சொல்லுவாங்க.

ஆனா நீங்க தெளிவாஏன் டி அவங்ககிட்ட அப்டி சொன்ன?” ன்னு கேட்டீங்க. ரொம்ப அழுத்தமா அப்டி எல்லாம் நீ யாரையும் லவ் பண்ணலேனு வேற என்கிட்டேயே சொல்றிங்க. ஏதோ விளையாட்டுக்கு அப்டி சொல்றேங்கிற அளவுக்கு புரிஞ்சு உங்களுக்கு கொஞ்சம் யோசிச்சா உங்க பேரு தான் தயான்னு தெரிஞ்சிருக்கும். இல்லை எனக்கு நிக் நேம் வெக்க சொன்னேனே அது வெச்சியா? என்னனு திரும்ப ஒருதடவையாவது கேட்டிருப்பீங்க. சரி விடுங்க அந்த நேரத்துல நடந்த பிரச்சனை டென்ஷன், இதுல நான் அவங்ககிட்ட எல்லாம் விளையாடிட்டு இப்டி சொல்றேன் என்னை பத்தி என்ன நினைபாங்கனு யோசனை இதுல அவ்ளோ எல்லாம் திங்க் பண்ணமுடியாது தான். ஆனாலும் உங்ககிட்ட இந்த விளையாட்டு எனக்கு பிடிச்சிருந்தது. அது என்கிட்ட சொல்லாம ஊர்ல இருந்து போனதுக்கா இருக்கலாம், இங்க வந்து அவசரப்பட்டு பீல் பண்ணி ஏதோ நினைச்சிட்டு கல்யாணம் பண்ணதா இருக்கலாம். பட் உங்களுக்காக அப்போப்போ ஹிண்ட் கொடுக்கறேன். மத்தவங்ககிட்ட இனி தயா பத்தி பேசி என்னை தப்பா காட்டிக்கமாட்டேன். பாக்கறேன் நீங்க கண்டுபுடிக்கிறிங்களானு. அதுக்கு முன்னாடி சீக்கிரம் இந்த பிரச்னையை பத்தி வீடியோ பத்தி இன்னைக்கு நீங்க கேட்கல நான் அடுத்த தடவை சொல்லும் போது கேட்டுட்டா நானே தயா யாருனு உங்ககிட்ட சொல்லிடுவேன்.

தயா எல்லாருக்கும் என் மேல பாசம் இருக்குல்ல . ஆனா நான் அவங்ககிட்ட பேச முயற்சி பண்றேன். பழைய மாதிரி இருக்க ட்ரை பன்றேன்னு ஏன் அவங்களுக்கு புரியல. இவ்ளோ நாளும் நான் தப்பு பண்ணிருக்கேன். திட்டுவாங்க கொஞ்ச நேரம் பேசாம இருப்பாங்க. ஆனா திரும்ப நான் அவங்கள சுத்திக்கிட்டே இருந்தா சரி இனிமேல் அத பண்ணக்கூடாதுனு எனக்கு அட்வைஸ் பண்ணிட்டு மறுபடியும் என்கிட்ட பேசுவாங்க. நானும் அந்த தப்பு பண்ணமாட்டேன். ஆனா இந்த தடவை பிரச்சனை பெருசா தான்.. அதுதான் நாள் கணக்கா பேசாம இருக்காங்க. ஆனா நான் திரும்ப அவங்க தான் வேணும்னு போறேனே அது ஏன் அவங்களுக்கு புரியமாட்டேங்கிது? எப்போவுமே நான் பீல் பண்ணா அவங்க எல்லாரும் தானே எனக்கு மேல வருத்தப்படுவாங்க. இப்போவும் அதே மாதிரி தானே ஆனா அவங்க கோபம் ஏன் ரொம்ப அதிகமா இருக்கு. என் கோபத்தை என்கிட்ட வர குழந்தைகிட்ட காட்டற அளவுக்கு கூட பாவம் நந்து. அவன் ரொம்ப பீல் பண்ணான். எனக்கு கண்ணே கலங்கிடுச்சு. ப்ளீஸ் தயா நீங்க சீக்கிரம் எல்லாத்தையும் கேட்டுட்டு பிரச்சனையா சால்வ் பண்ணுங்க. எல்லாரும் இவ்ளோ கஷ்டப்படுத்தி அவங்களும் தான் கஷ்டப்பட்டு யாருக்கு என்னை யூஸ்.. இன்னைக்கு என்ன நடந்தாலும் சரி உங்ககிட்ட அந்த சொத்து பிரச்னையை பத்தி பேசியே தீரணும்.

