நிலவு 70
பதின் மூன்று வருடங்களுக்குப் பிறகு…..
டெல்லியில்…..
கிறு சமைத்த உணவுகளை மேசையின் மேல் எடுத்து வைத்துக் கொண்டு இருந்தாள்.
ஆரவ், “கண்ணம்மா, ஏதாவது உதவி பன்னட்டுமா?” என்று பின்னிருந்து அணைக்க,
கிறு” கண்ணா பசங்க வீட்டுல இருக்காங்க, என்ன பன்ற நீ?” என்றாள்.
“அவங்க மாடியில் இருக்காங்க டி, உன் அண்ணன் குடும்பம் மும்பையில் இருந்து இப்போ இங்கே வருவாங்க. அவங்க வருகிறதற்கு இன்னும் நேரம் இருக்கு” என்றான் கிறுவை அணைத்துக் கொண்டே.
அதே நேரம் மும்பையில் இருந்து வருகை தந்த அஸ்வின் வீட்டிற்குள்ளே நுழைந்து,
“டேய் நாங்களும் இங்க தான் இருக்கோம்” என்று கூறிக் கொண்டே உள்ளே நுழைந்தான்.
கிறு, ஆரவ் இருவருமே பதறி விலகினர்.
“அண்ணா உங்களுக்கு தைரியம் தான்” என்று மீரா புன்னகைக்க,
கிறு ஆரவை முறைத்தாள்.
“வா அஸ்வின், வா மீரா” என்றாள் கிறு.
ஆரவ் நிலமையை சமாளிக்கும் முகமாக,
“குட்டி மா, விகி, அரு அஸ்வின், மீரா வந்திருக்காங்க டா ” என்று கத்த
மேல் மாடியிலிருந்து ஓடி வந்தாள் அந்த வீட்டின் இளவரசி ரீதிகா அவள் உடன் பிறந்த இரட்டைச் சகோதரன் அர்னாவ் உடன். இருவரும் ஆறு வயது சிறுவர்கள்.
“பத்திரமா போங்க குட்டிமா பார்த்து, அரு பார்த்து டா” என்று கூறிக் கொண்டே பின்னால் ஓடி வந்தான் பதிமூன்று வயதான கிறு, ஆரவின் மூத்த புதல்வன் ரித்விக்.
“அச்சுப்பா” என்று ஓடி வந்தவளை அள்ளி ஒரு கையால் அணைக்க மறு கையால் அர்னாவை அணைத்தான்.
இருவரையும் தூக்கிக் கொள்ள,
“ரீது மா” என்ற குரலில்
“அச்சு பா இறக்கி விடு” என்று கத்தினாள் ரீது.
“அதானே பார்த்தேன், இன்னும் இறங்க இல்லையே” என்றான் ரித்விக்
இறங்கியவள் ஓடிச் சென்று நவீனிடம் புகுந்துக் கொண்டாள். அர்னாவ் ஆதர்ஷிடம் சென்றான்.
“அதென்ன குட்டி மா, உனக்கு நவீன், ஆதர்ஷை பார்த்தா எங்களை தேவையில்லை?” என்று அஸ்வின் கேட்க,
“இவன் என் அண்ணா” என்று கூறி கன்னத்தில் முத்தமிட்டாள்.
“ரீது அவன் உனக்கு அண்ணா இல்லை டி, அத்தை பையன்” என்றாள் மீரா.
“இல்லை மீராமா இவங்க எங்களுக்கு அண்ணா தான்” என்றான் அர்னாவ்.
“அண்ணாஸ் நான் உங்க கிட்ட ஒன்னு காட்டனும்” என்று அவர்கள் இருவரையும் தனது அறைக்கு அழைத்துச் சென்றான் ரித்விக்.
“ரொம்ப சந்தோஷமா இருக்கு கிறு” என்று அஸ்வின் கூற
“ஆமா டா, கடைசி வரைக்கும் இவங்க சந்தோஷமா இருக்கனும்” என்றாள் கிறு.
அறைக்கு அழைத்துச் சென்ற ரித்விக்,
“அண்ணா நான் தான் கிளாஸ்ல பர்ஸ்ட், மெக்ஸ் ல நான் 100, மற்றைய எல்லா சப்ஜெக்ட்ஸ்லயும் 90ற்கு மேலே என்றான்.
