Tamil Madhura சிறுகதைகள் அசோகர் கதைகள் 3 – ஆசிரியர் பாவலர் நாரா. நாச்சியப்பன்

அசோகர் கதைகள் 3 – ஆசிரியர் பாவலர் நாரா. நாச்சியப்பன்

கதை மூன்று – அன்பு வளர்க்கும் அண்ணல்

 

    • அந்தக் காடு நல்ல அடர்த்தியான காடு, கங்கை நதிக் கரையிலே உள்ள காடு வேறு எப்படியிருக்கும்! வானுறவோங்கி வளர்ந்ததோடு நெருங்கி அடர்த்திருந்த மரங்கள், அந்தக் காட்டில் பகலவன் ஒளி பாயாமல் செய்தன; ஒரே இருட்டு மயமாகத் தோன்றும்படி செய்தன. .

 

    • அந்தகாரம் நிறைந்த அந்தக் காட்டிலே, அதன் தன்மைக்கு ஏற்பவே பல கொடிய மிருகங்கள் நிறைந்திருந்தன. அந்தக் காட்டுப் பாதையில் கொள்ளைக்காரர்கள் கூடப் போகப் பயப்படுவார்கள். அவர்கள் அங்கே போகவேண்டிய வேலையே இல்லை. யாராவது மக்கள் போகும் இடமாக இருந்தால்தானே அவர்களுக்கு அங்கே வேலையிருக்கும்!

 

    • இதற்காக அந்தக் காட்டை மனித நடமாட்டமே இல்லாத காடு என்று ஒதுக்கிவிட முடியாது. அங்கே மனித நடமாட்டமும் இருக்கத்தான் செய்தது. எப்படி யென்றால், இளவரசர்களும், வேட்டை வீரர்களும் போரில்லாத நாட்களிலே தங்கள் வீர விளையாட்டுக்களை நடத்திப் பார்க்க அங்கேதான் போவார்கள்.

 

    • சீறிப் பாயும் சிங்கத்தின் வாயைப் பிளக்க வீரவாளை எப்படி வீச வேண்டும்? பதுங்கியிருந்து பாயும் புலியை ஒதுங்கியிருந்து அம்பெய்து உயிரைப் போக்குவது எப்படி? காட்டெருதுக்குச் சினத்தை மூட்டி, அதன் ஓட்டத்தில் வேகத்தைக் கூட்டி, வேலெய்து, விலாப்புறத்தைப் புண்ணாக்குவதெப்படி? கோட்டை வாயிலிலே கட்டிவைக்க, தனித்து வரும் யானையைப் பிடித்துவருவது எப்படி ? அரண்டு மிரண்டு, இருண்டு கிடக்கும் புதர்களின் பின்னே பதுங்கியிருக்கும் மானினங்களைக் கலைத்துவிட்டு அவை பயந்து பாய்ந்தோடும் வேகத்தோடு போட்டி போட்டுச் செல்லும்படி காணிமுத்து அம்பெய்து அவற்றை வீழ்த்துவது எப்படி? இப்படிப்பட்ட விளையாட்டுக்களுக்காக அங்கே வீரர்கள் வருவார்கள்.

 

    • அப்படிப்பட்ட வீரர்களிலே ஒருவன்தான் காசி இளவரசன் ஈசுவர நாதன். இளவரசன் ஈசுவர நாதன் கம்பீரமான தோற்றமுடையவன். வீரமும் ஆண்மையும் மிக்குடையவன்.

 

    • காசி அப்போது மாமன்னர் அசோகரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. காசி மன்னனை அசோகர் தம் அரசப் பிரதிநிதியாக நியமித்திருந்தார். அசோகர் தம் கீழ் உள்ள அரசர்களை, என்றும் தாழ்வாக மதித்ததில்லை. அவருடைய வாழ்விலே புனிதமான மாற்றம் ஏற்படுவதற்கு முன்புகூட, தம்மிடம் கப்பம் கட்டிவரும் சிற்றரசர்களை அவர் கொடுமைப் படுத்தியதோ, இழிவாக நடத்தியதோ கிடையாது. அசோகர் புதிதாகப் போருக்கு எழுந்ததில்லை; அவருடைய முன்னேர்கள் வீரப் போரிட்டுச் சேர்த்த நாடுகளை அவர் சிதறிப்போகாமல் திறமையாகத் தம் நேரிய ஆட் சியில் பிணைத்து வைத்திருந்தார்.

 

    • காசியும் அவரால் வெல்லப்பட்டதல்ல. ஈசுவர நாதனுடைய பாட்டன் இறந்தபின், அசோகர் அவனுடைய தங்தையைத் தம் சிற்றரசராக ஏற்றுக்கொண்டு, தம் அரசப் பிரதிநிதியாக அதிகாரம் கொடுத்துக் காசி நாட்டின் ஆட்சியை அவர் கையில் ஒப்படைத்திருந்தார். ஈசுவரநாதனின் தந்தையும் அசோகரிடம் விசுவாசமாக நடந்துகொண்டார். ஆனால் ஈசுவரநாதன் விவகாரம் அப்படிப்பட்டதல்ல.

 

    • அரச பரம்பரையிலே பிறந்த ஈசுவரகாதன் தீவிரமான சுதந்திர உணர்ச்சியுள்ளவன். அத்தோடு அவனது இளமைப் பருவம் அவனுக்குச் சுதந்திர ஆவேசத்தையே ஊட்டியிருக்தது என்று சொல்லவேண்டும். அவன் மனத்துக்குள்ளேயே தன் தந்தையின் போக்கை வெறுத்தான்.

 

    • தன் பாட்டன்தான் போரிலே தோற்றான் என்றால், தக்தை ஏன் தன் ஆண்மையைக் காத்துக்கொண்டிருக்கக் கூடாது? ஏன், தன் நாட்டைப் போரிட்டு மீட்டுக்கொண்டிருக்கக்கூடாது?-என்று அவன் மனத்திற்குள்ளேயே துடிப்பான். தன் காலத்திலாவது மவுரியர்களின் ஆட்சியினின்றும் காசியை மீட்டுவிட வேண்டும் என்ற எண்ணம் அவன் மனத்திற்குள்ளே கருவாகி உருவாகி வளர்ந்து கொண்டிருந்தது.

 

    • காசி இளவரசன் ஈசுவரதாதன் தன் தோள்வலியைப் பெருக்கிக் கொள்வதற்காகவும், அரசியல் முறைகளையும், இராஜதந்திரக் கோட்பாடுகளையும் அறிந்துகொள்வதற்காகவும் தீவிரமாக முயன்றுவந்தான். அவனுடைய ஆர்வத்தையும் வேட்கையையும் கண்ட அவனுடைய தந்தை அவனுக்குப் பெரும் பொறுப்புக்களைக் கொடுத்துப் பாதி அரசாங்க வேலைகளை அவனைக்கொண்டே முடித்துக் கொண்டார்.

 

    • அரசாங்க வேலைகள் இல்லாத ஓய்வுநேரத்திலே ஈசுவர நாதனையும் அவனுடைய தோழர்களையும் வேட்டைக் காட்டிலேதான் பார்க்கலாம்.

