Tamil Madhura கவிதை அர்ச்சனாவின் ‘நீ – நான்’ (கவிதை)

அர்ச்சனாவின் ‘நீ – நான்’ (கவிதை)

நம் தளத்தில் தனது அழகான கவிதை மூலம் கால் பதித்திருக்கும் அர்ச்சனா அவர்களை வரவேற்கிறோம். அவரது கவிதைகளைப் படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அன்புடன்,

தமிழ் மதுரா

 

 

நீ – நான்

கவிதை ஒன்று கேட்டால்

என் பெயர் சொல்லும்

முட்டாள் கவிஞன் நீ!!

முத்தங்கள் கேட்டால்

கன்னங்களைக் கடிக்கும்

வளர்ந்த குழந்தை நான்!!

ஆசைகளை மறைத்துக்கொண்டு

அரிஸ்டாட்டில் பேசும்

அறிவுக்களஞ்சியம் நீ!!

அனைத்தும் அறிந்திருந்தும்

உன் பேச்சுக்கு தலையசைக்கும்

தஞ்சை பொம்மை நான்!!

உரசலும் தீண்டலும்

கேட்காமலே அள்ளிக்கொடுக்கும்

கலியுகக் கர்ணன் நீ!!

சீண்டல்கள் பிடித்தாலும்

கோபப் பார்வை வீசும்

குடும்பக் குத்துவிளக்கு நான்!!

காதலை நெஞ்சில் சுமந்து

கனவுகளைக் கண்ணில் சுமக்கும்

என் எதிர்காலம் நீ!!

வாழ்வதன் அர்த்தமாய்

வாழ்க்கையின் நோக்கமாய்

உன் நிகழ்காலம் நான்!!

— அர்ச்சனா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ப்ரியவதனாவின் ‘நேசம் மறந்ததில்லை’ – கவிதைப்ரியவதனாவின் ‘நேசம் மறந்ததில்லை’ – கவிதை

வணக்கம் தோழமைகளே! நமது தளத்திற்கு தனது அழகான காதல் கவிதை ஒன்றுடன் வந்திருக்கிறார் எழுத்தாளர் ப்ரியவதனா. நிழலாய் தொடரும் நினைவுகளைக் கொண்ட காதல் மனம் என்ன சொல்கிறது என்று படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே.  அன்புடன்  தமிழ் மதுரா.

பேதையின் பிதற்றல் – (கவிதை)பேதையின் பிதற்றல் – (கவிதை)

  பேதையின் பிதற்றலில் பெண் மனதின் பொருள்   எப்போது? எப்படி? என எதிர்பார்த்த தருணத்தை தர கனவை நனவாக்க வருபவனே உன்னுடனான என் முதல் சந்திப்பு எப்படி இருக்கும்? உன் உருவத்தைப் பருகும் வகையில் உன்னைப் பார்ப்பேனோ? உன்னைக் கண்டதால்

மலையின் காதல் – கவிதைமலையின் காதல் – கவிதை

மலையின் காதல் தன் கதிரவனைக் காணாமல் கண் மூடியவளே! கோபத்தால் பனிக்குள் மூழ்கியவளே! உன் காதலை உணராமல் எங்கே சென்றான் அவன்! உன் முழுமையான மலை முகத்தை வெளிக்கொணர புன்னகையோடு காலையில் சூரியன் வெளிவருவான் உன்னை சூழ்ந்துள்ள கருமேகங்களை விலக்கி உன்னிடத்தில்