“சூப்பர் டா, நானும் இதே போல எல்லா பாடத்துலயும் 90 ற்கு மேலே தான் மார்க் எடுத்து இருக்கேன்” என்றான் ஆதர்ஷ்.
“குட்டி மா, அரு இரண்டு பேரும் என்ன மார்க் எடுத்து இருக்கிங்க?” என்று நவீன் கேட்க
இருவரும் அறைக்கு ஓடிச் சென்று மார்க் ஷீடை எடுத்து வந்தனர்.
“நவீ அண்ணா என்னோட தான் பர்ஸ்ட் பார்க்கனும்” என்று அரு கூற
“இல்லை அண்ணா என்னோட தான்” என்றாள் ரீது.
“இல்லை என்னோடது தான், போடி” என்று அரு கூற
“நீ போடா, அண்ணா என்னோட தான் பார்ப்பான்” என்றாள்.
“இரண்டு பேரும் நிறுத்துங்க, நானே ஓரே நேரத்துல இரண்டு பேரோட மார்க் ஷீடையும் பார்க்குறேன்” என்று பார்த்தான்.
“சூப்பர் அரு, ரீது” என்றான் நவீன். அதே போல் விகி, ஆது இருவருமே பாராட்டினர்.
பின் ஐவருமே பேசி கீழே சென்றனர்.
“அப்பா, பசிக்குது” என்று ஆரவிடம் சென்றாள் ரீது.
“கண்ணம்மா சாப்பாடு எடுத்து வை” என்று ஆரவ் கூற
“அப்பா அம்மாவை கண்ணம்மான்னு கூப்பிடாத எனக்கு பிடிக்க இல்லை” என்றாள் ரீதிகா உதட்டைப் பிதுக்கி.
“அடியேய் அவன் புருஷன் என்னை அப்படி தான் கூப்பிடுவான், உனக்கு எதுக்கு?” என்று கிறு கேட்க,
“கண்ணம்மான்னு நமளுக்கு பிடிச்சவங்களை தான் கூப்பிடுவாங்கன்னு என் மிஸ் சொன்னாங்க, என் அப்பாவுக்கு உன்னை விட என்னை தான் பிடிக்கும்” என்றாள் ரீது.
“இல்லை என் அம்மாவை தான் பிடிக்கும்” என்று அரு சென்று கிறுவின் மடியில் அமர்ந்துக் கொண்டான்.
“அப்படி சொல்லு டா என் தங்கமே” என்று முத்தம் வைத்தாள் அவன் கன்னத்தில் கிறு.
“பாரு பா, அம்மா அவனுக்கு முத்தம் கொடுக்குறாங்க, நீ எனக்கு முத்தம் கொடுத்து சொல்லுபா என்னை தான் பிடிக்கும்னு” என்று கூற
ஆரவ் விழித்து இருவரையும் பார்த்தான்.
அவன் இளவரசி ஒரு புறம் முறைக்க தன் இதயத்தின் அரசி மறுபுறம் அவனை முறைத்தாள். விகி இது தினமும் நடப்பது தான் என்று சிரிப்புடன் பார்க்க, மற்றவர்களும் ஆரவின் நிலையைப் பார்த்து சிரிப்பு எழ அடக்கிக் கொண்டு இருந்தனர்.
“அப்பா உனக்கு என்னை பிடிக்காதா?” என்று கவலையில் அழத்துவங்க அரு கிறுவின் மடியில் இருந்து ஓடி அவள் அருகில் வந்தான்.
“இல்லை டி உன்னை தான் அப்பாவிற்கு உன்னை தான் பிடிக்கும்” என்று அவள் கண்ணீரைத் துடைத்து விட்டான்.
ஆரவும் மற்றவர்களும் பயந்து அவள் அருகில் வந்தவர்கள் இதைப் பார்த்து புன்னகைத்தனர்.
“எப்பவுமே எனக்கு உன்னை தான் பிடிக்கும், அம்மா அப்பொறம் தான்” என்று அவள் கன்னத்தில் பதிக்கும் ஆரவ் கிறுவைப் பார்த்து கண்ணடித்தான்.
கிறு உள்ளுக்குள் சிரித்தாலும் போலியாய் முறைத்து உணவை எடுக்கச் செல்ல அவளுக்கு உதவியாய் மீராவும் சென்றாள்.