தயா ஏன் இப்டி நடக்கிது. இவ்ளோ நாள் ஒன்னு நீங்க கோபப்பட்டு விஷயத்தை கேட்கமாட்டீங்க. இல்ல நான் கோவிச்சிக்கிட்டு அப்போ சொல்லமாட்டேனு போவேன். நேத்து காலைல இரண்டுபேரும் அப்டி இல்லாம பேச வந்தும் போன் வந்து கெடுத்திடிச்சு. சாய்ங்காலம் நடந்த பிரச்னைல நானே நமக்குள்ள சண்டை வந்தாலும் பரவால்ல சொல்லியே ஆகணும்னு முடிவுல இருந்தா நீங்க அர்ஜுன் அண்ணாகிட்ட அப்படி பேசிருக்கீங்க. அவரு சொல்றதையும் கேக்கல. அதை கூட கோபத்துல பண்ணீங்கன்னு தப்புன்னு சொல்லல. ஆனா நீயே போயி அவங்ககிட்ட பேசுனு எனக்கு ஒரு விளக்கம் குடுத்தீங்க. நான் அந்த மாதிரி யோசிக்கல. அது யோசிச்சு பாத்தா எனக்கே அப்புறம் உண்மைன்னு தான் தோணுது. ஏன்னா இத்தனை வருசமா நான் அவங்ககிட்ட தப்பே பண்ணி திட்டு வாங்குனாலும் நான் எதனால அத பண்ணேன். எப்படி பன்னேன்னு சொல்லுவேன். அதுல இருந்து அவங்க பதில் சொல்லுவாங்க. ஆனா இந்த தடவை அவங்ககிட்ட நான் எதையும் அவங்ககிட்ட சொல்லமாட்டேன்னு சொல்லிட்டேன். அதுவே அவங்களுக்கு சங்கடம்தானே. அது ஏன் எனக்கு புரியாம போச்சு. அந்த எதிர்பார்ப்பு கோபத்துல தான் என்கிட்ட இன்னும் எல்லாரும் விலகி இருக்கறது கோபபடறது எல்லாமே பண்றங்களா? அவங்களும் அப்படி என்கிட்ட நடந்துகிட்டு பீல் தான் பண்ராங்க. அதையும் நான் பாக்கிறேன். அப்போ கூட நான் ஏன் இப்டி யோசிக்கல. சரி ஆனா இந்த பிரச்சனையா அப்டி சொல்லவும் முடியாதே. சத்தியம் பண்ணிருக்கேன். மீறி ஏதாவது யாருக்காவது ஆயிடிச்சுனா? சரி இதுக்கு ஒரே வழி நீங்க தான் கேட்கணும். நீங்க கேட்டு அதுக்கப்புறம் இதுவே அவங்ககிட்ட சொல்லி குடும்பம் பிரியமா பாத்துக்கோங்க. பட் நீங்க இப்போ இருக்கற மைண்ட் செட் மாறணும். அதுக்கு ஏதாவது பண்ணனும். என்று தான் அர்ஜுனிடம் பேசி அவர்கள் கல்யாணத்திற்கு திசை திருப்பியது ஆனால் இறுதியில் அவள் கல்யாணத்திற்கு வர முடியாமல் போக ஆதி மீண்டும் பிரச்னையை பற்றி மட்டும் பேசாமல் அதை ஒதுக்கியது, அடுத்து அனு பிரச்சனை யாருடனும் பேசவில்லை ஆதியும் அதிகம் பேசாமல் இருந்தது அபி டெலிவெரி நேரத்தில் நடந்தது. எல்லாமே இருந்தது.

