Tamil Madhura கவிதை பேதையின் பிதற்றல் – (கவிதை)

பேதையின் பிதற்றல் – (கவிதை)

Image result for waiting girl photos

 

பேதையின் பிதற்றலில் பெண் மனதின் பொருள்

 

எப்போது? எப்படி? என எதிர்பார்த்த தருணத்தை தர
கனவை நனவாக்க வருபவனே
உன்னுடனான என் முதல் சந்திப்பு எப்படி இருக்கும்?
உன் உருவத்தைப் பருகும் வகையில் உன்னைப் பார்ப்பேனோ?
உன்னைக் கண்டதால் உண்டான நாணத்தால் மண்ணைப் பார்ப்பேனோ?
மனநிறைவுடன் அமைதியாய் அத்தருணத்தை ரசிப்பேனோ?
மனமகிழ்ச்சியில் அலைக்கடலாய் ஆர்பரிப்பேனோ?
பிரிவில் வாடிய பேதையாகி பேசாமடந்தையாவேனோ?
பலயுகம் தாண்டி கண்ட களிப்பில் அளவில்லா வாயாடுவேனோ?
நம்மிருவருக்கும் இடையில் வாய்மொழி வேண்டும் என எதிர்பார்ப்பேனோ?
மொழிகளற்று உணர்வுகள் மட்டும் பரிமாற ஏங்குவேனோ?
என் எண்ணத்தை நான் அறியேன் ?
நீயேனும் என்னை உணர்வாயோ?
என் செயலின் பொருளை அறிவாயோ? – இல்லை
பிச்சி பிதற்றுகிறாள் என மீண்டும் பிரிந்து செல்வாயோ?

 

~ஸ்ரீ !!~

2 thoughts on “பேதையின் பிதற்றல் – (கவிதை)”

  1. அட… தலைவரை பிரிந்த தலைவியின் ஏக்கம் அப்படியே சங்க காலத்தையம்…. கொஞ்சம் சரயுவையும் ஞாபகப்படுத்துகிறது

Leave a Reply to hashasri Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

அர்ச்சனாவின் கவிதை – முத்தம் தந்திடு!!அர்ச்சனாவின் கவிதை – முத்தம் தந்திடு!!

முத்தம் தந்திடு!!   முட்களோடு சொற்கள் செய்து காயம் தந்தாய் – எனது கண்ணீரும் சிகப்பாய் மாறி சிறகு கிழிந்ததே! தென்றல் எந்தன் வாசல் வர காத்து நிற்கிறேன் – இன்றோ  புயல் வீசி என் கூடு சிதைய பார்த்திருக்கிறேன்!! மருகி

அர்ச்சனாவின் ‘காதல் என்பது இதுதானோ’ (கவிதை)அர்ச்சனாவின் ‘காதல் என்பது இதுதானோ’ (கவிதை)

என் காதல் வானிலே இரவிலும் வானவில் தோன்றுதே என்னுள் பூத்த பூவொன்று வாழ்வில் வாசம் வீசுதே உள்ளங்கையில் புதிதாகக் காதல் ரேகையும் தோன்றுதே வெயிலிலும் ரகசியமாய் மழைச்சாரல் என்னை நனைக்குதே உன்னிடம் மட்டுமே சொல்லிட கதைகள் கோடி உள்ளதே உனக்காக மட்டுமே

புன்னகையே பதிலாய் (கவிதை)புன்னகையே பதிலாய் (கவிதை)

வணக்கம் தோழமைகளே! நமது தளத்துக்கு தனது கவிதை மூலம் வருகை தந்திருக்கும் சுரபி மூர்த்தி அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்.  இத்தனை அழகாய் காதலை சொல்லும் காதலிக்கு அவனின் புன்னகை கிடைக்காமலா போய்விடும் சுரபி.  அன்புடன், தமிழ் மதுரா     புன்னகையே