Tamil Madhura கவிதை காதல் மொழி ❤️ – (கவிதை)

காதல் மொழி ❤️ – (கவிதை)

கடத்திச்செல்லும் நின் குறுகுறு பார்வையில் இழையோடும் ஓராயிரம் காதல் மொழி…

உன் பார்வையின் காந்தமா…பார்வை உணர்த்தும் காதலின்  காந்தமா விடை அறியா மனது…

உன் நினைவுகள் குறுக்கிடும் தருணமெல்லாம் தானாக என் இதழ் நீளும் புன்னகை உணர்த்தும் உன் மீதான காதலை…

அரவணைப்பாய் உன் புயம் சாயும் வேளையில் எல்லாம் உன் காமமில்லா காதலில் கரைந்து தொலைகின்றேன்…

உன் விரல் கோர்த்து நடக்கின்ற போதெல்லாம் நான் என்பதே நீதானடி…என உணர்த்தாமல் உணர்த்தும் உன் விழிகளின் காதல் மொழியில் நித்தமும் உன்னில் திளைத்துக் களிக்கின்றேன்…

ஆம் காதலின் மொழி…அதற்கு கோவம் கூட காதல் தான்…அன்பை வெளிப்படுத்த நித்தமும் போராடும் அன்பின் மொழியும் அதுவே…

வரமாய் அமைந்த காதலில் மௌனம் கூட காதல் மொழி தான்…❤

ராஜிபிரேமா…❤

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

அர்ச்சனாவின் ‘நீ – நான்’ (கவிதை)அர்ச்சனாவின் ‘நீ – நான்’ (கவிதை)

நம் தளத்தில் தனது அழகான கவிதை மூலம் கால் பதித்திருக்கும் அர்ச்சனா அவர்களை வரவேற்கிறோம். அவரது கவிதைகளைப் படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். அன்புடன், தமிழ் மதுரா     நீ – நான் கவிதை ஒன்று

மலையின் காதல் – கவிதைமலையின் காதல் – கவிதை

மலையின் காதல் தன் கதிரவனைக் காணாமல் கண் மூடியவளே! கோபத்தால் பனிக்குள் மூழ்கியவளே! உன் காதலை உணராமல் எங்கே சென்றான் அவன்! உன் முழுமையான மலை முகத்தை வெளிக்கொணர புன்னகையோடு காலையில் சூரியன் வெளிவருவான் உன்னை சூழ்ந்துள்ள கருமேகங்களை விலக்கி உன்னிடத்தில்

ஏக்கங்கள் (கவிதை)ஏக்கங்கள் (கவிதை)

  ஏக்கங்கள் வாடாமல் இதேபோல் இன்னும் எவ்வளவு காலம் மனம் வீசுவேனோ ? என்ற பூவின் ஏக்கம் தனக்கு தேன் கிடைக்குமா என்று பூவிதழை நாடும் வண்டின் ஏக்கம் மாதம் ஓர் நாளாவது விடுப்பு எடுக்காமல் இருப்பேனா ? என்ற நிலவின்