ஆதி அண்ணி என்னால குட்டி பாப்பாக்கு ப்ரோப்லேம் வரும்னு சொல்லிட்டாங்க. நான் அப்டி இல்லேல்ல ஆதி? அபி அண்ணிக்கு என்னை ரொம்ப பிடிக்கும். நந்துவுக்கு முன்னாடி என்கிட்ட பழகும் போதே எனக்கு உன்னை மாதிரியே பொண்ணு வேணும்னு சொல்லிட்டே இருப்பாங்க. நானும் விடுங்க என்னை மாதிரி நானே வளத்தி தரேன்னு சொல்லுவேன். நந்து என்கிட்ட கொடுக்கும்போதும் சரி, இரண்டாவது குழந்தை பொண்ணுன்னு அந்த அளவுக்கு நான் சொல்லும்போது சரி அவங்க சொன்னது உன்னமாதிரியே இருக்கனும். அவளோ பாசமா என்கிட்ட இருந்தவங்கள நான் எந்த அளவுக்கு கோபப்படுத்திருக்கேன். என்ன திட்டிட்டு தனியா போயி அண்ணி அழுகிறத நான் பாத்திருக்கேன். அதனால என் மேல பாசமில்லைனு என்னால சொல்லமுடியாது. ஆனா அவங்க அந்த நேரத்துல அவ்ளோ பீல் பண்றத என்னால பாக்க முடியல அந்த நேரத்துக்கு அவங்களும், பாப்பாவும் மட்டும் தான் எனக்கு முக்கியமா தெரிஞ்சாங்க. அதனால தான் நான் கூட இல்லாட்டியும் தேவையான எல்லா ஏற்பாடும் பண்ணேன். என்ன தான் சமாதானம் சொன்னாலும் என்ன இவ்ளோ வெறுக்க அவங்களால முடியுமான்னு யோசிச்சா என்னால ஏத்துக்க முடியல ஆதி. அதுல உங்களுக்கும் தான் எவ்ளோ கஷ்டம். யாருக்கும் பதில் சொல்லமுடியாம உங்கள அந்த மாதிரி நிக்கவெச்சுட்டேனேன்னு நினைக்க என்னால அங்க இருக்க முடியாம வந்திட்டேன்.

ஆதி எனக்கு என்ன பண்றதுன்னே புரியல. நான் தப்பு பண்ணிட்டேன் விளையாட்டுத்தனமாவே இந்த பிரச்சனையும் முடிச்சிடலாம்னு நினைச்சு எல்லாரோட கோபத்தை அதிகப்படுத்திட்டேன் போல. ஆனா எங்க தப்பு பண்ணேன்னு எனக்கு புரியல ஆதி. என்னை நீங்க நம்புறீங்க, புரிஞ்சுப்பீங்கனு யோசிச்சிட்டு உங்களை சீண்டி விளையாட எனக்கு தோணுச்சு. என்ன பிரச்னைனாலும் நீங்களும் என்னை விட்டு போகமாடீங்க. நானும் உங்கள விட்டு போகமாட்டேனு தெளிவா புரிஞ்சது. சோ வாழ்க்கை முழுக்க நமக்கு டைம் இருக்கு. சண்டை போட்டுக்கிட்டாலும், வம்பிழுத்தாலும் குழப்பிவிட்டு விளையான்டாலும் அப்புறமா சொல்லிக்கலாம் கொஞ்ச நேரம், இல்லை கொஞ்ச நாள் தானேன்னு நான் நினச்சுட்டேன். இந்த கொஞ்ச நாள்ல உங்க மனசு என்னை புரிஞ்சுக்கமுடியாம எவ்வளோ குழப்பயிருக்கிங்கன்னு எனக்கு தோணல ஆதி.. நான் அத்தை உங்கள பத்தி பேசுனதுல இருந்து நெறைய கேட்டு இருக்கேன். எனக்கு உங்கள பத்தி தெரியும், புரியும் ஆனா உங்களுக்கு? என்கூட பழகுனவங்க வளத்தவங்களே என்னை புரிஞ்சுகளெங்கும் போது பாத்து பேசி இரண்டு வாரத்துல நீங்க என்னை புரிஞ்சுக்கணும்னு நான் நினைச்சது தப்புதானே. அதுவும் அதுக்கு முக்கியமா நான் உங்களுக்கு அதுக்கான இடமே கொடுக்காத போது எப்படி உங்களால என்னை புரிஞ்சிக்கமுடியும்.

