
தஞ்சம் வரவா?!!
விழியைத் திருப்பி என்னைப் பாரடா
எனை அள்ளி உன்தன் மனதுள் ஊற்றடா
உலகத்து மொழிகலெல்லாம் நமக்கு வேண்டுமோ?
என் மனதை உரைத்திடும் மொழியும் இருக்குமோ?
எனை அள்ளி உன்தன் மனதுள் ஊற்றடா
உலகத்து மொழிகலெல்லாம் நமக்கு வேண்டுமோ?
என் மனதை உரைத்திடும் மொழியும் இருக்குமோ?
சிறகுகள் விரித்து நிற்கிறேன் பறந்திட
வானவில்லில் காதல் வண்ணம் சேர்த்திட
மலர்களைக் கையேந்தி என்மீது தூவடா
வளர்பிறை கொண்டு ஊஞ்சலும் செய்யடா
ஆலமரமாகிய காதலைத் தருகிறேன்
ஆணிவேராகி உயிரை சுரந்திடு
ஆலங்கட்டிகளைத் தூவிச் செல்லாதே
காதல் குமிழிகளை உடைத்துப் போகாதே
அரை நிறைவு சித்திரம் நான்தானோ?!
விரல் தூரிகை எனக்காகத் தாராயோ?!
பகல் நிலவு நான்தானே தெரியாதோ?!
உன் கனவுகளில் உலவிட நான் வரலாமோ??!!
நெஞ்சக்கதவைத் திறந்து எட்டிப்பார்த்திடு
வஞ்சி எந்தன் முகத்தை அங்கே தேடிடு
நெஞ்சம் கொண்ட காதலை உணர்ந்திடு
தஞ்சம் வர தவிப்பவளின் கைக்கோர்த்திடு!!
— அர்ச்சனா