 

    • அன்று ஒரு நாள் வழக்கம்போல வேட்டைக் காட்டுக்கு ஈசுவரனாதனும் தோழர்களும் சென்றிருந்தனர். வழக்கத் திற்கு மாருக அன்று ஒரு பயங்கர நிகழ்ச்சி நடந்தது.

 

    • ஈசுவரகாதனுக்கு நேர் எதிராக ஒரு சிங்கம் வந்து விட்டது.

 

    • கூட வந்த தோழர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்று விட்டார்கள். இளவரசனை விட்டு விட்டு ஓடுவதா? அப்படியே ஒடுவதென்றாலும் அதற்குக் கூட அச்சத்தால் அவர்கள் கால்கள் நகரவில்லை. ஈசுவர நாதனும் சிங்கமும் நேருக்கு நேரே நின்றார்கள்.

 

    • அந்தச் சிங்கம் மிகுந்த பசியோடு இரை தேடிக் கொண்டு புறப்பட்டு வந்திருந்ததுபோலும். வாலைத் தூக்கிக் கொண்டு, எதிரே நின்ற ஈசுவரநாதனை நோக்கிப் பாய்ந்து வந்தது. ஈசுவரநாதன் இமை கொடிக்கும் நேரத் திற்குள்ளாக எதிர்த்துப் போரிட ஆயத்தமாகிவிட்டான். வாளை உருவிக் கொண்டு சிங்கத்தை எதிர்த்துத் தாக்கி னான். அது தன்மீது பாய்ந்தபோது சட்டென்று விலகிக் கொண்டான். பாய்ந்த வேகத்தில் அது படீரென்று தரையில் விழுந்தது. அது திரும்ப எழுவதற்குள் ஈசுவரநாதன் அதன் முதுகின் மேல் பாய்ந்து விலாவில் தன் வாளைப் பாய்ச்சி விட்டான். மிகுந்த ஆரவாரத்தோடு சிங்கம் இளவரசன் பக்கமாகத் திரும்பியது. அதன் விலாவில் பாய்ந்த வாளை உருவிச் சுழற்றிச் சுழற்றி அதன் முகத்தில் பல காயங்களை உண்டாக்கினான் இளவரசன். கடைசியில் சிங்கம் வாயைப் பிளந்து கொண்டு அவனைக் கடித்துக் குதறிவிட முன் வந்தது. தன் வாளை அதன் தொண்டைக் குழிக்குள் பாய்ச்சிக் கொன்று விட்டான் ஈசுவர நாதன்.

 

    • தோழர்கள் ஆரவார முழக்கங்கள் எழுப்பிக் கொண்டு ஈசுவர காதனைச் சூழ்ந்து கொண்டார்கள். தனியொருவனாக நின்று சிங்கத்துடன் நேருக்கு நேர் போராடி அதைக் கொன்றொழித்த அவன் வீரத்தைப் பலபடப் பாராட்டினர்கள். இரண்டு வீரர்கள் அந்தச் சிங்கத்தை ஒரு மரக் கொம்பிலே தொங்கவிட்டுத் தங்கள் தோள்களிலே அந்த மரக்கொம்பைத் தாங்கிக் கொண்டார்கள். வெற்றிக் களிப்போடு அவர்கள் நகர் நோக்கித் திரும்பினார்கள்.

 

    • திரும்பும் வழியில், அவர்கள் வரும் ஓசை கேட்டுப் புதருக்குள்ளே ஒளிந்திருத்த மான் ஒன்று தப்பி ஓடுவதற்காக வெளிப்பட்டுப் பாய்ந்தோடியது.

 

    • “இளவரசே, தங்கள் வெற்றி விருந்துக்கு இந்த மான் பயன்படுமே” என்று தோழன் ஒருவன் கூறினான்.

 

    • அவன் கூறி முடிப்பதற்கு முன்னால் மான் அம்புபட்டு வீழ்ந்தது. ஈசுவரனாதன் அவ்வளவு விரைவாக நாணேற் றிக் குறி பார்த்து அம்பெய்து ஒடும் மானைச் சாய்த்து விட்டான். அந்த மானையும் தோழர்கள் தூக்கிக் கொண் டார்கள். வழி முழுவதும் தோழர்கள் இளவரசனைப் போற்றிப் புகழ்ந்து கொண்டே நடந்தார்கள்.

 

    • நகருக்குள் அவர்கள் நுழைந்தபோது, அவர்களைச் சுற்றி ஒரு சிறு கூட்டமே கூடிவிட்டது. சிங்கத்தைக் கண்டு வியப்போரும், சிங்கத்தைக் கொன்ற இளவரசனுடைய வீரத்தைப் பாராட்டுவோரும், அவர்கள் ஊர்வலத்தை வேடிக்கை பார்ப்போருமாகக் கூட்டம் கூடி விட்டது. அந்தக் கூட்டத்தினர் இளவரசன் குழுவினரை அரண்மனை வாயில் வரையில் தொடர்ந்து சென்றனர். பின்பு கலந்து சென்று விட்டனர்.

 

    • இளவரசன் ஈசுவரகாதன் வெற்றிக் களிப்போடு அரண்மனையினுள் நுழைந்தான். வந்து சேர்ந்த சிறிது நேரத்திற்குள் அங்கு தான் வருமுன்னரே விருந்து ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதை அறிந்து வியப்படைந்தான்.

 

    • இந்தத் திடீர் விருந்து யாருக்காக என்று அறிய அவன் மனம் அவாக் கொண்டது.

 

    • அதற்குள் அவன் தந்தையே எதிர்ப்பட்டு அவன் கேள்விக்கு விடையளித்து விட்டார்.

 

    • மாமன்னர் அசோகர் காசிக்கு வருகிறாராம். புத்த சங்க கிர்மாணத்திற்காக வரும் அவர் ஒரு வேளை அரண்மனையில் விருந்துண்ண ஒப்புக் கொண்டிருக்கிறாராம். அவருக்காகத்தான் விருந்து ஏற்பாடுகள் நடைபெறுகின்றனவாம். மாமன்னர் அசோகரை ஈசுவரநாதன் அதற்குமுன் நேரில் பார்த்தது கிடையாது. அன்று அவரை நேரில் பார்க்கப் போகிறோம் என்ற மனக்கிளர்ச்சி ஒரு புறம். அவருக்கு விருந்து வைப்பதற்காகத் தனக்கு அந்த மான் சிக்கியதோ என்ற எண்ணம் ஒருபுறம். இப்படிப் பல திறப்பட்ட எண்ணங்களோடு உலவினால் ஈசுவரகாதன்.

 

    • மாமன்னர் அசோகரைப் பற்றி அவள் நிறையக் கேள்விப்பட்டிருக்கிறான். அவனுடைய தந்தையே அவருடைய சிறந்த குணங்களைப் போற்றிப் பலமுறை பேசக் கேட்டிருக்கிறான்.

