
காயம் தந்தாய் – எனது
கண்ணீரும் சிகப்பாய் மாறி
சிறகு கிழிந்ததே!
தென்றல் எந்தன் வாசல் வர
காத்து நிற்கிறேன் – இன்றோ
புயல் வீசி என் கூடு சிதைய
பார்த்திருக்கிறேன்!!
மருகி மருகி எந்தன் உள்ளம்
குழந்தை ஆனதே – நீயும்
விலகிச் சென்ற நொடியை எண்ணி
அழுது கரையுதே!!
பகலெல்லாம் காத்திருக்கும்
மல்லி அல்லியும் – இரவில்
சந்திரனைக் கண்ட பின்னே
மெல்ல அவிழுமே!
காலமெல்லாம் காத்திருப்பேன்
காதல் சேமித்து – நீயும்
காதல் சொல்ல தவம் கிடப்பேன்
எனது உயிர் காத்து!!
மனம் இரங்கி விழிகளாலே
காதல் சொல்லிடு – இல்லை,
மரித்த பின்னே கல்லறைக்கு
முத்தம் தந்திடு!!