Tamil Madhura

பழனி என்னும் – சூலமங்கலம் சகோதரிகள் பாடல்

 

https://youtu.be/1iN7km4Ar98

 

பழனி என்னும் ஊரிலே
பழனி என்ற பேரிலே
பவனி வந்தான் தேரிலே
பலனும் தந்தான் நேரிலே – முருகன்
பலனும் தந்தான் நேரிலே

பழமுதிரும் சோலையிலே
பால்காவடி ஆடி வர

தணிகைமலைத் தென்றலிலே
பன்னீர்க் காவடி ஆடிவர

சாமிமலைக் கோயிலிலே
சக்கரைக் காவடி ஆடிவர

செந்தூரின் வாசலிலே
சந்தனக் காவடி ஆடிவர

குமரன்
பழனி என்னும் ஊரிலே

பழனி என்ற பேரிலே

பரங்குன்றில் மலையோரம்
சேவற்கொடி ஆடிவர
குன்றக்குடியில் எந்நாளும்
வண்ணமயிலும் ஆடிவர
மயிலத்தின் மலைமேலே
மணியோசை முழங்கிவர
விராலிமலை மேலிருந்து
வீரவேலும் வெற்றிபெற
கந்தன்
பழனி என்னும் ஊரிலே

பழனி என்ற பேரிலே

பவனி வந்தான் தேரிலே
பலனும் தந்தான் நேரிலே – முருகன்
பலனும் தந்தான் நேரிலே