 

    • யாரும் எப்போதும் அசோகரைப் பற்றிக் குறைவாகப் பேசியதே கிடையாது. உலக முழுவதும் போற்றும் அவருடைய பெருமைகளைக் கேட்டுக் கேட்டு, தானும் அவரைப்போல் பெருமைக்காளாக வேண்டுமென்ற ஓர் ஆசை அவன் உள்ளத்தின் அடியிலே ஊறியது. எல்லாவற்றுக்கும் முதலாக அவன் தன் காட்டை அசோகரின் ஆட்சியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தான். தன் ஆட்சியில் நாடு வரும்போது, நிச்சயமாக அடிமைத் தளையை உடைத்தெறிந்து சுதந்திர ஆட்சியை நிலைநாட்ட வேண்டுமென்று அவன் வீர உள்ளம் துடித்துக் கொண்டிருந்தது. தன் காட்டை அடிமைப்படுத்தி யிருப்பவர் என்ற முறையில் அவனுக்கு அசோகர் மீது ஒரளவு வெறுப்பு இருந்தபோதிலும், அவருடைய புகழைக் கேட்டு கேட்டு அவரைத் தன் இலட்சிய நாயகராக அவன் ஏற்றுக் கொண்டிருந்தான். அந்த இலட்சிய நாயகரைக் காணப் போகிறோம் என்ற நினைப்பில் அவன் மனம் கிளர்க் தெழுந்தது வியப்பிற்குரியதல்லவே!

 

    • அசோகர் வரும் நேரத்தை எதிர்பார்த்து அவன் ஆவலோடு காத்திருந்தான். அவன் கொண்டு வந்த மான் அன்று சிறப்பான கறியாகச் சமைக்கப்பட்டிருந்தது.

 

    • மாலை உணவுக்குத்தான் அசோகர் வருவதாக இருந்தார். எனவே அந்திப் பொழுது நெருங்க நெருங்க அரண்மனையில் எல்லோரும் சுறுசுறுப்பாகவும் பரபரப்பாக வும் வேலைகளைக் கவனிக்கலானார்கள். கோட்டை வாயிலிலேயே, மன்னர் மாமன்னரை எதிர் கொண்டு வரவழைக்க ஆயத்தம் செய்யப்பட்டது.

 

    • கதிர் மறைய இன்னும் ஒரு காழிகைப் பொழுது இருந்தது.

 

    • வீரமுரசம் அதிர்ந்தது.

 

    • தொடர்ந்து கணகணவென்ற மணியோசை எழுந்தது.

 

    • புத்தம் சரணம் கச்சாமி !

 

    • தருமம் சரணம் கச்சாமி !

 

    • சங்கம் சரணம் கச்சாமி !

 

    • பிட்சுக்கள் சூழ அசோக மாமன்னர் அரண்மனை வாயிலினுள் நுழைந்தார். காசி மன்னர் அவரை வணங்கி வரவேற்றார். தம் பரிவாரங்கள் சூழ மாமன்னரையும் உடன் வந்த துறவிகளையும் அரண்மனையினுள் அழைத்து வந்தார்.

 

    • மழுங்க வழித்த தலையும் காவியுடையுமாகக் காட்சி யளித்த நூறு பிட்சுக்களின் நடுவிலே, ஒளிமணி முடியும் கனிந்த அருட்பார்வையும், கம்பீரம் சற்றும் குறையாத திருமுகமும் படைத்த மாமன்னர் அசோகர் நடந்து வந்த காட்சி, நூறு நிலவுகளின் இடையே ஒரு பகலவன் தோன்றி ஒளி வீசிக்கொண்டு நகர்ந்து வருவது போன்றிருந்தது.

 

    • ஒரு மாமன்னரை வரவேற்க ஒரு சிற்றசரர் முறையாக என்னென்ன ஏற்பாடுகள் செய்யவேண்டுமோ அத்தனை ஏற்பாடுகளும் குறைவறச் செய்திருந்தார் காசி மன்னர். வேலையாட்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்ற, சுழன்று சுழன்று ஓடி ஒடிப் பணிபுரிந்தனர்.

 

    • வரவேற்பு மண்டபத்திலே எல்லோரும் உட்கார்ந்திருந்தார்கள். காசி மன்னரோடு அரசியல் பற்றிச் சிறிது நேரம் அசோகர் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவர் பார்வை இளவரசன் ஈசுவரநாதன் மீது பதிந்தது.

 

    • “தங்கன் மைந்தன்தானே?” என்று அசோகர் கேட்டதற்கு ஒரு புன்னகையைப் பதிலாக அளித்துப் பேசாமலிருந்தார் காசி மன்னர்.

 

    • “ஈசுவரநாதா, உன் வீர சாகசத்தைப் பற்றிக் கேள்விப் பட்டேன். சிங்கத்தை வெல்லும் ஒரு சிங்கத்தைத் தன் மகனாகப் பெற்ற காசி மன்னர் பெரும் பாக்கியசாலிதான்!” என்று மாமன்னர் கூறினர்.

 

    • ஈசுவரகாதனின் உள்ளம் முழுவதும் இந்தப் பாராட்டுரையால் மகிழ்ச்சி வெள்ளம் நிறைந்து வழிந்தது. அவனி முழுவதும் வளைத்தாளும் ஒரு மாமன்னர்-உலகம் போற்றும் ஒரு பெரிய சீல நாயகர் தன்னை நேரில் நின்று போற்றிப் புகழ்ந்து பேசுகிறார் என்னும்போது எந்த இளைஞன் உள்ளம்தான் எக்களிப்படையாமல் இருக்கும்!

 

    • புத்த சங்கம் அமைக்கவந்த அசோகர் தன் வீரச் செயலை எவ்வாறு அறிந்தார்! அரண்மனையில் இருப்பவர்க்கே சற்று முன் தான் அச்செய்தி தெரிந்தது. அது நிகழ்ந்து இரண்டு நாழிகைப் பொழுதுகூட ஆகியிருக்காது. அதற்குள் அசோகருக்கு எப்படித் தெரிந்தது என்று அவனுக்கு வியப்பாக இருந்தது.

 

    • விருந்து ஆயத்தமாகிவிட்டதாகப் பணிப்பெண்கள் வந்து கூறினர். உடனே காசி மன்னர் யாவரையும் விருந்து மண்டபத்திற்கு அழைத்துச் சென்றார்.

 

    • விருந்துண்ணும்போது அசோகரின் அருகில் காசி மன்னரும் ஈசுவரகாசனும் அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்கு இருபுறத்திலும் வரிசையாகப் புத்த பிட்சுக்கள் அமர்ந்திருந்தார்கள்.

 

    • விருந்து மிகச் சிறப்பாகவே தயாராகி யிருந்தது. அரண்மனைச் சமையற்காரர்கள் மிகுந்த கவனத்தோடும் திறமையோடும் உணவுவகைகளைப் பாகம் பண்ணியிருந்தார்கள். ஆனால், அந்த விருந்து ஈசுவரநாதனுக்கு ஏமாற்றமளித்துவிட்டது. அவன் வேட்டையாடிக் கொண்டுவந்த மான் கறி அன்று விருந்தில் பரிமாறப்படவில்லை.

