Tamil Madhura கவிதை பேதையின் பிதற்றல் – (கவிதை)

பேதையின் பிதற்றல் – (கவிதை)

Image result for waiting girl photos

 

பேதையின் பிதற்றலில் பெண் மனதின் பொருள்

 

எப்போது? எப்படி? என எதிர்பார்த்த தருணத்தை தர
கனவை நனவாக்க வருபவனே
உன்னுடனான என் முதல் சந்திப்பு எப்படி இருக்கும்?
உன் உருவத்தைப் பருகும் வகையில் உன்னைப் பார்ப்பேனோ?
உன்னைக் கண்டதால் உண்டான நாணத்தால் மண்ணைப் பார்ப்பேனோ?
மனநிறைவுடன் அமைதியாய் அத்தருணத்தை ரசிப்பேனோ?
மனமகிழ்ச்சியில் அலைக்கடலாய் ஆர்பரிப்பேனோ?
பிரிவில் வாடிய பேதையாகி பேசாமடந்தையாவேனோ?
பலயுகம் தாண்டி கண்ட களிப்பில் அளவில்லா வாயாடுவேனோ?
நம்மிருவருக்கும் இடையில் வாய்மொழி வேண்டும் என எதிர்பார்ப்பேனோ?
மொழிகளற்று உணர்வுகள் மட்டும் பரிமாற ஏங்குவேனோ?
என் எண்ணத்தை நான் அறியேன் ?
நீயேனும் என்னை உணர்வாயோ?
என் செயலின் பொருளை அறிவாயோ? – இல்லை
பிச்சி பிதற்றுகிறாள் என மீண்டும் பிரிந்து செல்வாயோ?

 

~ஸ்ரீ !!~

2 thoughts on “பேதையின் பிதற்றல் – (கவிதை)”

  1. அட… தலைவரை பிரிந்த தலைவியின் ஏக்கம் அப்படியே சங்க காலத்தையம்…. கொஞ்சம் சரயுவையும் ஞாபகப்படுத்துகிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

அவனவளின் ஆதங்கம்அவனவளின் ஆதங்கம்

அவனவளின் ஆதங்கம்   குடும்பமே குழந்தையின் வருகையை குதூகலத்துடன் எதிர்நோக்கி காத்திருந்தது அவன்(ஆண்) தான் வேண்டுமென ஒரு சிலர் அவள்(பெண்) தான் வேண்டுமென ஒரு சிலர் குறையற்ற குழந்தை எதுவாயினும் சரி என்று ஒரு சிலர் நாட்கள் நகர்ந்தது வசந்தம் வந்தது

அர்ச்சனாவின் கவிதை – தஞ்சம் வரவா!அர்ச்சனாவின் கவிதை – தஞ்சம் வரவா!

தஞ்சம் வரவா?!!   விழியைத் திருப்பி என்னைப் பாரடா எனை அள்ளி உன்தன் மனதுள் ஊற்றடா உலகத்து மொழிகலெல்லாம் நமக்கு வேண்டுமோ? என் மனதை உரைத்திடும் மொழியும் இருக்குமோ? சிறகுகள் விரித்து நிற்கிறேன் பறந்திட வானவில்லில் காதல் வண்ணம் சேர்த்திட மலர்களைக்

மலையின் காதல் – கவிதைமலையின் காதல் – கவிதை

மலையின் காதல் தன் கதிரவனைக் காணாமல் கண் மூடியவளே! கோபத்தால் பனிக்குள் மூழ்கியவளே! உன் காதலை உணராமல் எங்கே சென்றான் அவன்! உன் முழுமையான மலை முகத்தை வெளிக்கொணர புன்னகையோடு காலையில் சூரியன் வெளிவருவான் உன்னை சூழ்ந்துள்ள கருமேகங்களை விலக்கி உன்னிடத்தில்