Tamil Madhura கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ,Uncategorized ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 16

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 16

16 – மனதை மாற்றிவிட்டாய்

பொழுது விடிய அனைவரும் தங்களது அன்றாட பணிகளை தொடர, விசிலடித்துக்கொண்டே கீழே வந்தான் ஆதி, இரவு வெகுநேரம் கழித்து உறங்கியதால் கண்கள் சிவந்திருந்தது அதையும் தாண்டி மகிழ்ச்சியுடன் இருந்த அவன் கண்களை பார்த்தனர் அவனது பெற்றோர்கள்.

சந்திரசேகர் “என்ன ஆதி, நல்லா கனவா? கனவுல ரொமான்ஸ்ஸா? எந்திரிக்க மனசே வரலையா? மார்னிங் ஜாக்கிங் கூட போகல?” என குறும்புடன் வினவ இவன் தாயை பார்க்க அவள் சிரிப்பை கண்டவனுக்கு புரிந்துவிட்டது அம்மா தந்தையிடம் தன் காதலை பற்றி கூறிவிட்டார் என்பது புரிந்தது.

இவனும் சிரித்துக்கொண்டே தானும் சளைக்காமல் “ஆமப்பா, உங்க மருமக நேர்ல தான் என்ன கத்தவெக்கறான்னா கனவுல கூட இம்ச தான், சொல்ற பேச்ச காதுலையே வாங்குறது இல்ல. அவகிட்ட லவ் சொல்லி கரெக்ட் பண்ண ஐடியா குடுங்க.” என கேட்க

சந்திரசேகர் வாய் விட்டு சிரித்துவிட்டு “பாத்தியா மதி, அப்பன்கிட்டேயே ஆள கரக்ட் பண்ண ஐடியா கேக்குறான் புள்ள. உனக்கு ரொம்ப தைரியம் தாண்டா.” என கூற

“எல்லாமே உங்ககிட்ட இருந்துதானே பா கத்துக்கிட்டேன், இதுக்கும் நீங்களே எனக்கு குருவா இருங்க.” என சிரிக்க

“அப்படிங்கிற, ஆனா என் மருமக அப்படி எல்லாம் நீ பேசுனா ஒதுக்கமாட்டாடா. பேசாம நாங்களே பொண்ணுக்கேட்டு மேரேஜ் பண்ணி வெச்சடறோம்.. இல்லை உனக்கு தான் கஷ்டம். ரொம்ப நாளாகும் பாத்துக்கோ.” என அவர் கூற

“அப்படியெல்லாம் இல்ல, உங்க மருமக வேணும்னா லவ் அக்ஸ்ப்ட் பண்ணாம நீங்க சொல்றத மட்டும் கேக்கிறவளா இருக்கலாம். ஆனா என் பொண்டாட்டி என் பேச்ச கேப்பா. சீக்கிரமே அவள் என்னை புரிஞ்சுகிட்டு லவ் பண்ணத்தான் போறா. அதுக்கப்புறம் தான் கல்யாணம். ” என அவன் வீரமாக கூற

“ஹா ஹா ஹா, பாக்கலாம். சரி ஆதி, நீங்க கல்யாணத்தை பத்தி சொல்றதுக்காகத்தான் வெயிட் பண்றோம். ரொம்ப நாள் ஆக்காம சீக்கிரம் அவளை இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்திடு..எப்போப்பாரு சண்டைபோடுக்காம அவகிட்ட உன் மொறட்டுத்தனத்தை குறைச்சு ஹாண்டில் பண்ணு. இல்லை அவ நின்னுகூட கேக்கமாட்டா. தப்பிச்சு ஓடிடுவா. இது உங்க லைப் ஆதி, உன்ன அவளும் அவளை நீயும் அப்படியே ஏத்துக்கணும். அடுத்தவங்க சொல்லி வந்தா இந்த எமோஷனல் லைப்ல நிலை இருக்காதுங்கிறது என்னோட கருத்து. ஆனா உங்க இரண்டு பேர் மேலையும் எனக்கு முழு நம்பிக்கை இருக்கு. நீ அவளை பாத்துப்பேன்னு. அவளும் உன்ன சந்தோசமா வெச்சுப்பான்னு. இருந்தாலும் எப்போ எது தேவைனாலும் சொல்லு, இல்ல நேரா மேரேஜ் பண்ணணும்னாலும் எங்களுக்கு ஆட்சேபணை இல்ல. ” என கூறினார்.