உங்கள நான் சந்தோசமா பாத்துப்பேன்னு நினச்சு எந்த பிரச்னையும் உங்ககிட்ட வரக்கூடாதுன்னு நினச்சு கடைசில ஒட்டுமொத்த பிரச்னையா நானே வந்துட்டேனா ஆதி. நான் உங்கள நல்லா புரிஞ்சுக்கிட்டேன்னு நினைச்சே உங்கள குழப்பிட்டேன். உங்கள கஷ்டப்படுத்திட்டேன். நீங்க கேட்டீங்கள்ல உன் மேல நான் வெச்சிருக்கற காதலை நம்புறதா? இல்லை என் கண்ணு முன்னாடி நீ அத இல்லேனு காட்டுற விஷயத்தை உன்னை நம்புறதான்னுஉங்கள என்னோட பீகவியர்ஸ் எந்த அளவுக்கு பாதிச்சிருந்தா இப்படி கேட்ருப்பிங்க அப்போவும் சொன்னிங்க உன்னை இப்போவும் திட்டி போக சொல்ல முடில, முழு மனசோட ஏத்துக்கவும் முடிலேன்னு எனக்கு உயிரே போயிடிச்சு. உங்கள இந்த அளவுக்கு யோசிக்க வரைக்கும் இருந்திருக்குன்னா நான் உங்கள அப்போ புரிஞ்சுக்கலேன்னு தானே அர்த்தம். நான் ஏன் ஆதி உங்கள புரிஞ்சுக்காம போனேன்?

உங்களுக்காக தான் எல்லாமே பண்ணேன். ஆனா உண்மையா உங்களுக்கு என்னை தேவைன்னு நான் ஏன் யோசிக்காம போனேன். வீட்ல இருக்கறவங்கள குழப்பி உங்கள குழப்பி, விளையாடி வாழ்க்கையே நானே கெடுத்துகிட்டேன்ல. எனக்கு என் மேல கோபமா வருது. ஆனா நான் என்ன பண்றது. நீங்க என்கூட இருக்கும் போது நான் நானா இருக்கேன் எனக்கு வேற ஆள் கூட இருக்கோம்ங்கிற பீலே இல்லை என்கிட்ட நான் எப்படி நடிக்க முடியும், நான் என்கிட்ட எதுக்கு யோசிச்சு யோசிச்சு எதுனாலும் பண்ணனும் அப்டித்தான் நினச்சேன் உங்ககூட இருந்தா சிரிக்கணும்னு தோணுச்சுனா சிரிப்பேன், அழணும்னா அழுகறேன், கோபம் வந்தா கோபப்படறே, வம்பிழுக்கணும்னா அத பண்ணேன். ஆனா அது எல்லாம் இப்போ எந்த அளவுக்கு கொண்டு வந்து விட்டிச்சு.

