வணக்கம் பிரெண்ட்ஸ்,
எப்படி இருக்கிங்க? போன பகுதிக்கு கமெண்ட்ஸ் தந்த மற்றும் லைக்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றி. இந்தப் பகுதியோடு ஆதிரன் சந்திரிகை கதை முடிகிறது. இரண்டு பகுதிகளையும் சேர்த்து சற்றே பெரிய பதிவாகத் தந்திருக்கிறேன்.
வீட்டில் அம்மாக்களைப் பார்த்திங்கன்னா அழகாய் சாப்பாடு சமைச்சு பரிமாறி இருப்பாங்க. காலைல இருந்து கரெண்ட் இருந்திருக்காது. அதனால் அம்மியில் மசாலா அரைச்சிருப்பாங்க. குடிக்கத் தண்ணி இருந்திருக்காது. எங்கிருந்தோ வாங்கிட்டு வந்திருப்பாங்க. அவங்க பட்ட சிரமங்கள் எதுவும் சாப்பிடும் நமக்குத் தெரியாது. அவங்களும் நம்ம முகத்தில் தெரிந்த திருப்தியைப் பார்த்தே அவர்கள் பட்ட சிரமங்களை எல்லாம் மறந்துவிடுவார்கள். அதைப் போலத்தான் நாங்களும். மற்ற அலுவல்களுக்கு மத்தியில் நேரம் ஒதுக்கி ஆர்வமாய் எழுதுகிறோம். நீங்கள் படிக்கிறீர்கள் என்று வியூஸில் தெரிகிறது. இருந்தாலும் வாசகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தோமோ என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் எங்களுக்கும் நிறைய உண்டு.
இனி பதிவுக்கு செல்வோம். படித்துவிட்டு முதல் பகுதியைப் பற்றி, ஆதிரன் சந்திரிகை பற்றி உங்கள் கருத்தினை பகிர்ந்து கொள்ளுங்கள்.
அடுத்த பகுதியில் மறுபடியும் ஆத்ரேயனும் சந்த்ரிமாவும் வருகிறார்கள்.
அன்புடன்,
தமிழ் மதுரா