ஆதியும் “தேங்க்ஸ்ப்பா, அவ சம்மதத்தோட தான் நாங்க அந்த லைப்ல இணையணும்ப்பா, காதல் இல்லாம கல்யாணத்துல கொண்டுபோய் நிறுத்தமாட்டேன். அதுக்கப்புறம் அவ என்ன கண்டிப்பா நேசிச்சாலும் அது எனக்காக முழுமையா இருக்காது. இன்னும் சொல்ல போனா அதுவும் ஒரு வகையில கட்டாயப்படுத்துறதுதான். கல்யாணம் பண்ணியாச்சு இனி இதுதான் லைப்னு என் திவி என்ன ஏதுக்கக்கூடாதுப்பா. என் காதலையும், அவ மனசுல நான் இருக்கேன்ங்கறதையும் அவ முழுசா உணர்ந்து வரணும். அதுக்காக தான் காத்திட்டு இருக்கேன்.” என அவன் உறுதியாய் கூற

சேகரும், மதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு கூறினர், “உன்ன நினச்சா பெருமையா இருக்குடா ஆதி, அவளுக்கு டைம் குடுத்து அவ மனசை அடையணும் அதுதான் முக்கியம்னு நினைக்கற, கல்யாணம் பண்ணிட்டு காதல் பண்ணாலும் அதைக்கூட ஒருவகை கட்டாயம்னு நினைக்கிற பாரு, உன்ன கட்டிக்க திவி குடுத்து வெச்சிருக்கனும்டா. சோ ஹாப்பி பார் யு மை சன்.” என தழுவி கொண்டார்.

[சிறு உறுத்தலோ, கவலையோ, கட்டாயம்கூட அவளுக்கு தரக்கூடாது என நினைத்தவனே பின்னாளில் அவளை காட்டாயத்திருமணம் செய்வான் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆதி உட்பட.]

அனைவரின் சம்மதமும் நேராக கிடைத்துவிட்ட ஆதிக்கு ஏனோ திவியை பார்க்கவேண்டுமென்ற ஆர்வம் அதிகமாக இருந்தது. ஆனால் அவள் வராமல் இருக்க, தாயிடம் வினவினான். அவளும் சிரித்துவிட்டு “அவளுக்கு வேலை இன்னைக்கு ரொம்ப இருக்காம்டா, காலைல சீக்கிரம் கிளம்பி போய்ட்டா. நீ தூங்கிட்டு இருந்த..” என கூற

அவனோ “சும்மா சொல்லாதீங்க அம்மா, என்ன ஒரு 10 மின்ஸ் கழிச்சு கீழே வந்தான். அவ்வளோதான். ஏதோ 2 மணி நேரம் தூங்கனமாதிரி பேசுறீங்க, ஏன் அவளால ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணமுடியதா? ” என கேட்டவனிடம் “எதுக்கு அவ வெயிட் பண்ணுவா, உன்கிட்ட சண்டை போடவா?” என்க அவன் தாயை முறைக்க “ராஜா, நீதாண்டா அவளை லவ் பண்ற, அவ இன்னும் அந்த ஸ்டேட்ஜ்க்கு வரல, அதுக்கு நீதான் ஏதாவது பண்ணனும், ஏதோ உன் பொண்டாட்டி உன்ன பாக்கமா போன மாதிரி இவ்வளோ உரிமையா கேக்குற?”

“ஏன் அதுதான் உண்மைன்னு உங்களுக்கு தெரியாதா? சும்மா அவளுக்கு சப்போர்ட் பண்ணாதீங்க…அவளை இன்னைக்கு வரட்டும்..” என்றவனிடம் வெளிப்பட்ட உரிமை உணர்வு மதிக்கு புரிந்தது. அவள் மேல சிறுகோபம் தன்னை பார்க்கவில்லை என்று அதை உணர்ந்தவர் “ராஜா, இதுக்கெல்லாம் அவகிட்ட கோவிச்சுகிட்டா என்ன பண்றது, அவ விஷயத்துல நீ ரொம்ப எமோஷனலா இருக்க, யோசிக்கறதே இல்ல. அவளுக்கு இன்னும் நீ காதலிக்கறதே தெரியாது. அப்புறம் எப்படி நீ எதிர்பாக்கலாம்…போ போயி கிளம்பு. சாயந்தரம் வந்திடுவா. எப்படியும் வம்பிழுக்க தானே போற. . அப்புறம் அடிச்சுக்கோங்க” என்க அவனும் ஆமோதித்து சிரித்து விட்டு கிளம்பினான்.

