Tamil Madhura கவிதை காதல் மொழி ❤️ – (கவிதை)

காதல் மொழி ❤️ – (கவிதை)

கடத்திச்செல்லும் நின் குறுகுறு பார்வையில் இழையோடும் ஓராயிரம் காதல் மொழி…

உன் பார்வையின் காந்தமா…பார்வை உணர்த்தும் காதலின்  காந்தமா விடை அறியா மனது…

உன் நினைவுகள் குறுக்கிடும் தருணமெல்லாம் தானாக என் இதழ் நீளும் புன்னகை உணர்த்தும் உன் மீதான காதலை…

அரவணைப்பாய் உன் புயம் சாயும் வேளையில் எல்லாம் உன் காமமில்லா காதலில் கரைந்து தொலைகின்றேன்…

உன் விரல் கோர்த்து நடக்கின்ற போதெல்லாம் நான் என்பதே நீதானடி…என உணர்த்தாமல் உணர்த்தும் உன் விழிகளின் காதல் மொழியில் நித்தமும் உன்னில் திளைத்துக் களிக்கின்றேன்…

ஆம் காதலின் மொழி…அதற்கு கோவம் கூட காதல் தான்…அன்பை வெளிப்படுத்த நித்தமும் போராடும் அன்பின் மொழியும் அதுவே…

வரமாய் அமைந்த காதலில் மௌனம் கூட காதல் மொழி தான்…❤

ராஜிபிரேமா…❤

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கமலா ப்ரியாவின் “தேவை” கவிதைகமலா ப்ரியாவின் “தேவை” கவிதை

தேவை இந்த உலகம் வாய்ப்புகளால் சூழப்பட்டது இங்கே யாரும் கண்ணீர் விட்டு கரைந்து போக அவசியமில்லை போராடத் துணிந்த எவருக்குமே பிரகாசமான எதிர்காலம் படைக்கப்பட்டிருக்கிறது தகுதியுள்ள எவருக்கும் உதவிக்கு நீள்வதற்கு கரங்கள் ஆயிரம் காத்திருக்கின்றன அத்தனைக்கும் தேவை “நான் வாழ வேண்டும்;

தேய்ந்துபோன கனவுகள் – கவிதைதேய்ந்துபோன கனவுகள் – கவிதை

  தேய்ந்துபோன கனவுகள் வானவில்லை ரசித்திருந்தேன் வண்ணத்துணிகள் பெற்றேன் வெளுப்பதற்கு.. வயிற்றுப்பசியார விழைந்தேன் பற்றுப் பாத்திரங்கள் கிடைத்தன தேய்ப்பதற்கு..   நான் செய்வதும் அகழ்வுதான்; குடைந்தெடுப்பது கற்சிலைகள் அல்ல கருங்கற்கள்.. அருகருகே அமர்ந்து கல்வி கற்க அனுமதிக்கப்படவில்லை அதனால் அடுக்கடுக்காய் வரிசைப்படுத்துகிறேன்

அர்ச்சனாவின் ‘என் இமைகளில்’ (கவிதை)அர்ச்சனாவின் ‘என் இமைகளில்’ (கவிதை)

தேடித் தேடிப் பார்க்கிறேன் தொலைந்துவிட்ட என்னை நிச்சயம் முயன்று முத்தமிடுவேன் உனைக் காட்டிய கண்ணை தெவிட்டாமல் பார்த்திருப்பேன் என் விழி குடிக்கும் உன்னை கண்ணாளா  உன் கண்ணசைவில் துளிர்க்கும் எந்தன் பெண்மை!!   காட்சிகள் அனைத்தும் திரிந்து நீ மட்டுமே நிற்க,