 

    • புத்த பெருமான் உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் என்றுதான் சொல்லியிருந்தார். புத்த சங்கத்தில் சேர்ந்தவர்கள் கொல்லாமை நோன்பைக் கட்டாயமாகக் கடைப் பிடிக்கவேண்டும் என்பது விதியாகத்தான் நெடுநாள் இருந்துவந்தது.

 

    • இடையிலே யாரோ கதை கட்டி விட்டிருந்தார்கள்.

 

    • புத்த பெருமான ஒரு பேதை போய்க் கண்டானாம். அவனுக்குப் புத்த பெருமான் உயிர்களைக் கொல்லக் கூடாது என்று போதனை புரிந்தாராம். அந்தப் பேதை உணவுக்காகக் கொல்லக் கூடாதா என்று கேட்டானாம். உணவுக்காகவும் கொல்லக் கூடாது என்று அழுத்தக் திருத்தமாகப் பதிலளித்தாராம் பெருமான். மேலும் ஒரு சந்தேகம் என்று கேட்டானம் பேதை. என்ன? என்று கேட்டிருக்கிறார் புத்த பெருமான்.

 

    • “தானாகச் செத்துப்போன உயிர்களின் உடலைத் தின்னலாமா?’ என்று அவன் கேட்டானாம்.

 

    • “அதை வேண்டுமானல் தின்னலாம், கொல்லுவது பாபம். செத்துக் கிடப்பதைத் தின்பது பாவமில்லை” என்று புத்த பெருமான் கூறினராம்.

 

    • இந்தக் கதையைக் கட்டிவிட்டவர்களின் நோக்கம் நிறைவேறிற்று.

 

    • கொல்லுவது பாவம்; புலால் தின்னுவது பாவமில்லை என்ற போலிக் கொள்கை புத்த பெருமானின் விளக்கம் என்ற பெயரிலே நாடெங்கும் பரவிவிட்டது. நாளா வட்டத்தில் செத்ததைத் தின்னலாம் என்ற கொள்கை போய்த் தான் கொல்லாத எதையும் தின்னலாம் என்ற கருத்து எங்கும் பரவிவிட்டது. கொல்லுவதற்கென்றும் கொன்ற பாபத்தை ஏற்றுக் கொள்ளுவதற்கென்றும் ஒரு வகுப்பினர் தோன்றினர்கள். அவர்கள் பாவத்தைப் பற்றி அக்கறை கொள்ளாமல், தங்கள் போக போக்கியங்களேயே பெரும் பாக்கியமாகக் கருதிப் புலால் கடைகளைத் திறந்தார்கள். மற்றவர்கள் தின்னுவது பாவமில்லை என்ற கொள்கையில் தாராளமாகப் புலால் தின்னத் தொடங்கினார்கள்.

 

    • இந்தக் கொள்கைகள் புத்த சங்கத்தினரிடையேயும் பரவிவிட்டன. புத்த பிட்சுக்களே புலால் தின்னுவது பாவமில்லே என்ற கருத்தை ஏற்று நடக்கத்தொடங்கி விட்டார்கள். எல்லோரும் புத்த பெருமானின் கருத்துக்கு மாறுபாடில்லாமல் தாங்கள் நடப்பதாகக் கருதிக்கொண்டார்கள்.

 

    • அசோகர் புத்த சங்கத்தில் ஈடுபாடு கொண்ட பின்னர்தான் புத்த பெருமானின் உண்மையான தத்துவங்கள் மீண்டும் நடைமுறைக்கு வந்தன. புத்த சங்கத்தினர் உயிர்களைக் கொல்லவும் கூடாது; புலால் உண்ணவும் கூடாது என்ற கண்டிப்பான விதி ஏற்பட்டது. அசோகர் தம் வாழ்வில் இந்த ஏற்பாட்டை உண்மையோடு அனுசரித்து வந்தார். மேலும் அவர் கலிங்கப் போரில் மனமாறுதலடைந்தபின் புத்த தருமக் கொள்கையில் கருத்துான்றி அவற்றைத் தம் வாழ்வில் அனுசரித்து வந்தார். புத்த தருமங்களை வாழ்வில் கைக்கொள்ளக் கொள்ள, அவருக்கு ஒரு விதமான மனச்சாந்தியும் இன்பமும் ஏற்பட்டு வந்தன.

 

    • அசோகர் புலால் உண்பதில்லை என்பதை அவருடைய ஆட்களின் மூலம் அறிந்துகொண்ட காசி மன்னர், தம் பரிசாரகர்களுக்குச் சொல்லி-புலாலுணவு வகைகளை அடியோடு நிறுத்திவிடச் செய்தார். விருந்தில் புலாலைப் படைத்து அசோகரின் மனம் புண்படாமல் செய்துவிட்டோம் என்ற மன அமைதியுடன் அவர் இருந்தார்.

 

    • சிங்கத்தைத் தான் எதிர்த்து நின்று போராடியதை வலிய வந்து பாராட்டிய மாமன்னர், மான் கறியின் சுவையையும் பாராட்டிப் பேசுவார் என்று ஈசுவரகாதனின் உள்ளம் எதிர்பார்த்தது. ஆனால் மான் கறியே படைக்கப் பெறவில்லை என்பதை அறிந்தபோது அந்த இள உள்ளம் ஏமாற்ற மடைந்தது. பின்னால் காரணத்தை அறிந்த போது, ஈசுவரநாதன் புத்த சங்கத்தைப் பற்றியே அலட்சிய எண்ணம் கொள்ளத் தொடங்கிவிட்டான். உண்ணும் உணவிலெல்லாம் பாகுபாடுகள் செய்வது மூட நம்பிக்கைகளின் வகையைச் சார்ந்தது என்று அவன் கருதலானான்.

 

    • ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொன்றில் விருப்பிருக்கும்; ஒவ்வொன்றில் வெறுப்பிருக்கும். உணவு, மரக்கறி என்றும் புலால் என்றும் இருவகைப் பட்டது. இதில் மனம் விரும்பியதை அவனவன் உண்ண வேண்டுமே யொழிய இன்னதுதான் உண்ண வேண்டும் என்று சட்டம் வகுப்பது தகாது என்று அவன் கருதினான்.

 

    • மக்களை நல்வழிப்படுத்துவதற்கென்று சமயங்களை வகுக்கின்ற பெரியார்கள் இப்படிச் சில மூட நம்பிக்கைகளையும் புகுத்திவிடுகிறர்களே என்று அவன் எண்ணினான். அசோகர் போன்ற பேராற்றல் வாய்ந்த மாமன்னர்கள் இது போன்ற கொள்கைகளைக் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுகிறார்களே என்று அவன் சலித்துக் கொண்டான். வாய்ப்புக் கிடைத்தால் மாமன்னருடன் பேசி அவருடைய இந்தக் குருட்டுக் கொள்கையை நீக்க வேண்டும் என்றும் உறுதிகொண்டான். முன் பின் பழக்கமில்லாத நிலையில், அப்போதே தான் மாமன்னருடன் வாதிடுவது சரியல்ல என்ற நினைப்பில் அவன் அன்று எதுவும் பேசவில்லை.