ஆதி, அர்ஜுன் அவனது தந்தை அனைவரும் மதியஉணவு வேளையில் வீட்டிற்கு வந்துவிட்டு கிளம்ப ஈஸ்வரியும் அவர்கள் பிள்ளைகளும் அந்த நேரத்தில் வந்தனர். அவர்களை வரவேற்ற அனைவரும் நலம் விசாரிக்க, “எப்படி இருக்க சோபி?” என மதி கேட்க “ம்ம்…”என்ற பதில் மட்டுமே வந்தது..வீட்டை பார்த்துக்கொண்டு இவர்களை கண்டுக்காமல் நின்றாள். அடுத்து சுபி, சுந்தர் வரவும் மதியும் இவளை விட்டுவிட்டு அவர்களிடம் அளவளாவிக்கொண்டு இருந்தாள். ஆனால் சேகருக்கு தான் கோபம்…இதை கவனித்த ஆதி தன்னிடம் வந்து “ஹாய் ஆதி, உங்கள பாக்கணும்னு தான் வந்தேன்..எப்படி இருக்க?” என்ற சோபனாவிடம் “ம்ம்..” என்று அதே பதிலை கொடுத்துவிட்டு திரும்பிவிட்டான்.

சேகர் மனதில் தன் மகனுக்கு சபாஷ் சொல்லிக்கொண்டான். உடனே திருப்பி கொடுத்துவிட்டான். ஆதி, அர்ஜுனை கண்ட சுந்தர் அர்ஜுனிடம் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு பேருக்கு ஆதியிடம் “எப்படி இருக்க ஆதி ?” என்றான். அவனும் “நல்லா இருக்கேன்,நீ எப்படி இருக்க?” வினவ

அவனும் “நல்லா இருக்கேன்..” என்றான். அவ்வளோதான் இருவரும்… ஆதி, சுபத்ராவிடம் திரும்பி “எப்படி இருக்க சுபி, காலேஜ் எல்லாம் எப்படி போகுது … என வினவ சூப்பரா இருக்கு மாமா. நல்ல இருக்கேன். இன்னும் ஸ்டடி லீவு அதான் ஓடிவந்துட்டேன். உங்க எல்லாரையும் பாக்கணும் போலவே இருந்தது.” என்றவளை பார்த்து சிரிக்க “சரி, நீங்க எல்லாரும் சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க. நான் ஆபீஸ் போயிடு வரேன்.” என்ற ஆதியிடம் ஈஸ்வரி “என்ன ஆதி, சோபி எல்லாம் வந்திருக்கா..நீ பாட்டுக்கு ஆபீஸ் போறேன்னு சொல்ற? நம்ம ஆபீஸ் தானே. யாரு கேக்கபோறாங்க. நீ இங்கேயே இரேன்.” என்றவரிடம்

ஆதி “ஏன், சோபனா வந்தா என்ன ஸ்பெஷல்? வீட்ல எல்லாரும் இருக்காங்கல்ல, அவங்களோட இருக்கட்டும். யாருக்காகவும் என் ப்ளன்ன சாஞ்சு பன்னிக்கமுடியாது. என் ஆஃபீசினாலும் நான் ஒழுங்கா இருக்கணும்னு நினைப்பேன்.எனக்கு என் வேலை ரொம்ப முக்கியம்.” என்றவன் “நான் போயிடு வரேன்மா, பை பா, ஈவினிங் வந்து பேசலாம் சுபி என ஈஸ்வரியும், சோபனாவை தவிர்த்து மீதி அனைவரிடமும் பொதுவாக கூறிவிட்டு சென்றுவிட்டான்.

அவனிடம் யாரும் உரிமை எடுத்துக்கொள்ள முடியாது. அவனாக கொடுத்தாதான் உண்டு என்பதை அறிந்த அனைவரும் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனாலும் ஈஸ்வரி “பாவம் வேலைபோல.” என பொதுவாகவும், மகளுக்கும் சமாதானம் கூற அவளோ “என் ரூம் எங்க?” என கேட்டு யாரிடமும் எதுவும் கூறாமல் சென்று விட்டாள். பின்னாடியே ஈஸ்வரியும் சென்றார். சுபியும், சுந்தரும் அவளை விடுங்க என்றுவிட்டு அத்தை, மாமா, அமுதாவிடம் பேசிக்கொண்டிருந்தனர்.

அறையில் நுழைந்த சோபிக்கு கோபம் தலைக்கேறியது.. அவனின் செய்கைகள் எரிச்சலை தந்தது.தன்னை மதிக்காமல் செல்வதா? நீ எனக்கு அவ்வளோ ஸ்பெஷல் இல்ல.உனக்காக என் பிளானிங் மாத்திக்கமுடியாதுன்னு எப்படி மூஞ்சில அடிச்சமாதிரி பேசுறான்.அவனுக்கு இருக்கு. எனக்காகவே அவன் வாழ்க்கையே மாத்திரமாதிரி பண்றேன். என ஈஸ்வரியிடம் சொல்லிக்கொண்டு இருந்தாள். ஈஸ்வரிக்கும் அதே கோபம் இருந்தாலும் “சோபி, நீ பொறுமையா அவனை கவனி. அவன்கிட்ட நம்ம ரொம்ப கோபத்தை காட்டுனா வேலைக்குஆகாது. பையன் வீம்பு, பிடிவாதம். உன்ன கல்யாணம் பண்ணமாட்டேனு சொல்லிட்டான்னா அப்புறம் மாத்துறதுகஷ்டம். அவன் பேச்சுக்கு யாரும் எதிரே நிக்கமாட்டாங்க. நான் எப்படியாவது மதி மனசுல உன்ன அவங்க வீடு மருமகளாக்க கல்யாணத்த முடிவு பண்ண பாக்கிறேன்… அவன் அம்மா பேச்ச தான் கேப்பான். ”

