Tamil Madhura கவிதை அர்ச்சனாவின் ‘காதல் என்பது இதுதானோ’ (கவிதை)

அர்ச்சனாவின் ‘காதல் என்பது இதுதானோ’ (கவிதை)

என் காதல் வானிலே

இரவிலும் வானவில் தோன்றுதே

என்னுள் பூத்த பூவொன்று

வாழ்வில் வாசம் வீசுதே

உள்ளங்கையில் புதிதாகக்

காதல் ரேகையும் தோன்றுதே

வெயிலிலும் ரகசியமாய்

மழைச்சாரல் என்னை நனைக்குதே

உன்னிடம் மட்டுமே சொல்லிட

கதைகள் கோடி உள்ளதே

உனக்காக மட்டுமே வாழ்ந்திட

உயிரும் உறுதி கொண்டதே

உன்னைக் காணாத பொழுதுகளில்

காதல் என்னுள் பெருகுதே

என் அருகே நீ இருந்தால்

தயக்கங்கள் தடமின்றி மறையுதே

நாம் சேர்ந்து போகும் பாதை

கண்முன்னே விரியுதே

உந்தன் எந்தன் நிழல் கூட

கைக் கோர்த்து நடக்குதே

சாலையோர மரங்களெல்லாம்

பூக்கள் தூவி வாழ்த்துதே

இதுவரைக் கண்டிராத அலையொன்று

என் இதயத்தை வருடிச் சென்றதே

காதல் என்பது இதுதானோ!

காற்றோடு கனவில் மிதப்பேனோ

உன் நினைவுகளை மாலையாக்கி

என் உயிருக்குச் சூட்டி மகிழ்வேனோ!!

— அர்ச்சனா

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

காதல் மொழி ❤️ – (கவிதை)காதல் மொழி ❤️ – (கவிதை)

கடத்திச்செல்லும் நின் குறுகுறு பார்வையில் இழையோடும் ஓராயிரம் காதல் மொழி… உன் பார்வையின் காந்தமா…பார்வை உணர்த்தும் காதலின்  காந்தமா விடை அறியா மனது… உன் நினைவுகள் குறுக்கிடும் தருணமெல்லாம் தானாக என் இதழ் நீளும் புன்னகை உணர்த்தும் உன் மீதான காதலை…

தேய்ந்துபோன கனவுகள் – கவிதைதேய்ந்துபோன கனவுகள் – கவிதை

  தேய்ந்துபோன கனவுகள் வானவில்லை ரசித்திருந்தேன் வண்ணத்துணிகள் பெற்றேன் வெளுப்பதற்கு.. வயிற்றுப்பசியார விழைந்தேன் பற்றுப் பாத்திரங்கள் கிடைத்தன தேய்ப்பதற்கு..   நான் செய்வதும் அகழ்வுதான்; குடைந்தெடுப்பது கற்சிலைகள் அல்ல கருங்கற்கள்.. அருகருகே அமர்ந்து கல்வி கற்க அனுமதிக்கப்படவில்லை அதனால் அடுக்கடுக்காய் வரிசைப்படுத்துகிறேன்