இப்படி அது பல முறை ஊளையிட்டுப் புலம்பிற்று. அந்தப் புலம்பல் எப்படியோ அந்தப் பக்கமாகத் தற்செயலாக மூன்றாம் நாள் மாலையில் சென்ற ஒரு துறவியின் காதில் விழுந்துவிட்டது. அவர் சட்டென்று நின்று உற்றுக் கேட்டார். மறுபடியும் அந்த வேதனைக் குரல் கேட்டது.
ஒரு காலத்தில் மிகவும் சக்திவாய்ந்த ஒரு ராஜா இருந்தார். காட்டு மிருகங்கள் மற்றும் விலங்குகள் மீது அவருக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது. அந்த நாட்டில் வசித்த ஆமை ஒன்று அனைத்து மிருகங்களுக்கும் மனிதர்களுக்கும் புத்திசாலித்தனமாக பார்க்கப்பட்டது. ராஜாவுக்கு எக்பென்யோன் என்ற மகன்
அக்குரல் அடங்கிய பிறகும் மலைச் சாரலிலே எதிரொலி வெகுநேரம் வரையிலும் கேட்டுக்கொண்டே இருந்தது. அந்தக் குரலைக் கேட்டதும் கானகமே கொஞ்ச நேரம் பயந்து மெளனமாக இருந்தது போலத் தோன்றிற்று. அந்தக் குரலைக் கேட்டு எல்லாப் பிராணிகளும் திகைத்துப்போய் ஊமையாகி விட்டனவோ என்னவோ?