 

    • விருந்து முடிந்தவுடன், மான்னர் காசியரசருடன் அரசியல் பற்றிச் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுப் புறப்பட்டார்.

 

    • நெடுநாட் கழித்து ஈசுவரநாதனுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது. அசோக மாமன்னருடன் கூட இருந்து பழகும் ஓர் அரிய வாய்ப்பு- அவனுடைய இலட்சிய நாயகரை அணுகிப்பழகும் கிடைத்தற்கரிய சிறந்த வாய்ப்பு, அவன் எதிர்பாராமலே கிடைத்தது.

 

    • அசோகர் புனித மன மாற்றம் அடைந்த பிறகு புத்த சங்கத்தில் சேர்ந்து, அன்பும் அறநெறியும் பரவப் பாடுபட்டார். உண்மையும் ஒழுக்கமும் ஒவ்வொரு மனிதன் வாழ்விலும் அரசியலிலும் கூட நிலைக்கவேண்டுமென்று பெரு முற்சியுடன் தளராது உழைத்தார். அதற்காக, புத்த சங்கக் கொள்கைகளிலே தம் மனத்தை ஈடுபடுத்தியதற்காக, அரசியல் வேலைகளில் கவனம் செலுத்தாமல் இருந்துவிடவில்லை.

 

    • அசோகருடைய பெரும் பேரரசு, அவருடைய காலத்தில் சிதறாமல் குலையாமல் கட்டிக் காக்கப்பெற்று வந்தது. இதற்கு அவர் இரத்தவெறி மிகுந்த போர்முறையையோ, அநாகரிகமான நேர்மையற்ற இராஜ தந்திர முறைகளையோ கையாளவில்லை. ஒவ்வொரு செயலிலும் அவர் உண்மையையும் அன்பையும் கருவிகளாகக் கொண்டு அறவழியை நிலைநாட்டுவதில் வெற்றி கண்டார்.

 

    • ஈசுவரநாதனின் மனப்போக்கையும் அவன் கொண்டிருந்த சுதந்திர எண்ணங்களையும் ஒற்றர்கள் மூலம் அசோகர் தெள்ளத் தெளிவாக அறிந்து வைத்திருந்தார். ஈசுவரநாதன் அதே எண்ணங்களுடன் மேலும் பெரியவனாக வளர்ந்து வந்தால், தன் பேரரசுக்கு எவ்வளவு சீர் குலைவு ஏற்படும் என்பதையும் அவர் கணக்கிட்டு வைத்திருந்தார். போரென்று எழுந்தால், ஈசுவரகாதன் பொடியாகிப் போவான் அசோகரின் மாபெரும் படைக்கு முன்னுல் என்பது உண்மைதான். ஆனால் போர் புரி தில்லை என்று உறுதி கொண்டிருந்த அசோகரை எதிர்த்து அந்த இளைஞன் கலகம் செய்தால் அது எத்தகைய தீய விளைவுகளை உண்டாக்கும்!

 

    • காசி இளவரசன் கலகம் செய்தான்; அசோகருடைய ஆட்சி கலகலத்துவிட்டது என்ற நிலை ஏற்பட்டால், மற்ற சிற்றரசர்களுக்கும், இதுவே எடுத்துக்காட்டாகி விடும். தாங்களும் காசி இளவரசனைப் பின்பற்றிச் சுதந்திரம் பெற ஆரம்பித்துவிடுவார்கள்.

 

    • இந்தச் சூழ்நிலை தன் பேரரசில் உருவாகாமல் தடுக்க வேண்டும் என்று அசோகர் முடிவு செய்திருந்தார். அதற்கு காசி இளவரசனுடைய மனம் மாறியாக வேண்டும். அந்த மாற்றம் அவன் உள்ளத்திலே தன்னை யறியாமலே நிகழ்ந்தாக வேண்டும். மாறுகிறோம் என்று அவன் சிறிதும் எண்ணிப் பாராத நிலையிலே மன மாற்றம் உண்டாக வேண்டும்.

 

    • இப்படித்தான் அசோகர் தம் இராஜ தந்திரத்தை நிறைவேற்ற எண்ணினார். ஈசுவரகாதன் சுதந்திர வெறி மட்டுமே கொண்டிருந்தவனாக இருந்திருந்தால், அசோக ருக்கு இந்த வேலை எளிதாக இருந்திருக்காது. அவன் அசோகரைத் தன் இலட்சிய நாயகராகவும் கொண்டிருந்ததால் அது மிகவும் எளிதாக நிறைவேற வசதியாயிற்று.

 

    • அந்த நிகழ்ச்சி இப்படித்தான் கடந்தது.

 

    • ஒரு நாள் காசி மன்னருக்கு மாமன்னரிடமிருந்து ஒரு திருமுகம் வந்தது. தம் அமைச்சர்களில் ஒருவர் முதுமையுற்று ஓய்வு பெற்றுவிட்டபடியால், அந்த வேலைகளை அசோகரே மேற்கொள்ள வேண்டியிருந்தது. வேறு ஒருவரை அந்தப் பதவியில் அமர்த்தும்வரையில் மாமன்னர் தாமே அதைக் கவனிக்க வேண்டியிருந்தது. தமக்குத் துணையாக இளவரசன் ஈகவரநாதனைச் சில நாட்கள் அனுப்பி வைத்தால் நலமாக இருக்கும் என்று மாமன்னர் தம் கைப்பட எழுதியிருந்தார்.

 

    • காசி மன்னர் மறுத்துரைக்க எண்ணவேயில்லே. மகனே அழைத்துப் ‘புறப்படு’ என்று கட்டளையிட்டுவிட்டார். அசோகர் வேலைக்கு என்று அழைத்திருக்தால் ஈசுவர நாதனின் சுதந்திர உள்ளம் அதை உதறித் தள்ளி யிருக்கும். தமக்குத் துணையாக ஒத்தாசை இருக்கவே அழைக்கிறார் என்ற நினைப்பில் அவன் பெருந்தன்மையோடு தன் தந்தையின் கட்டளைக்குக் கீழ்ப்படித்தான். மறு நாளே பாடலிபுத்திரத்திற்குப் போய்ச் சேர்ந்தான்.