இப்போ நான் அந்த உண்மைய சொல்லி திரும்பவும் பழையமாதிரி எல்லாமே மாத்தலாம் தான். ஆனா இவ்ளோ நாள் அப்போ நீங்க எல்லாரும் வருத்தப்பட்டது இல்லேனு ஆகிடுமா? எனக்கு என்ன குறை. அந்த வீடியோ பிரச்சனை இருந்தாலும் என்னை ஏதோ ஒரு மூலைல நம்புனதால தான் வீட்ல இருக்க யாரும் எதுவும் சொல்லல. என் மேல பாசம் இருக்கறதால தான் அவங்க திட்டுனாலும் என்னை வெளில போயி கஷ்டபடுன்னு அனுப்பல. யாருமே என்னை முழுசா தப்பா நினைக்கல. நினைக்கற அளவுக்கு நானே என்னை தப்பா காட்டிகிட்டேன்ல. எவ்ளோ தப்பு பண்ணிட்டேன். அழுது பொழப்பி இப்போ நான் பீல் பண்ணிட்டா எல்லாமே சரி ஆகிடுமா? நான் பண்ணது தப்பு தானே. உங்ககிட்ட நான் சொன்னேன்ல உங்கள யாரு கஷ்டப்படுத்துனாலும் அவங்களுக்கு பனிஷ்மென்ட் இருக்கும் அது நான்னாலும் தான்.. இப்போ உங்கள மட்டுமில்ல ஒட்டு மொத்தமா இரண்டு குடும்பத்தோட பீலிங்க்ஸ்ல விளையாண்டிட்டேன் அதுக்கு எனக்கு தண்டனை வேணும்ல. நான் அழுகவும் மாட்டேன், கோபமும்படமாட்டேன். கடைசிவரைக்கும் உண்மை தெரியாமலே இருக்கட்டும். கொஞ்சம் கொஞ்சமா நடந்த எல்லாமே சேத்தி ஏதோ கோபத்துல எல்லாரும் என்கிட்ட இருந்து விலகி என்னை கஷ்டப்படுத்திட்டாங்க. அவங்கக்கிட்ட இப்போ என் மேல தப்பில்லைன்னு காட்டுனா எல்லாரும் சங்கடம்தான் படுவாங்க. என்ன யூஸ் அதனால. முக்கியமா நீங்க நான் பீல் பண்ணாலே தாங்காம பதறுவீங்க. இந்த விசயத்துல உங்க மேல தப்பே இல்ல. இருந்தாலும் சொல்றத கேட்டு இருக்கலாமோ? அந்த அளவுக்கு அவகிட்ட பேசாம விலகாம இருந்து பீல் பண்ணாம இருந்திருக்கலாமோனு நினச்சு வருத்தப்படுவீங்க. பாதிக்கு மேல தப்பு என்மேல தான். ஆனா நீங்க குற்றஉணர்ச்சில இருக்கறத பீல் பண்றத என்னால தாங்கிக்க முடியாது. இதெல்லாம் அந்த உண்மை தெரிஞ்சா தான.. அது இனிமேல் தெரியவே வேண்டாம்.

பட் நான் உங்கள விட்டு போனாலும் நிம்மதியா இருக்கமாட்டீங்க. இருந்தாலும் இப்டி தான் இருக்கும். எனக்கும் இதுக்கு பதில் கிடைக்கல. அதனால நீங்கதானே என்னை கூட்டிட்டு வந்திங்க. உங்களுக்காகவே நான் இங்க இருக்கேன். இப்போவும் எனக்கு ஏதாவது ஆச்சுன்னா இங்க இருந்து போனேன்னா என்னை விட அதிகமா நீங்க வருத்தப்படுவீங்க. எனக்கு இப்போ இருக்கற ஒரே ஹோப் நீங்க நம்ம லவ் மட்டும் தான். என்னாலையும் உங்கள விட்டு போகமுடியாது ஆதி. .உனக்கு எப்போவுமே நான் தேவபடமாட்டேனான்னு கேட்டீங்க. நான் எப்படி சொல்றது என்னோட எல்லா முடிவும் உங்களா சுத்தி உங்கள பேஸ் பண்ணி தான் இருந்தது. அந்த அளவுக்கு நீங்க எனக்கு முக்கியம்.

லவ் யூ சோ மச். மிஸ் யூ…..

