Tamil Madhura

அர்ச்சனாவின் ‘என் இமைகளில்’ (கவிதை)

தேடித் தேடிப் பார்க்கிறேன்

தொலைந்துவிட்ட என்னை

நிச்சயம் முயன்று முத்தமிடுவேன்

உனைக் காட்டிய கண்ணை

தெவிட்டாமல் பார்த்திருப்பேன்

என் விழி குடிக்கும் உன்னை

கண்ணாளா  உன் கண்ணசைவில்

துளிர்க்கும் எந்தன் பெண்மை!!

 

காட்சிகள் அனைத்தும் திரிந்து

நீ மட்டுமே நிற்க,

காதல் தழலில் கசங்குகிறேன்

நான் என்ன செய்ய?!!

கண்ணுள்ளே கனவில் மட்டும்

வந்துபோவதை நிறுத்து

என்னை உனதாக்கிக்கொள்

என் இமைகளில் முத்தம் கொடுத்து!!!

— அர்ச்சனா