Tamil Madhura குறுநாவல்,மோகன் கிருட்டிணமூர்த்தி காணாமல் போன பக்கங்கள் – குறுநாவல்

காணாமல் போன பக்கங்கள் – குறுநாவல்

வணக்கம் தோழமைகளே,

எழுத்தாளர் திரு. மோகன் கிருட்டிணமூர்த்தி அவர்கள்  ‘காணாமல் போன பக்கங்கள்’ குறுநாவல் மூலம் நம்மை மீண்டும் சந்திக்க வந்திருக்கிறார்.

கதையில்  மணி ஒரு வித்யாசமான எழுத்தாளர். அவர் எழுதிய நாவலைப் பதிப்பகத்துக்கு எடுத்து செல்லும் வழியில் நடக்கும் ஒரு சிறு விபத்தின் விளைவால் முப்பது பக்கங்களை காணாமல் போகின்றன. பதிப்பகத்தார் காணாமல் போன பக்கத்தில் விடுபட்ட பகுதியை  வாசகர்களின் கற்பனைத்திறத்தால் எழுத சொல்கின்றனர். சரியாக எழுதியவருக்குப் பரிசாக மணியுடன் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்கின்றனர்.

வாசகர்களிடமிருந்து வந்த போட்டிக்க்கு வந்த  கதைகளைப் படிக்கும் மணி வியப்பின் எல்லைக்கே சென்று விடுகிறார். ஏனென்றால் காணாமல் போன பக்கங்களிலிருந்த கதையை வார்த்தை மாறாமல் பிரதி எடுத்தாற்போல வாசுகி எனும் பெண் ஒருவர் எழுதி அனுப்புகிறாள்.

பக்கங்களை வாசுகியே திருடியிருப்பாளோ என்ற சந்தேகத்திற்கும் இடமின்றி அவளோ சென்னையில் அந்த சமயத்தில் இல்லை. ஆனால் மணியின் தீவிர வாசகி. தீவிரம் அதிகமாகி மணி எழுதியதை அவர் எழுதும் சமயத்தில் வார்த்தை மாறாமல் எழுத ஆரம்பித்து விடுகிறார். அதன் பின்…

இதற்கு மேல் நீங்களேதான் படிக்க வேண்டும். படிங்க படித்துவிட்டு உங்க கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

[scribd id=377665869 key=key-67P0uq1BwPyMgHbu9CCr mode=scroll]

அன்புடன்,

தமிழ் மதுரா

3 thoughts on “காணாமல் போன பக்கங்கள் – குறுநாவல்”

  1. நன்றாக இருந்தது. ஆனால் மூன்றாவது முடிவே ஏற்க கூடியதாக இருந்தது. அருணா கொலைக் காரணம் தெரியாதது சிறு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. வாழ்த்துக்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

மேற்கே செல்லும் விமானங்கள் – 8மேற்கே செல்லும் விமானங்கள் – 8

வணக்கம் பிரெண்ட்ஸ், இன்றைய பதிவில் ‘சுக்லாம் பரதம்’ சொல்லி அனைவரின் மனதிலும் இடம் பிடிக்கும் சிலியா அலைஸ் சிந்து. கடவுள் கொன்று உணவாய்த் தின்று மிருகம் வளர்க்கும் ராஜ். இது எங்கு சென்று முடியுமோ என்ற கேள்வியுடன் நாம் [scribd id=373552361

மேற்கே செல்லும் விமானங்கள் – 9மேற்கே செல்லும் விமானங்கள் – 9

ஹாய் பிரெண்ட்ஸ், இன்றைய பதிவில்… சென்னையிலிருந்து அனைவரின் மனதையும் வென்று  தன் ராமனைப் பார்க்க ஆசையுடன் வரும் சிலியாவால் அவள் ராமனைக் கைபிடிக்க முடிந்ததா? ராஜின் செயலைக் கண்டு பதைபதைக்கும் நம் மனது சிலியாவுக்கு ஆதரவாக நிற்பது இயல்பே. தனது பாதையை

காஞ்சனை – 1காஞ்சனை – 1

காஞ்சனை –புதுமைப்பித்தன் அன்று இரவு முழுவதும் எனக்குத் தூக்கம் பிடிக்கவேயில்லை. காரணம் என்னவென்று சொல்ல முடியவில்லை. மனசுக்குக் கஷ்டமும் இல்லை, அளவுக்கு மிஞ்சிய இன்பமும் இல்லை, இந்த மாதிரித் தூக்கம் பிடிக்காமல் இருக்க. எல்லோரையும் போலத்தான் நானும். ஆனால் என்னுடைய தொழில்