Tamil Madhura கதைகள்,காயத்திரியின் 'தேன்மொழி',தொடர்கள் காயத்திரியின் ‘தேன்மொழி’ – 5

காயத்திரியின் ‘தேன்மொழி’ – 5

பாகம் 5

வாங்க தம்பி எப்படி இருக்கீங்க “கல்யாணம் பேசுன பொண்ணு காய்ச்சல்னு கிடக்குறா” என சோகத்தோடு சொன்னாள் சீதா….

அதெல்லாம் மருந்து கொடுத்தாச்சு இன்னைக்கே சரியாயிடும் ஆண்ட்டி என ஓரக்கண்ணால் அவளைப்பார்த்து கண்ணடித்தவாறே கூறினான்….இவளுக்கு அவன் பார்வையை கண்டவுடன் உடலெல்லாம் புல்லரித்தது அவள் கைகளை முகத்தை மூடியவாறு மெல்ல சிரித்தாள்.

இவன் உயிர்பெற்றார்போல் புதுக்களிப்புடன் பைக்கை ஸ்டார்ட் பண்ணினான்

 

“என்னை ஏதோ செய்துவிட்டாய்

உன் எதிர்பாராத முத்தம்

உயிரை கயிறாய் திரிக்கின்றதே

ஆழமாய் தந்த முத்தம் ஆழ்மனதை குடையுதடி”

இவன் மனதில் வடிவம் தந்த கவிதையை தன்னவளுக்காக …..தன் மொபைலில் டைரி அப்பில் சேமிக்கிறான்….

 

1மாதத்தில் நிச்சயதார்த்த பத்திரிக்கை…..எல்லோருக்கும் தருகிறார்கள்….கிஷோருக்கு தேனு சாண்டல் கலர் சர்வாணியை தேர்வு செய்கிறாள்….அதில் மேலே  லெப்ட் கார்னரில் மட்டும் மைல்ட் ஒர்க் இருக்கிறது….பிடிச்சிருக்கா மாமு என வீடியோ சாட் செய்கிறாள்….இந்த ஷர்வானியோடு இன்னும் இரண்டை எடுத்து சேர்த்து காட்டுகிறாள்(எல்லாம் காரணமாதான் மேடம் எக்ஸ்ட்ரா 2 மொக்கை டிசைன் எடுத்து வச்சா எப்படியும் அவன் இதுலாம் வேணாம்னூ சொல்வானு நம்பிக்கைதான்)இவனும் அவள் நினைத்தவாறே ஸான்டலை தேர்வு செய்தான்…..

கிஷோர் தன் அம்மாவிடம் சென்று”அம்மா …..தேனுக்கு நான் செலக்ட் பண்ணி புடவை எடுத்துட்டு வாரேன்மா எனக்கேட்க….அங்கு வந்த ஆஷா “என்னடாடாஆஆஆ  பொண்டாட்டிக்கு நீ செலக்ட் பண்ண போறியா….ம்ம்ம்ம் நடத்துடா நீ “என்றவள்

நேரேஅம்மாவிடம் ஓடினாள்…அம்மா பாரும்மா அதுக்குள்ள பொண்டாட்டிக்கு ஐயா தனியா போய் செலக்ட் பண்ணணுமாம் எனக்கத்தியவள் ஜடையை  பிடித்து இழுத்து போடி குள்ளச்சி என்றாள்

இவள் “ஆஆஆஆ….அம்மா இந்த தடிமாடு என்ன அடிக்கிறான்மா எனக்கத்தினாள்”அவன்கிட்ட எதுக்குடி வம்புக்கு போகுற அப்பறம் அம்மா ஆயானு கத்து..நீங்க இரண்டு பேரும் என்னமோ பண்ணுங்க…..நான் போரேன் ஏன்றாள் சுமதி

அவன் தன்னுடைய ஹனிக்கு பிங்க் ஸ்கைப்ளூ கலந்தாற்போல ஓர்க் வைத்த பட்டு எடுக்கிறான்…பின்னர் நகைக்கடை சென்று அவளுக்கு நிச்சயத்தன்று பரிசளிக்க k♥️T என எழுதப்பட்ட மோதிரத்தை தன் வருங்கால மனைவிக்கு ஆர்டர் கொடுக்கிறான்…நிச்சயத்திற்கு ஸ்பெஷல் கிப்ட்டாக தருவதற்கு

இப்பொழுது அவன் மனதில்

 

“நெஞ்சோரத்தில் என் நெஞ்சோரத்தில் என்னை அறியாமல் நுழைந்து விட்டாய் கடிகாரத்தில் துளி நொடி நேரத்தில் எந்தன் உயிரோடு கலந்து விட்டாய்எனக்கு என்னானது மனம் தடுமாறுது விழி உன்னை தேடித்தான் ஓடுதுதேடுது ..ஓ  ..நெஞ்சோரத்தில் என் நெஞ்சோரத்தில் என்னை அறியாமல் நுழைந்து விட்டாய் என் காலடி மண்ணில் பதிந்தாலும் நான் நூறடி உயரம் பறக்கிறேன்”

 

என்ற மெல்லிசை கீதம் ஒளிக்கிறது….தனக்கே தனக்கானவளுக்கு தானே தேர்வு செய்த மகிழ்ச்சியில் அவன்….

நிச்சயதார்த்தமும் வந்தது இவன் ஷர்வானியில் ராஜாவைப்போல் காட்சியளித்தான்…..இவளோ தங்கச்சிலையென அழகான ஒப்பனையோடு….நீலமேகம் ரோஜா இதழில் விரிந்ததைப்போல்….அழகுப்பூவாய் பூத்திருந்தாள்.

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

உள்ளம் குழையுதடி கிளியே – 10உள்ளம் குழையுதடி கிளியே – 10

ஹிமாவதிக்கு கோவையின் வாழ்க்கை பழகிவிட்டது. காலை எழுந்து மகனுடன் விளையாடிக் கொண்டே பள்ளிக்குக் கிளப்புவது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. இருவரும் சேர்ந்தே உணவு உண்ணுவார்கள். பழனியம்மாவின் கைப்பக்குவத்தில் இட்டிலி தோசை கூட சுவை கூடித் தெரிந்தது.  அவரும் அவள் உண்ணும் போது

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 10யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 10

அத்தியாயம் – 10   நாட்கள் அது பாட்டில் நகர்ந்து கொண்டிருந்தன. தினமும் ஒரு தடவையாவது சஞ்சயன் வைஷாலிக்கு தொலைபேசியில் அழைத்துக் கதைப்பான். வார இறுதியில் சந்தித்துக் கொள்வார்கள். சஞ்சயனும் இப்போது கொஞ்சம் கொஞ்சமாகப் பழையபடி பழக ஆரம்பித்திருந்தான்.   அன்று

சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 03சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 03

இதயம் தழுவும் உறவே – 03 கவியரசன் சில நொடிகள் யசோதாவின் விழிகளின் மௌனத்தில் லயித்தவன், “இடம், பொருள் மறந்து இப்படி கண்ணை கூட சிமிட்டாம பார்த்தா எப்படி?” என தனது புருவத்தை உயர்த்தி அவளை சீண்டும் விதமாக கேள்வியை எழுப்ப,