Tamil Madhura தொடர்கள் காதல் வரம் யாசித்தேன் – final part

காதல் வரம் யாசித்தேன் – final part

ஹாய் பிரெண்ட்ஸ்,

‘காதல் வரம் யாசித்தேன்’  கதையின் ஒவ்வொரு பகுதிக்கும் கருத்துக்களைப் பதித்து என்னை ஊக்குவித்த  தோழிகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள். ராணி இதழில் தொடர்கதையாக வெளி வந்த காதல் வரத்தை சில தோழிகள் கேட்டுக் கொண்டதற்காக ப்ளாகில் அப்படியே பதிவுகளாகத் தந்திருக்கிறேன். மீனாவையும், கைலாஷையும் உங்களுக்குப் பிடித்திருக்கிறது என்பதை உங்களது கமண்ட்ஸ் பார்த்துத் தெரிந்துக் கொண்டேன். இந்தக் கதை உங்கள் மனத்தைக் கவர்ந்திருக்கும் என்று நம்புகிறேன்.

இனி கதையின் இறுதிப் பதிவு உங்களுக்காக.

[scribd id=302472437 key=key-HUafAAhkjwmM884i34Nx mode=scroll]

அன்புடன்,

தமிழ் மதுரா.

 

31 thoughts on “காதல் வரம் யாசித்தேன் – final part”

  1. Hi Tamil dear,

    Just now read the whole story. Simply Superrrrrrrrrr. love meenu kutti. Kailash? paavam chinna paiyam vittudalam ;). Thanks for a very good nice story. Expecting your ok yk.

    With Luv,
    Niranjana.

  2. Hi Madhu mam,
    காதல் வரம் இனிதே கை கூடி விட்டது..
    நிறைவான முடிவு தந்ததில் மிகுந்த மகிழ்ச்சி. என்னால் சில பதிவுகள் குறித்து கருத்துக்கள் எதுவும் சொல்ல முடியாமல் போயிற்று. அதற்காக மிகவும் வருந்துகிறேன். ஆனால், தாமதமாக படிக்க நேர்ந்த போதிலும், உங்கள் ஒவ்வொரு அத்தியாயமும் பல திருப்பங்களையும், மீனு, கைலாஷ், கங்காவின் வாழ்வில் நடந்த ஊகிக்க முடியாத சில நிஜங்களையும் கண்டு ஆச்சர்யம் கொண்டது மனது. கங்கா குழந்தைகளை கொல்ல வந்த சம்பவம் எனகு மிகுந்த அதிர்ச்சியைத் தந்தது. என்ன ஒரு மனம் மீனாவிற்கு.. சில மனிதர்களின் முகமூடி கிழிந்து அவர்களின் உண்மையான நிறத்தை பார்க்க நேர்வது கொடுமை தான்.. கங்காவை நினைத்தால் சிறிது பாவமாக இருந்தாலும் மனம் மீனு-கைலாஷின் ஜோடியை நினைத்து மகிழ்ச்சி அடைகிறது. மீனு-கைலாஷ் வாழ்க்கை சிறப்பாக அமையட்டும். நல்லதொரு கதை அளித்ததற்கு நன்றி Madhu mam.. அடுத்த கதைக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம். நன்றி. வாழ்க வளமுடன்.. May God bless U Madhu mam..

    1. உங்களது நேரத்துக்கும் கதைகளைப் பற்றிய உங்களது கருத்துக்களுக்கும் நன்றி முத்துமாரி. மீனு-கைலாஷ் ஜோடிதான் கடவுளால் நிச்சியக்கப்பட்டது போலும்.
      அடுத்த கதை சற்று இடைவெளிக்குப் பின்.

  3. அழகான அருமையான முடிவு தமிழ்…ரொம்ப நல்லா இருந்தது..மீனா மற்றும் கைலாஷ் மறக்க முடியாது,,சூப்பர் ஸ்டோரி…

  4. Oh this is the reason behind Kalaivani giving away the kids just like that.
    Let Kailash and Meena have a beautiful life going forward.
    Apt finish Tamil. Congrats

    1. இந்த கதை முழுவதும் என்னுடன் கூடவே சேர்ந்து பயணித்ததுக்கு நன்றி சிந்து. கண்டிப்பாய் கைலாஷுக்கு மீனா பொருத்தமான மனைவியாய் இருப்பாள்

    1. நன்றி ஷாந்தி. பிரேக் முடிஞ்சு வந்துட்டிங்களா. இந்தக் கதை முழுவதும் பயனிததுக்கு நன்றி.