சிறியவர்களை அழைத்துக் கொண்டு நவீன் கார்டினிற்குச் சென்றான்.
“மச்சான் என்னால் முடியல்லை டா, இந்த அம்மா, பொண்ணிற்கு நடுவில் மாட்டி விழிபிதுங்கிட்டு இருக்கேன்” என்று ஆரவ் கூறி பெரு மூச்சு விட்டான்.
“ஆனால் அவ என்னை விட அம்மா மேலே பாசம் அதிகம், கிறுஸ்திக்கும் அவ மேலே தான் பாசம் அதிகம் ஆனால் இரண்டு பேருமே வெளிகாட்டிக்க மாட்டாங்க” என்று ஆரவ் கூறினான்.
அஸ்வின் சிரித்து,” விகி சாயலில் உங்க இரண்டு பேரையும் போல் ஆனால் குணத்தில் அப்படியே பெரியப்பா போல, அரு சாயலில் அப்படியே கிறுவோட ஜெராக்ஸ் ஆனால் குணத்தில் உன்னை போல, நம்ம குட்டிமா உன்னோட ஜெராக்ஸ் ஆனால் குணம் அப்படியே கிறுவை போல” என்று கூறிச் சிரித்தான்.
“நவீன் மீரா சாயல் ஆனால் குணம் உன்னை போல அதிகமா உன்னை விட கோபம் வரும், ஆதர்ஷ் உன் சாயல் ஆனால் மீராவைப் போல யோசிச்சு முடிவு பன்னுவான்” என்றான் ஆரவ்.
“ஆமா டா, சௌமி, வினோ, பசங்க இந்த வாட்டி பூஜைக்கு யூ.எஸ் ல இருந்து வராங்களாம் டா, இன்னும் மூன்று நாளில் இங்கிருந்து கிளம்புவோம்” என்றான் அஸ்வின்.
“சரி டா, வா சாப்பிடலாம்” என்று சிறியவர்களைத்துக் கொண்டு சாப்பிட அமர்ந்தனர்.
கிறு தற்போது தன் தந்தையின் கம்பனியின் எம்.டியாகவும், அஸ்வின் சி.இ.ஓ வாக இருக்கின்றான். மீரா சொந்தமாக ஹொஸ்பிடல் ஒன்றைக் கட்டி அதை நடத்துகிறாள். வினோ வெளிநாட்டில் உள்ள அவர்களின் கம்பனியை பார்த்துக் கொள்கிறான். சௌமி அங்கே வினோவிற்கு உதவியாகவும், நெட் போல் கோர்ச்சாகவும் இருக்கிறாள்.
அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பதிமூன்று வயதான ஸ்வேதா , ஒன்பது வயதான சித்ரா
பின் வினோ அவர்களுக்கு வீடியோ கோல் எடுத்தான். அனைவரும் அமர்ந்து பேச,
“குட்டிமா என்ன பன்ற? எதுக்கு முகம் சிவந்து இருக்கு? அழுதியா நீ?” என்று கேள்விகளை வினோ அடுக்க,
“ம்ம்… இந்த அம்மா வால் வினோ” என்றாள் ரீது.
“உனக்கு எத்தனை வாட்டி சொல்றது? சித்தப்பாவை பெயரை சொல்லி கூப்பிடாதன்னு?” என்று கிறு ரீதுவை திட்ட
“அம்மா, வினோவிற்கு உன்னை விட வயசு அதிகம், நீ பெயர் சொல்லி தானே கூப்பிடுற? அப்போ நான் கூப்பிட கூடாதுன்னு எதுக்கு திட்ற?, சித்தி வினோ சரி தானே” என்று ரீது கேட்க,
வினோ குடும்பம் முழுதும் ஒன்றாக சேர்ந்து, “நீ சொன்னா சரி தான் குட்டிமா” என்றனர்.
“சித்து கா, வேதா கா இந்த வாட்டி நீங்க ஊருக்கு வரும் போது நாம பஞ்சுமிட்டாய் சாபிடலாம்” என்று அரு கூற
“சரி டா” என்றனர்.
பின் அனைவரும் சிறிது நேரம் பேசி வைத்தனர்.
அடுத்த நாள் மாலையில்,
“அச்சு பா, நாம எல்லோரும் ஓரே வீட்டில் இருப்போமே எப்போவும்?” என்று ரீது கேட்க,
“ஆமா அச்சு பா பிளீஸ்” என்றனர் அரு, விகி.