 

    • அசோகர் அவனை அன்பும் ஆர்வமும் பொங்கித் ததும்ப வரவேற்றார். அவன் நலத்தையும் அவன் தாய் தந்தையர் நலத்தையும் அக்கறையோடு விசாரித்தார். தன் அழைப்புக்கு இணங்கி உடனே புறப்பட்டு வந்தமைக்காகத் தன் பாராட்டுதல்களைக் கூறினர். பின் அவனிடம் பார்க்க வேண்டிய வேலைகளை ஒப்படைத்தார். ஈசுவர நாதனிடம் ஒப்படைத்த வேலை, சிற்றரசர்களின் நிலையைக் கண்காணிப்பதாகும். அசோகர் தம் பேரரசு சீர் குலையாமல் காப்பற்ற – சிற்றரசர்களைக் கண்காணிப்பதற்காக ஒரு தனித் துறையே உண்டாக்கி, அதற்கு முதிர்ந்த அனுபவம் வாய்ந்த ஓர் அமைச்சரையே நியமித்திருந்தார். அந்தப் பேரறிஞரின் வேலையைத் தான் ஈசுவரகாதன் தொடர்ந்து பார்க்க வேண்டியிருந்தது. நாள் தோறும் மாமன்னர் தாமே முன்வந்து அரை நாழிகைப் பொழுது அவ்வேலையில் ஈடுபடுவார்.

 

    • ஈசுவராாதன் வேலையை ஒப்புக்கொண்டு கருத்தூன்றிப் பார்க்கத் தொடங்கினான். அசோகரின் அரசாட்சி முறையையும், இராஜதந்திர வழிகளையும் தானும் கற்றுத் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வத்தோடுதான் ஈசுவராாதன் அந்த வேலையில் அமர்ந்தான். ஆனால் போகப் போக அவனுக்கு அசோகரிடம் இருந்த மதிப்பு அதிகரித்தது. அவர் மீது அன்பும் தோன்றி வளர்ந்தது.

 

    • பொதுவாகத் தலைவர்களாக விளங்குவோரிடம் தூரத்திலிருந்து பழகுவதே சிறப்பு. அவர்களைப் பற்றி நாம் கொண்டிருக்கும் உய்ர்ந்த மதிப்பும் கருத்தும் நெருங்கிப் பழகப் பழகக் குறைந்துவிடும். சில தலைவர்களிடம் நெருங்கிப் பழகப் பழக, ஏன் இந்த மனிதரிடம் பழகினோம் என்ற வெறுப்பும் ஏற்பட்டு விடும். பெரும்பாலான தலைவர்கள் நிலை இப்படித்தான். ஆனால் அசோகர் நிலை இப்படிப் பட்டதல்ல, நெருங்கிப் பழகப் பழக, அவர் மீது நமக்கு அன்பே உண்டாகும். அவருடைய கொள்கைளில் ஆழ்ந்த பற்றே உண்டாகும். அதற்குக் காரணம், அவருடைய உண்மையான செயலும், உயர்ந்த ஒழுக்கமும் சிறந்த மனப் பண்புமேயாகும்.

 

    • சுதந்திர உணர்ச்சியும் மகோன்னதமான இலட்சிய வேட்கையும் கொண்ட ஈசுவரனாதன், தன் இலட்சிய நாயகரான அசோகரிடம் நெருங்கிப் பழகப் பழக அவருடன் ஓர் அன்புறவால் பிணிப்புண்டான் என்றால் அது வியப்புக் குரியதல்ல. அன்புணர்ச்சி வளருமானால் பகையுணர்ச்சி கருகி மடியத்தானே செய்யும் ஈசுவரகாதன் பாடலிபுத்திரம் வந்தபிறகு தானே அசோகராய்-அசோகரே தானாய் ஆன ஒரு நிலையை எய்திவிட்டான். அவருடைய கொள்கைகளும் கோட்பாடுகளும் மாசுமருவற்ற அவனுடைய இளம் உள்ளத்திலே வேரூன்றி விட்டன. புத்த தருமம் அவனுடைய வாழ்வின் இலட்சியமாகி விட்டது. அரசியலிலேயும் புத்த தருமமே நிலைபெற வேண்டுமென்ற கருத்து அவனுக்கு உடன்பாடாயிற்று.

 

    • ஒரு முறை பெரும் சிக்கலான ஒரு பிரச்சினை ஏற்பட்டது. சிற்றரசன் ஒருவன் அசோக மாமன்னருடன் போர் தொடுப்பதாக அறிவித்து ஒலை அனுப்பியிருந்தான். ஒற்றர்களின் குறிப்பும் அவன் போர் ஆயத்தங்கள் செய்து வரும் உண்மையைப் புலப்படுத்தின.

 

    • அந்தச் சிற்றரசன் எண்ணம் இதுதான். அசோகர் போர் செய்யவில்லை என்ற உறுதி பூண்டிருக்கிறார். தான் போருக்குப் புறப்பட்டால், போரைத் தவிர்ப்பதற்காக விட்டுக்கொடுத்து விடலாம். தான் எளிதாக சுதந்திர அரசு பெற்றுவிடலாம். பிறகு அசோகரின் பேரரசுக்கு நடுவிலேயே தன் வலிமையால் ஒரு குட்டிப் பேரரசு கூட நிறுவிவிடலாம்.

 

    • சிற்றரசனின் இந்த மனப்போக்கைப் பொறுப்பில் இருந்த ஈசுவரநாதன் நன்கு தெரிந்துகொண்டான். ஆனால், அவனுடன் ஏற்படக் கூடிய போரை எப்படித் தவிர்ப்பது? அவனுடைய முயற்சிகளைப் பின்னடையச் செய்வது எப்படி? இதற்கு எப்படிப்பட்ட இராஜ தந்திரத்தைக் கையாளுவது?

 

    • சிந்தித்துச் சிந்தித்துப் பார்த்தான். அவனுக்கு ஒரு வழியும் புலப்படவில்லை. இந்தச் செயல் தன் அனுபவத்திற்கும் அறிவுக்கும் அப்பாற்பட்டதாகப் புலப்பட்டது.

 

    • எப்படிச் செயலாற்ற வேண்டும் என்று அசோகரிடமே கேட்டு விடுவதென்று புறப்பட்டான்.

 

    • அசோகர் அங்கே இல்லை. தோட்டத்தில் இருப்பதாகக் கூறினார்கள். தோட்டத்திற்குச் சென்றான்.

 

    • அங்கே அவன் கண்ட காட்சி அவனை மெய்மறந்து நிற்கச் செய்தது. மாமன்னர் அசோகர் தோட்டத்தின் நடுவே பசும்புல் தரையில் சாதாரணமாக உட்கார்ந்திருந்தார். அவருடைய மடியிலே ஒரு மான் கன்று படுத்து அசை போட்டுக் கொண்டிருந்தது. அவரைச் சுற்றிலும் மான் கன்றுகள் அச்சமற்றுப் புல் மேய்ந்து கொண்டு நின்றன. புறாக் கூட்டம் ஒன்று அவரைச் சுற்றி இரைந்து கிடந்த தானிய மணிகளைப் பொறுக்கித் தின்று கொண்டிருந்தது. அவர் தோளிலும் மடியில் கிடந்த மான் கன்றின் முதுகிலும் இரண்டொரு புறாக்கள் குந்துவதும் பறப்பதுமாக இருந்தன. தாங்கள் அந்த மனிதருக்குச் சற்றேனும் அஞ்ச வேண்டுவதில்லை என்ற எண்ணத்துடன் அவை அவரை நெருங்கிப் பழகுவதாகத் தோன்றியது. மனிதரைக் கண்டால் அஞ்சி அரண்டோடுகின்ற மிருகங்களையும் பாய்ந்து கொல்ல முனையும் கொடு விலங்குகளையுமே கண்டிருந்த ஈசுவர நாதனுக்கு இங்கே சற்றும் அச்சமின்றி அன்பு கொண்டு பழகுகின்ற உயிரினங்களைக் கண்டபோது வியப்பாக இருந்தது, அந்த உயிர்களுக்கும் மனிதர்களுக்கிருப்பதைப் போலவே அன்புணர்வும் உறவு மனப்பான்மையும் இருக்கின்றன என்பதை அவன் நேரில் கண்டு கொண்டான்.

