Tamil Madhura

புதுமை பெண்ணின் மாற்றம் – (கவிதை)

புதுமை பெண்ணின் மாற்றம்

பாரதி கண்ட புதுமை பெண்ணாய் வாழ்பவள்
பாரதியின் பொன்மொழி படி நடப்பவள்
உன்னைக் கண்டு தலைகுனியும் போதும்
உன் கண்களை தவிர்க்கும் போதும்
மட்டும் மறக்கிறேன்
நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும்

~ஸ்ரீ!!~