“அம்மு, அப்பு நாங்க எல்லோரும் சென்னைக்கு போலாம். நாம எல்லோரும் ஒன்னாவே இருக்கலாம்” என்றான் ஆது.
“ஆமா அம்மாஅப்பா, என்னால் இவங்க மூன்று பேரையும் விட்டு இருக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கு. சென்னையில் நல்ல ஒரு இடத்தை பார்த்து வீடு கட்டலாம். வினோ மாமா வந்தாலல் அருண் தாத்தா வீட்டுல இருப்பாங்க, நாம எல்லோரும் ஒன்னாவே இருக்கலாம், பிளீஸ்” என்று நவீன் கெஞ்ச
பெரியவர்கள் சேர்ந்து பேசி முடிவு எடுத்தனர். இன்னும் சில வருடங்களில் சென்னைக்குச் செல்வதாக..
“வீடு நமளுக்கு பிடிச்சது போல கட்டலாம்” என்று மீரா கூற
“டபுள் ஒகே” என்றாள் கிறு. அடுத்த நாள் அனைவரும் கொடிகாமத்தை நோக்கிச் சென்றனர்.
அவர்கள் சென்று அடைந்த சில மணி நேரத்திற்கு பின் மாதேஷ், கவின் குடும்பத்தினர் வந்தனர்.
“மச்சான் எத்தனை வருஷமாச்சு உன்னை பார்த்து” என்று கவின் ஆரவைக் கட்டியணைக்க,
“நீ ஒரு ஆகாசப் புழுகன்னு நல்லாவே தெரியும், இதுல எதற்கு நீ வேறயாக நிருபிக்கிற?” என்று அஸ்வின் கேட்க,
“அதானே லாஸ்ட் வீக் தான் புரொஜெக்ட் விஷயமா ஆரவ், அஸ்வின் சென்னை வந்தானுங்க, நான்கு பேரும் சேர்ந்து எவளோ என்ஜோய் பன்னோம்? மறந்துட்டியா?” என்று மாதேஷ் கேட்க
தர்ஷூ, அவர்களது மூத்த மகனான பதினேழு வயது மயூரன் மற்றும் ஆறு வயதான மகள் அவ்னியும் , ஜீவி அவளின் பதினேழு வயதான மகன் விதுன் மற்றும் அவர்களது பதின் நான்கு வயதான மகன் அஷ்வந்தும் , மீரா அவள் பிள்ளைகள், கிறு அவள் பிள்ளைகள் அனைவருமே அவர்களை கொலை வெறியில் முறைத்தனர்.
வேலை பழு அதிகமாக இருந்ததால் நண்பர்களுடன் ஒழுங்காக பேச முடியவில்லை என்று வீட்டிற்குச் சென்று கவலைப்பட்டனர். இப்போது இவர்கள் கூறுவது பொய் என்று தெரிந்தவுடன் முறைக்காமல் என்ன செய்ய முடியும்?
‘எருமையோட ஓட்டை வாயால் எங்களை மாட்டிவிட்டுட்டானே’ என்று அவனைப் பார்த்து மனதில் மூவரும் கருவ
‘சொரி மச்சி’ என்று மாதேஷ் கண்களால் கேட்டான்.
அவர்களிடம் இருந்து பாதுகாக்க வழி தேட தூரத்தில் தாத்தா வருவதைப் பார்த்த நால்வரும் ஓடி தாத்தா, அரவிந், ராமின் பின்னால் ஒளிந்துக் கொண்டனர்.
பின் அவர்களுடன் சண்டையிட்டு முடிய ஷ்ரவன், கீது அவர்களது பதினொரு வயதான மகள் நவ்யா ஆறு வயதான மகள் கிருஷ்ணி
ஜெசி, ஹபீஸ் அவர்களது மூத்தமகள் பதினான்கு வயதான பானு பத்து வயதான மகள் மானசா உடன் வீடு வந்து சேர்ந்தார்கள்.
அடுத்தநாள் வினோவும், அவன் குடும்பமும் வருகைத்தர சிறியவர்கள் பெரியவர்கள், குழந்தைகளினால் அவ்வீட்டில் சந்தோஷம் நிரம்பி வழிந்தது…..
முற்றும்….