“ஒருவேளை அத்தை ஒத்துக்கலேன்னா?” என சோபி வினவ

“கண்டிப்பா ஒத்துக்குவா, அத நான் பாத்துக்கறேன். அவளுக்கு அவங்க அண்ணா மேல பாசம்.அங்க இங்கனு நான் சண்டை போட்டுஉங்க அப்பாவுக்கு சங்கடம் வரக்கூடாதுன்னு எதையும் செய்வா. இவ்வளோ ஏன், என்னை மதி புருஷன் சேகருக்கு துளி கூட புடிக்காது. ஆனாலும் என்னை எதுவும் சொல்லமாட்டாரு. ஒருதடவை மதிய வேலை வாங்குறேன்னு என்னை அந்தாளு குறை சொன்னான். நான் உங்க அப்பாகிட்ட சண்டை போட்டு கிளம்பிப்போக ட்ராமா பண்ணி மதிகிட்ட அழுது புலம்பி நடிக்க அவளும் இதுக்கு மேல அண்ணியை எதுவும் சொல்லக்கூடாதுனு சத்தியம் வாங்கிட்டா. அதுக்கப்புறம் மனுஷன் என்னை கண்டுக்கறதே இல்ல. அவருக்கு மதி சங்கப்பட்டா மனசு தாங்காது. அதனால இவ ஒருத்திய கல்யாணத்துக்கு ஒத்துக்கவெச்சுட்டா போதும். மத்த எல்லாரும் தானா அடங்கிடுவாங்க… ஆனாலும் இந்த ஆதி பையன் வெளிநாட்டுல படிச்சிட்டு வந்திருக்கான். ஏதாவது லவ், கிவ் இருக்குமோ?” என ஈஸ்வரியின் சந்தேகம் சோபனாவிற்கு சிரிப்பை வரவழைத்தது.

“யாரு, ஆதிக்கு லவ்வா, அட போம்மா… அவனுக்கு எல்லாம் பொறுமையா ரொமான்ஸ் பேசவே வராது. எப்பவும் கோபம், அதிரடி தான். தாத்தா பாட்டிகிட்ட ரொம்ப கண்டிப்பா, ஒழுக்கமா வளந்தவன். அவனை எல்லாம் சமாளிக்கிறது ரொம்ப கஷ்டம். பொண்ணுங்களோட எந்த எதிர்பார்ப்பும் அவனுக்கா புரியாது. இவன்கிட்ட எந்த பொண்ணும் நிக்கமாட்டா. நல்லவ, அமைதியான பொண்ணுன்னா இவனோட கோபத்தை பாத்தே ஓடிடுவா. அதையும் மீறி எவளாவது வந்தா இவன் பணத்துக்காக தான். அந்த மாதிரி இருந்தா இவன் ஒத்துக்கமாட்டான். அதனால கவலையே படாதீங்க. அவனுக்கும் லவ்க்கும் ஏக தூரம்.” என அடித்து கூறினாள் திவி அவன் மனதை ஆட்சி செய்வதை அறியாமல்.

 

 

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 08யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 08

அத்தியாயம் – 08   அன்று நெல்லியடி மத்திய மகா வித்தியாலத்தில் வடமராட்சி வலய மட்டத் தமிழ்த்தினப் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஒருவர் இரண்டு போட்டிகளில் பங்குபெற முடியும். வைஷாலி வழக்கம் போல நடனத்திற்கும் முதல் தடவையாகப் பேச்சுப் போட்டியில் கலந்து

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 56ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 56

56- மனதை மாற்றிவிட்டாய் அனைவரும் தத்தமது அறைகளுக்கு சென்று விட ஈஸ்வரியும் சோபியும் மட்டும் ஹாலில் சந்தோஷமாக அமர்ந்திருக்க ஆதி மாலை வரும்போது வெளியே பார்த்து விட்டு “அக்கா வந்திருக்காங்களா?” என மகிழ்ச்சியுடன் வர ஈஸ்வரி “என்ன வந்து என்ன பிரயோஜனம்..