Day: September 25, 2019

பரணர் கேட்ட பரிசு – புறநானூற்றுச் சிறுகதைபரணர் கேட்ட பரிசு – புறநானூற்றுச் சிறுகதை

  பரணர் அந்தச் செய்தியைக் கேள்விப்பட்டபோது அவரால் அதை நம்பவே முடியவில்லை. வேறு யாரேனும் அப்படிச் செய்திருந்தால்கூடக் கவலை இல்லை. கேட்பவர்களும் தலை குனியத் தக்க அந்தக் காரியத்தைப் பேகன் செய்துவிட்டான் என்கிறார்கள். செய்தியின் வாசகங்களைப் பொய் யென்பதா? அல்லது அந்தச்