 

    • தான் வந்தது எதற்கென்று அவனுக்கு நினைவு வரச் சிறிது நேரம் பிடித்தது. அது நினைவு வந்தவுடன் அவன் தடதடவென்று கடந்து அசோகரை நெருங்கினான். அவன் நெருங்கிச் செல்லும்போது புறாக்கள் படபடவென்று இறக்கைகளை அடித்துக் கொண்டு மேலெழும்பின. மான் கன்றுகள் துள்ளிப் பாய்ந்து ஓடின. அவன் அசோகரின் எதிரில் போய் கின்றவுடன் அவை மீண்டும் அங்கே வந்து சூழ்ந்து கொண்டன. தன்னையும் அவை தம் அன்புலகில் ஏற்றுக் கொண்டு விட்டன போலும் என்று மனத்திற்குள் எண்ணிக் கொண்டான் ஈசுவரநாதன்.

 

    • அசோகர் அவனே நோக்கி நிமிர்ந்தார். தான் வந்த காரணத்தைச் சில சொற்களில் அவன் விளக்கிக் கூறினான்.

 

    • “உடனடியாகக் கவனிக்க வேண்டியதுதான்” என்று கூறிக் கொண்டே அசோகர் எழுந்திருந்தார். ஆனால், அவர் இச் செய்தியைக் கேட்டுப் பரபரபபோ கலவரமோ அடைந்ததாகத் தெரியவில்லை.

 

    • அலுவல்மனைக்கு வந்தவுடன், சிற்றரசனின் ஒலையை வாங்கிப் பார்த்தார் அசோகர். உடனடியாகத் தன்னை வந்து சந்திக்கும்படி அவனுக்கு ஒரு கடிதம் அனுப்புமாறு ஈசுவரகாதனிடம் கூறினர். தூதர் மூலம் கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் ஆணவமும் அசட்டுத் தைரியமும் தொண்ட அந்தச் சிற்றரசன் அசோகரை வந்து காண மறுத்து விட்டான். மறுநாளே அச்செய்தி கிடைத்து விட்டது.

 

    • “ஈசுவரநாதா, நாளை நான் அந்தச் சிற்றரசனைச் சந்திக்கப் போகிறேன். நீயும் வருகிறாயா!” என்று கேட்டார் அசோகர்.

 

    • ‘வருகிறேன்!” என்றான் ஈசுவரநாதன்.

 

    • இருவரும் தங்கள் அரச உடைகளைக் களைந்து மூட்டை கட்டிக் கொண்டார்கள். ஆட்டிடையர்களைப் போல வேடம் கொண்டு, சிற்றரசனின் கோட்டைக்குள்ளே நுழைந்தார்கள். பால்காரர் போல் நடித்து அரண்மனை அந்தப்புரத்தை அடைந்து விட்டார்கள். அங்கே ஒரு மறைவான இடத்திலே நின்று தங்கள் அரச உடைகளை அணிந்து கொண்டார்கள்.

 

    • பகையரசனின் அரண்மனை. அரச உடையில் மாமன்னர். பின்னால் இளவரசன். அசோகர் சற்றும் கலங்கவில்லை. அவர் உடன் செல்லும் தைரியத்தோடு ஈசுவரகாதன் இருந்தான்.

 

    • கம்பீரமாக நடந்து சென்றார் அசோகர். சிற்றரசன் மந்திராலோசனை மண்டபத்தை அடைந்தார். திடீரென்று மாமன்னரை நேரில் கண்ட அதிர்ச்சி காவலர்களைப் பிரமிக்க வைத்தது. வாளை உயர்த்தி வணக்கம் கூறினர். “அசோகர் வந்திருக்கிறார் என்று உங்கள் அரசனிடம் போய்ச் சொல்” என்று கூறினர் அசோகர். ஒரு காவலன் ஒடினான். அசோகர் ஈசுவரநாதன் பின் தொடர நடந்தார்.

 

    • அந்தச் சிற்றரசன் ஓடோடி வந்து வணங்கி வரவேற்றான், இருவருக்கும் உயர்ந்த இருக்கை தந்து தான் கீழே நின்றான். அவனுடைய அமைச்சர்களும் எழுந்து வணங்கி நின்றனர்.

 

    • அசோகரிடமோ, ஈசுவரநாதனிடமோ அப்போது வாளில்லை. வேறு எவ்விதமான ஆயுதமுமில்லை. ஆனல் அந்தச் சிற்றரசன் ஏன் அப்படிப் பணிய வேண்டும்? வணங்க வேண்டும்?

 

    • சின்னஞ்சிறு பிள்ளை கூட இதன் காரணத்தைக் கூறி விட முடியும் வஞ்சகமாக, அசோகரிடம் அந்தச் சிற்றரசன் நடந்து கொண்டிருந்தால் அந்தச் செய்தி வெளிப்பட்டவுடன் அவனுக்கு என்ன கதி நேரிட்டிருக்கும் என்று எண்ணிப் பார்க்கக் கூட முடியாது. மக்களிடையே அசோகருக்கு அவ்வளவு மதிப்பிருந்தது; அவ்வளவு அன்போடு மக்கள் அசோகரை நேசித்தார்கள். இதை அந்தச் சிற்றரசன் அறியாதவனல்ல. ஆகவே, அவன் எதிர்பாராத விதமாக – ஆயுதமற்றுத் தன் முன்னிலையில் திடுமென வந்து நின்ற அசோகரைக் கண்டவுடன் வியப்பும் திகைப்பும் அடைந்து வணங்கி நின்றது ஆச்சரியத்திற்குரியதல்ல.

 

    • ஆனால், ஒரு பகைவன் கோட்டையில் துணிந்து நுழைந்து கையில் எவ்விதமான படைக்கலனுமின்றி நெஞ்சுறுதி ஒன்றே துணையாக அவன்முன் நிற்கின்ற தன்மை அசோகரை யன்றி வேறு யாருக்கு வரும்? ஈசுவரநாதன் அசோகரின் நெஞ்சுறுதியைக் கண்டு பிரமித்தவாறே அவர் பின் நின்றான்.

 

    • வணங்கி நின்ற சிற்றரசனை நோக்கி அசோகர் சில கேள்விகள் கேட்டார். அவன் படையெடுத்துக் கலகம் செய்து சுகந்திரம் பெற முயன்ற செய்தி உண்மை யென்பதை அவன் வாய் மூலமாகவே அறிந்து கொண்டார். பின் அவர் பேசத் தொடங்கினார்.

