Tamil Madhura கவிதை தேய்ந்துபோன கனவுகள் – கவிதை

தேய்ந்துபோன கனவுகள் – கவிதை

Related image

 

தேய்ந்துபோன கனவுகள்

வானவில்லை ரசித்திருந்தேன்

வண்ணத்துணிகள் பெற்றேன் வெளுப்பதற்கு..

வயிற்றுப்பசியார விழைந்தேன்

பற்றுப் பாத்திரங்கள் கிடைத்தன தேய்ப்பதற்கு..

 

நான் செய்வதும் அகழ்வுதான்; குடைந்தெடுப்பது

கற்சிலைகள் அல்ல கருங்கற்கள்..

அருகருகே அமர்ந்து கல்வி கற்க அனுமதிக்கப்படவில்லை

அதனால் அடுக்கடுக்காய் வரிசைப்படுத்துகிறேன் தீக்குச்சிகளை..

 

சிலேட்டைத் துடைக்க வேண்டிய கரங்கள் எனது

தண்ணீர் ஊற்றி துடைப்பதோ உணவக மேசையை..

முதுகுச்சுமையின் அனுபவம் உணர வேண்டினேன்

வந்தமர்ந்தன தலையில் பாரமாய் செங்கற்கள்..

 

புத்தகங்கள் கையில் எடுத்தேன் – படிப்பதற்கா?

தூசி தட்டி அலமாரியில் அடுக்குவதற்கு..

கணக்கில் பெருக்கல் எப்படியென்றேன்

குப்பைகளின் கூட்டல் கற்றுக் கொண்டேன்..

 

பளிங்காகும்படி துடைத்த தரையில்

என் பிம்பம் கண்டேன்

தோய்ந்து போன என் உருவில் நான் கண்டது

தேய்ந்து போன என் கனவுகளையே..

 

வறுமையின் நிறம் சிவப்பாம் – எனில்

வறுமையின் சின்னம் கண்ணீர்த்துளிகளோ?

பணத்தின் வாசனையும் அறிய முடிந்தது

துயரமும் சற்று தீர்ந்தது –

கரும்பலகையினுடனான எனது நட்பு முறிக்கப்பட்டதால்..

 

 

— சுரபி மூர்த்தி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

அர்ச்சனாவின் ‘என் இமைகளில்’ (கவிதை)அர்ச்சனாவின் ‘என் இமைகளில்’ (கவிதை)

தேடித் தேடிப் பார்க்கிறேன் தொலைந்துவிட்ட என்னை நிச்சயம் முயன்று முத்தமிடுவேன் உனைக் காட்டிய கண்ணை தெவிட்டாமல் பார்த்திருப்பேன் என் விழி குடிக்கும் உன்னை கண்ணாளா  உன் கண்ணசைவில் துளிர்க்கும் எந்தன் பெண்மை!!   காட்சிகள் அனைத்தும் திரிந்து நீ மட்டுமே நிற்க,

அர்ச்சனாவின் ‘நீ – நான்’ (கவிதை)அர்ச்சனாவின் ‘நீ – நான்’ (கவிதை)

நம் தளத்தில் தனது அழகான கவிதை மூலம் கால் பதித்திருக்கும் அர்ச்சனா அவர்களை வரவேற்கிறோம். அவரது கவிதைகளைப் படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். அன்புடன், தமிழ் மதுரா     நீ – நான் கவிதை ஒன்று

கமலா ப்ரியாவின் “தேவை” கவிதைகமலா ப்ரியாவின் “தேவை” கவிதை

தேவை இந்த உலகம் வாய்ப்புகளால் சூழப்பட்டது இங்கே யாரும் கண்ணீர் விட்டு கரைந்து போக அவசியமில்லை போராடத் துணிந்த எவருக்குமே பிரகாசமான எதிர்காலம் படைக்கப்பட்டிருக்கிறது தகுதியுள்ள எவருக்கும் உதவிக்கு நீள்வதற்கு கரங்கள் ஆயிரம் காத்திருக்கின்றன அத்தனைக்கும் தேவை “நான் வாழ வேண்டும்;