Tamil Madhura கவிதை ப்ரியவதனாவின் காதல் மனது

ப்ரியவதனாவின் காதல் மனது

வணக்கம் தோழமைகளே

நமது தளத்திற்கு தனது அழகான காதல் கவிதை மூலம் அடியெடுத்து வைத்திருக்கும் எழுத்தாளர் ப்ரியவதனாவை வரவேற்கிறோம். நிழலாய் தொடரும் நினைவுகளைக் கொண்ட காதல் மனம் என்ன சொல்கிறது என்று படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே. 

அன்புடன்,

தமிழ் மதுரா

 

கனவுக்குள் இணைந்து

கவிதையாய் என்னுள் புகுந்தாய்

கண நேரம் கூடப் பிரியாது

அடைகாத்தாய் எனை

கண்விழித்துப் பார்த்தேன்

கரைந்தே போனாய் காற்றாய்

கனவு தொலைந்தால் கருகித் தவிக்குது எம் மனசு

 

நிழலாய் எனைத் தொடரும்  உன் நினைவு –

ஆனால் நிகழ்வில் இல்லை – நீ என்னோடு

நித்தமும் கலங்கித் தவிக்கிறேன்

நிராசையாய் போன

நினதன்பாலே – எனினும்

நிழலாய் வருவாய் என்ற நம்பிக்கையில்

நிற்கிறேன் கால்கடுக்க.

— ப்ரியவதனா

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கமலா ப்ரியாவின் “தேவை” கவிதைகமலா ப்ரியாவின் “தேவை” கவிதை

தேவை இந்த உலகம் வாய்ப்புகளால் சூழப்பட்டது இங்கே யாரும் கண்ணீர் விட்டு கரைந்து போக அவசியமில்லை போராடத் துணிந்த எவருக்குமே பிரகாசமான எதிர்காலம் படைக்கப்பட்டிருக்கிறது தகுதியுள்ள எவருக்கும் உதவிக்கு நீள்வதற்கு கரங்கள் ஆயிரம் காத்திருக்கின்றன அத்தனைக்கும் தேவை “நான் வாழ வேண்டும்;

ப்ரியவதனாவின் ‘நேசம் மறந்ததில்லை’ – கவிதைப்ரியவதனாவின் ‘நேசம் மறந்ததில்லை’ – கவிதை

வணக்கம் தோழமைகளே! நமது தளத்திற்கு தனது அழகான காதல் கவிதை ஒன்றுடன் வந்திருக்கிறார் எழுத்தாளர் ப்ரியவதனா. நிழலாய் தொடரும் நினைவுகளைக் கொண்ட காதல் மனம் என்ன சொல்கிறது என்று படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே.  அன்புடன்  தமிழ் மதுரா.

அவனவளின் ஆதங்கம்அவனவளின் ஆதங்கம்

அவனவளின் ஆதங்கம்   குடும்பமே குழந்தையின் வருகையை குதூகலத்துடன் எதிர்நோக்கி காத்திருந்தது அவன்(ஆண்) தான் வேண்டுமென ஒரு சிலர் அவள்(பெண்) தான் வேண்டுமென ஒரு சிலர் குறையற்ற குழந்தை எதுவாயினும் சரி என்று ஒரு சிலர் நாட்கள் நகர்ந்தது வசந்தம் வந்தது