 

    • முதலில் அவர் அவனுடைய சுதந்திர உணர்ச்சியையும் வேட்கையையும் பாராட்டினர். அவன் சுதந்திரத்தைப் பறிக்க வேண்டுமென்பது தன் குறிக்கோளல்ல என்பதை விளக்கிக் கூறினர். நாட்டு நிலைமையைப் படம் பிடித்துக் காட்டினர், சுதந்திரமாக அவன் தனியரசு ஏற்படுத்திய பின் பிற அரசர்களும் பேரரசை எதிர்த்துக் கிளர்ந்தெழக் கூடும் என்ற உண்மையை ஒளிவு மறைவின்றி அவனுக்கு எடுத்துரைத்தார். தனியரசுகள் பலப்பல ஏற்பட்டபின், அவற்றுள்ளே வலிமை மிக்க ஒன்று மற்றவற்றை அடக்கியாள முற்படும் என்ற பின் விளைவை விளக்கினர். அப்போது மீண்டும் அந்தச் சிற்றரசன் வேறு வழியின்றி ஒரு பேரரசுக்கு ஆட்பட நேரிடும் என்பதையும் எடுத்துரைத்தார். எதிர்த்துப் போரிடாத அசோகரிடமிருந்து விடுதலை பெற்று, மீண்டும் கொடுமையான போருக்கு உயிர்ப்பலி கொடுத்து அடிமைத் தனத்தை விலைக்கு வாங்க நேரிடும் என்பதை அவர் அந்தச் சிற்றரசனுடைய மனத்தில் பதியும்படி எடுத்துக் கூறினர். இத்தனை மாறுபாடுகளுக்கும் இடையிலேயே நாடெங்கிலும் ஏற்படக் கூடிய குழப்பம், கொள்ளை, கலகம், உயிர்க்கொலை, கட்டம், அழிவு எத்தனை, எவ்வளவு என்பதெல்லாம் எடுத்துரைத்தார்.

 

    • கடைசியாக, அவன் தன் அழைப்பை மதித்து வர மறுத்ததைக் கண்டித்து விட்டு, தன் ஆட்சியில் அவன் சுதந்திரத்திற்கோ, சுதந்திர உணர்ச்சிக்கோ பாதகமாக தான் கடந்து கொண்டிருக்கிறாரா என்று கேட்டார்.

 

    • முன்னோர்கள் போரிட்டுச் சேர்த்த பேரரசைக் கட்டிக் காத்துவருவதைத் தவிர அசோகர் எந்த அரசரையும இழிவாக நடத்தியதில்லை. எல்லோரையும் சிறப்பாகவே நடத்தி வந்தார். குடிமக்கள் எவ்வாறு அசோகரைப் போற்றி மதித்து வந்தார்களோ அவ்வாறே சிற்றரசர் அனைவரும் அவரைப் போற்றி மதித்து வந்தார்கள். அவர்கள் அசோகரின் பேரரசுக்கு ஆட்பட்டிருந்தார்கள் என்பதைத் தவிர வேறு எவ்விதமான குறைபாடுகளும் அடையவில்லை.

 

    • அசோகருடைய பேச்சு அந்தச் சிற்றரசனுடைய மனத்தைத் தொட்டது. தான் சுதந்திர அரசு நிறுவிய பின் தன் சிற்றரசுக்கு நேரிடக்கூடிய கதியைத் தன்னைக் காட்டிலும் அசோகர் தெளிவாக அறிந்திருக்கிறார் என்பதை அவன் உணர்ந்தான்.

 

    • அன்பு வழியில் ஒரு பேரரசை நிலை நாட்ட அசோகர் கொண்டிருக்கும் உண்மையான வேட்கையை அவன் மனம் ஆதரித்தது.

 

    • போர் வெறிக்கும் கொலை வெறிக்கும் ஊடே தத்தித் தடுமாறிக் கொண்டு நின்று தத்தளிக்கும் சுதந்திரத்தைக் காட்டிலும், போரரற்ற அமைதி விரும்பிய ஒரு பேரரசை, போட்டி, பொறாமையற்ற ஓர் அன்பு வழிப் பேரரசை, ஆதிக்க வெறியற்ற ஒரு நல்லரசை நிலை நிறுத்தத் தானும் உதவியாக இருப்பது பெருமைக் குரியதே என்பதை அவன் ஏற்றுக் கொண்டாள். தன் போர் ஆயத்தங்களை உடனடியாகக் கைவிடுவதாக அசோகருக்கு உறுதியளித்தான். அந்தச் சிற்றரசனுக்கு மனமாற்றம் ஏற்பட்ட பொழுதிலேயே ஈசுவரனாதனுக்கும் மனமாற்றம் ஏற்பட்டு விட்டது.

 

    • அசோக மாமன்னரின் பேரரசை நிலை நிறுத்துவதற்குத் தானும் தொடர்ந்துழைக்க வேண்டுமென்று அவன் தன் மனத்திற்குள்ளேயே முடிவு செய்துகொண்டான்.

 

    • கோட்டையிலிருந்து அசோகர் வெளியேறிய போது அவர் அடிநிழலை மட்டுமன்றி அவர் வழி முழுவதையும் பின்பற்றும் ஒரு மனநிலை பெற்று ஈசுவரநாதன் அவரைப் பின்தொடர்ந்து நடந்தான்.

 

முற்றும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சிலிகான் மனது – Audio novelசிலிகான் மனது – Audio novel

Follow my anchor channel: https://anchor.fm/tamilmadhura/episodes/Silicon-Manathu—Tamil-short-story-eb9d8r Thanks to Writer Hasha Sri for the beautiful narration தூரத்தில் பச்சைக் கம்பளிப் போர்வையை உதறி விரித்ததைப் போல அழகான மலை. அதிலிருந்து பால் போலப் பொங்கி வரும் அருவி .

ஸ்வன்னமச்சாஸ்வன்னமச்சா

என் பெயர் பவன். என்னைப் பற்றிய விவரங்கள் போகப் போக நீங்களே கண்டுபிடித்துவிடுவீர்கள். இதை நீங்கள் படிக்கும் நேரம் தாய்லாந்தின் சுபன்புரியின் அழகைத் தனது காமிராவில் சுட்டுக் கொண்டிருந்தேன். விண்ணைத் தொட்டு நின்ற புத்தரையும், மண்ணில் அவர் பொற்பாதங்களைத் தொட்டு வணக்கும்

மைக்ரோ ஹாரர் கதைகள் – 1மைக்ரோ ஹாரர் கதைகள் – 1

கதை – 1  அதிகாலை யாரோ ஜன்னல் கண்ணாடியைத் தட்டும் சத்தம் கேட்டுக் கண்விழித்தேன். விழித்ததும்தான் தெரிந்தது அது டிரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடியிலிருந்து வந்த சத்தம் என்று. கதை 2 படுக்கை அறையின் அலமாரியிலிருந்து வெளியே வந்த அந்த உருவம் தனது