Tamil Madhura கவிதை கமலா ப்ரியாவின் “தேவை” கவிதை

கமலா ப்ரியாவின் “தேவை” கவிதை

தேவை

இந்த உலகம்

வாய்ப்புகளால் சூழப்பட்டது

இங்கே யாரும்

கண்ணீர் விட்டு கரைந்து போக

அவசியமில்லை

போராடத் துணிந்த

எவருக்குமே

பிரகாசமான எதிர்காலம்

படைக்கப்பட்டிருக்கிறது

தகுதியுள்ள எவருக்கும்

உதவிக்கு நீள்வதற்கு

கரங்கள் ஆயிரம்

காத்திருக்கின்றன

அத்தனைக்கும் தேவை

“நான் வாழ வேண்டும்;

சாதித்துக் காட்ட வேண்டும்”

என்ற உந்துதல் மட்டுமே!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

புன்னகையே பதிலாய் (கவிதை)புன்னகையே பதிலாய் (கவிதை)

வணக்கம் தோழமைகளே! நமது தளத்துக்கு தனது கவிதை மூலம் வருகை தந்திருக்கும் சுரபி மூர்த்தி அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்.  இத்தனை அழகாய் காதலை சொல்லும் காதலிக்கு அவனின் புன்னகை கிடைக்காமலா போய்விடும் சுரபி.  அன்புடன், தமிழ் மதுரா     புன்னகையே

அர்ச்சனாவின் ‘நீ – நான்’ (கவிதை)அர்ச்சனாவின் ‘நீ – நான்’ (கவிதை)

நம் தளத்தில் தனது அழகான கவிதை மூலம் கால் பதித்திருக்கும் அர்ச்சனா அவர்களை வரவேற்கிறோம். அவரது கவிதைகளைப் படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். அன்புடன், தமிழ் மதுரா     நீ – நான் கவிதை ஒன்று

அவனவளின் ஆதங்கம்அவனவளின் ஆதங்கம்

அவனவளின் ஆதங்கம்   குடும்பமே குழந்தையின் வருகையை குதூகலத்துடன் எதிர்நோக்கி காத்திருந்தது அவன்(ஆண்) தான் வேண்டுமென ஒரு சிலர் அவள்(பெண்) தான் வேண்டுமென ஒரு சிலர் குறையற்ற குழந்தை எதுவாயினும் சரி என்று ஒரு சிலர் நாட்கள் நகர்ந்தது வசந்தம் வந்தது