அனைத்தினையும் படித்துமுடிக்க அவனுக்கு கண்கள் கலங்கியது..அது எதற்காக என்று அவனுக்கே தெரியவில்லை. உண்மையாகவே திவி சொன்னது போல குற்ற உணர்ச்சியா? நான் அவகிட்ட பேசுனா அடுத்த நாள்ல இருந்துதான் அவ மொத்தமா இந்த முடிவுக்கே வந்திருக்கா அடுத்து வெறும் மூணு நாள் தான் நினைச்சாலும் அதுக்குள்ள அவ எவ்ளோ விலகி பீல் பண்ணி இதுல நானும் கவனிக்காம இருந்திட்டேனே என்ற வருத்தமா? நான் அவகிட்ட எதிர்பார்த்த காதலை விட அவ எனக்கு அதிகமா குடுக்கிறா அந்த அளவுக்கு லவ் பண்ணிருக்கலேனு சந்தோசமா? பேச்சுக்கு இல்லாம எனக்கு இவளால தான் கஷ்டம் தெரிஞ்சும் அந்த தண்டனையும் அவளுக்கே குடுத்துக்க முடிவு பண்ணிட்டாளே. என எண்ணிக்கொண்டே அவளிடம் கேட்டான் இவ்ளோ யோசிச்ச நீ உன்னோட காதல் எனக்கு காட்டிருந்தாலே இது எல்லா கஷ்ட்டமும் போயிருக்குமே அத ஏதோ கெட்ட கனவா இல்ல அந்த வாழ்க்கை வேற, அது முடிஞ்சதுனு திரும்ப உன் காதலுக்காக உன்கிட்ட சந்தோசமா வந்துடுவேன்னு ஏன் டி உனக்கு புரியல.

என் காதல் ஒண்ணே ஒன்னு வெச்சுகிட்டு இத்தனை பிரச்சனையும் ஒதுக்கிட்டு எனக்காக இங்க இருந்திருக்க. இப்போ உனக்கு என் மேல இருக்கற காதல் அதுவும் இந்த அளவுக்கு தெரிஞ்சப்புறம் திரும்ப எல்லாமே பழைய மாதிரி மாத்திடமாட்டேனா. உன் லவ் எனக்கு போதும் டி. மறுபடியும் பழைய மாதிரி உன்ன நம்ம பேமிலிய எல்லாமே உனக்கு மொத்தமா நீ அசைபட்டமாதிரி திருப்பிதரேன், அவளை இறுக்கிக்கொண்டு உன்னை நான் திரும்ப கொண்டுவந்துடுவேன் தியா என்றான்.

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

Chitrangatha – 25, Chitrangatha – 26Chitrangatha – 25, Chitrangatha – 26

ஹாய் பிரெண்ட்ஸ், சித்ராங்கதாவால் எனக்குக் கிடைத்த நன்மை – தமிழுக்கு சமமாக தெலுகிலும் ஒலிக்கும் கோவக் குரல்கள். வழக்கமாய் திட்டுகள் கோபமூட்ட வேண்டும். ஆனால் உங்களது கோவக் குரல் எனக்கு அன்பு மொழியாகவே கேட்கிறது. இந்த முறை கொஞ்சம் பெரிய பதிவு.

ராஜம் கிருஷ்ணனின் ‘புதிய சிறகுகள்’ – 8ராஜம் கிருஷ்ணனின் ‘புதிய சிறகுகள்’ – 8

சுஜியின் இரண்டு தமக்கைகளும், அண்ணனும் மறுநாள் மாலையில் தான் வருகிறார்கள். பனிக்கட்டிகளை வைத்து உடலைக் கிடத்தியிருக்கிறார்கள். எறும்பு மொய்க்கிறது. வந்ததும் வராததுமாக அவர்கள் கூடிக் கூடி, அந்த வீட்டை விலையாக்குவது பற்றித்தான் பேசுகிறார்கள். அந்த வீடும் சேர்ந்தாற் போலிருந்த இன்னொரு வீடும்,

மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 38மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 38

38 காலம் அப்படியே உறைந்து விடக் கூடாதா என்று சுஜி எண்ணினாள். எண்ணியது எல்லாம் நடந்து விடுமா என்ன? அவள் கிளம்ப வேண்டிய நேரம் நெருங்கவே கிளம்ப ஆரம்பித்தாள். விடியும் முன்பே குளித்துவிட்டு, ஆகாய நீல நிறத்தில் புடவை அணிந்து கொண்டு,