Tamil Madhura கவிதை அர்ச்சனாவின் கவிதை – என்னை அறிவாயோ??!

அர்ச்சனாவின் கவிதை – என்னை அறிவாயோ??!

63917d416e7160f64db9193c7cbcf1f9
தூரத்து நிலவு கூட மனமிரங்கி
தரை சேர்ந்து என்னோடு துணை நடக்கும்
துப்பட்டா புது மலரே நீ மட்டும்
காத்திருக்கும் எனை கடந்து போவதென்ன?

தினம் நடக்கும் ஓராயிரம் ஒத்திகை
கண்ணாடியும் கை நீண்டு எனை அணைக்கும்
கருணை இல்லா பெண் பூவே நீ
கண்கொண்டு எனை பார்த்தால் என்ன?

வணக்கங்களோடு வாழ்த்துக்களும் கூறி
தினமும் குறுஞ்செய்தியில் உனை துரத்த
பன்னீர்ப்பூ விரல் கொண்டு நீயும்
ஒரு ‘மின்’நகை பகிர்ந்தால் என்ன?

நேற்று கடலோரம் காதல் நட்டவர்
இன்று மணமுடித்து தொட்டில் ஆட்டுகிறார்
ஆண்டுகள் ஆறு ஓடியும் நீ
என் பெயராவது அறிந்துகொண்டால் என்ன?

– அர்ச்சனா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

பேதையின் பிதற்றல் – (கவிதை)பேதையின் பிதற்றல் – (கவிதை)

  பேதையின் பிதற்றலில் பெண் மனதின் பொருள்   எப்போது? எப்படி? என எதிர்பார்த்த தருணத்தை தர கனவை நனவாக்க வருபவனே உன்னுடனான என் முதல் சந்திப்பு எப்படி இருக்கும்? உன் உருவத்தைப் பருகும் வகையில் உன்னைப் பார்ப்பேனோ? உன்னைக் கண்டதால்

அர்ச்சனாவின் கவிதை – முத்தம் தந்திடு!!அர்ச்சனாவின் கவிதை – முத்தம் தந்திடு!!

முத்தம் தந்திடு!!   முட்களோடு சொற்கள் செய்து காயம் தந்தாய் – எனது கண்ணீரும் சிகப்பாய் மாறி சிறகு கிழிந்ததே! தென்றல் எந்தன் வாசல் வர காத்து நிற்கிறேன் – இன்றோ  புயல் வீசி என் கூடு சிதைய பார்த்திருக்கிறேன்!! மருகி

கமலா ப்ரியாவின் “தேவை” கவிதைகமலா ப்ரியாவின் “தேவை” கவிதை

தேவை இந்த உலகம் வாய்ப்புகளால் சூழப்பட்டது இங்கே யாரும் கண்ணீர் விட்டு கரைந்து போக அவசியமில்லை போராடத் துணிந்த எவருக்குமே பிரகாசமான எதிர்காலம் படைக்கப்பட்டிருக்கிறது தகுதியுள்ள எவருக்கும் உதவிக்கு நீள்வதற்கு கரங்கள் ஆயிரம் காத்திருக்கின்றன அத்தனைக்கும் தேவை “நான் வாழ வேண்டும்;