  5. wow…. கடைசியா, ஒரே ஒரு கெஸ்தான் சரியா இருக்கு…..கிகி…. 😆😆
    கங்கா & கலைவாணி பத்தி என்ன சொல்றது…. இக்கட்டான நிலையில் இருந்த ஒரு அறியா பெண்ணை பயன்படுத்திகிட்டாங்க…. மீனுவுக்கு அந்த நேரத்துல பணமே தேவைப்படலைனாலும் கங்கா ரொம்ப வற்புறுத்தி, அழுது, கெஞ்சியிருந்தாலே இதுக்கு ஒத்துகிட்டிருப்பா… கங்கா மேல அவ்வளவு பாசமும் அன்பும் இருந்தது அவளுக்கு….
    சொல்றது தவறா கூட இருக்கலாம், ஒரு விதத்துல கங்கா போனது நல்லதுதான்… இல்லைனா ஒரு நாள் இல்லைனாலும் ஒரு நாள் அந்த குழந்தைகளுக்கு கண்டிப்பா ஆபத்து…. இவளுக்கு மறைத்து வைத்திருந்த மனநோயை கண்டுபிடிக்கவே கைலாஷுக்கு நாளாகியிருக்கும், அதுக்குள்ள குழந்தைகளை ஏதாவது பண்ணியிருப்பா….
    எப்படியோ, மீனுவிற்கும் ஒரு நிம்மதி, கைலாஷிடம் மறைத்த இரண்டு ரகசியங்களும் கடைசியில் அவனுக்கு தெரிந்து விட்டதால், இனி மனதில் பாரமில்லாமல் இருப்பாள்…. கங்காவிடம் படாதபாடு பட்ட அவனுமே இனி ஒரு நிம்மதியான வாழ்க்கையை வாழ்வான்…. கங்காவை விட அவனுக்கு எல்லாவிதத்திலும் பொருத்தமானவள் இவள்தான்….
    ஆனா ஒண்ணு, குழந்தைங்க கிட்ட கங்கா படத்தை காட்டி அம்மானு சொல்லிக் கொடுத்ததுக்கு, மீனு கிட்ட ஒரு நாலு அடியாவது அவன் வாங்கிக்கணும்…. 😆😆😆

    1. என்னோடு இணைந்து பயணித்து உங்களது கருத்துக்களை ஒவ்வொரு பதிவிலும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி செல்வி.
      கைலாஷ் இப்ப செஞ்சதுக்கும் சேர்த்து முன்னாலே கங்காகிட்ட வாங்கிருக்கானே. அதனால போனாப் போகுதுன்னு மன்னிச்சு விட்டுடலாம்

  6. Hai mathura super ending,ninache badiye Ganga ratchasi ya than irunthiruka,pasama kekurathu Vera ipidi mirati corner panni kekurathu verala,Ana kalaivani Amma ku pilla ya iruntha Ava Vera epidi irupa?
    ena happy news na,babies oda pirapula meenuku Pangu irukurathu than,kovakara kailash a (apidi act vitutu)irunthavan ipidi asadu valiyum pothu super a irukuthu.
    thanks for a nice story.next epo ?please come back soon eagerly waiting.god bless u.

    1. இந்தத் தொடர்கதை மற்றும் நிலவு ஒரு பெண்ணாகி இரண்டு கதைகள் முழுவதும் என்னுடன் பயணித்து உங்களது கருத்துக்கள் மூலம் உற்சாகமூட்டியதற்கு நன்றி செல்வா.

Leave a Reply to Tamil Mathura Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 47ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 47

47 – மனதை மாற்றிவிட்டாய் தனக்குள் சிறிது நேரம் பல மன போராட்டங்களில் இருக்க அவளிடம் வந்து நின்றனர் அபி, அம்மு, தர்ஷி, ரஞ்சி அனைவரும். அபி நேராக திவியை பார்த்து “என்ன திவி, உன் லவர் தயா வ நினைச்சிட்டு

கபாடபுரம் – 25கபாடபுரம் – 25

25. மீண்டும் கபாடம் நோக்கி   தொடர்ந்து ஒரு திங்கள் காலம் தென்பழந்தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து பல தீவுகளையும், பலவிதமான மனிதர்களையும், பலவிதமான பழக்கவழக்கங்களையும் பலவிதமான ஒழுகலாறுகளையும் அறிந்து முடித்த பின்னர் கபாடபுரம் நோக்கிப் பயணம் திரும்ப முடிவு செய்தார்கள் அவர்கள்.