Tamil Madhura தொடர்கள் வார்த்தை தவறிவிட்டாய் – 7

வார்த்தை தவறிவிட்டாய் – 7

ஹாய் பிரெண்ட்ஸ்,

போன பகுதிக்கு கமெண்ட்ஸ் போட்டவர்களுக்கு நன்றி.

பானுவைப் பற்றி கவலைப்பட்டிருந்தீர்கள். உங்களது ஆதங்கம் புரிகிறது. என்ன செய்வது எல்லா கதைகளும் Fairy Tale இல்லையே.

பானுவுக்கு உண்மை தெரிய வருமா? தெரிந்தால் அவளது ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? எத்தனை பேர் பதில் சொல்லுறிங்கன்னு பார்க்கலாம். ஒரு ஐந்து விதமான பதில் வந்ததும் அடுத்த அப்டேட் போட்டுடுறேன். இன்னைக்கே ரிப்ளை வந்துட்டா நாளைக்கு அடுத்த பதிவு.

இனி இன்றைய பகுதி

வார்த்தை தவறிவிட்டாய் – 7

அன்புடன்,

தமிழ் மதுரா

17 thoughts on “வார்த்தை தவறிவிட்டாய் – 7”

  1. hi tamil..
    nice update..

    banu ku pirandha veetu support um illa..
    prakash panra throgam theriyum bodhu , adhey veetula irundhalum avana full ah ava ignore pannanum..

  2. உண்மை தெரிய வரும் போது பானு என்ன செய்ய முடியும்?????? அவளுக்கு தாய் வீட்டில் எந்த support கிடையாது ……படித்து வேலைக்கு செல்லும் பெண் என்றாலும் வீட்டை விட்டு வெளியே செல்லலாம் ….தைரியமான பெண்ணாகவும் தெரியல….வீட்டில் இருந்து ஆனால் பிரகாஷ்கு எந்த வேலையும் செய்யாமல் ,அவனிடம் பேசாமல் ,அவனை ஒதுக்கி வைத்து ,அவள் பாசம் கிடைக்காத என்று அவன் ஏங்க வேண்டும்…
    அமைதி கூட சில சமயம் பெரிய தண்டனை தான்,,…..

  3. ஹாய் மதுரா,

    படித்துவிட்டு தனது படிப்பை அத்தனை பேருக்கு சொல்லித்தரும் ஒரு ஆசானுக்கு தனது மனைவியின் மீது கொண்டுள்ள அதிருப்தி வாழ்க்கைக்கு உதவாது என்பதை அறியாமல் இருக்க முடியுமா???? படிப்பு நமது வாழ்க்கை முறையை சிந்தித்து வழி நடத்த தானே உதவும்? எப்படி இப்படிபட்ட சலனங்களுக்கு இடமளித்து நம்பிக்கை துரோகம் செய்ய தூண்டும்??? ம்ம்.,,,இப்படி பட்ட ஆண்கள் உலகில் இருக்கிறார்கள் தான்..ஆனால்…பிரகாஷின் உயரிய கல்வி ஆசான் சாசனத்தில் இருத்திக்கொண்டு இப்படி என்னால் முடியவில்லைபா….

    பானு….. கண்டிப்பாய் அவளது கையில் கொடுத்து வேலைக்கு செல் என தூண்டும் அந்த ஒரு பொரியே அவலை இந்த நிகழ்வில் இருந்து மீட்டு… பிரகாஷிற்கு எது நிஜம், எது மாயை என்பதை உணர்த்துவாள்… ஆனால் மனதால் அவனது தவறை அவளால் ஏற்க முடிந்தாலும் ஓர் வாசகியாய் என்னால் ஏற்கவே முடியாது….. ஆனால் பானுவின் உயரிய பண்புகள் மூலம் எளிதில் வெளி வருவாள்

    -கீதா

  4. Hai Tamil,

    Today only i read your story .very nice, but i can’t able to tolerate this Prakash character.
    So please don’t make Banu to accept this illegal connections and eagerly waiting for the next ud please

  5. ஹாய் தமிழ் ,
    பானுக்கு அனைத்து பக்கமும் இழிசவாய் பட்டம் ……..அருமையான அம்மா ,அண்ணா,அண்ணி ………..சத்யா மனசாட்சி குத்துதா ??????தெரிஞ்சே தவறு செய்வதை பானு பொருத்து கொள்ள கூடாது …….வெளியேறவும் கூடாது ……அவளுக்கும் ,குழந்தைகளுக்காகவும் அவள் தனி வழியில் முன்னேறனும் …………

  6. ஹாய் தமிழ்,

    என்ன சொல்ல ………பானுக்களை பார்க்கும்போது பாவமா இருக்கே.
    உண்ட வீட்டிலேயே ரெண்டகம் செய்யும் ………..பேய் கள் இருக்கிறார்கள்.
    ஆனால் பானு மன்னிக்கணும்,பொறுத்து போகக்கூடாது ……..எதுவும் சொல்ல முடியலை………..ஆனால் அப்படி வாழ்ந்த பெண்கள் கோழைகள் அல்ல……..
    இப்ப நிறைய பெண் சுதந்திரம் பேசுறவங்க …..சொல்லலாம்…………
    ஆனால் அவர்கள் தன்னலமற்றவர்கள்.அடுத்த தலைமுறையை காப்பாற்ற தன்னை அழித்து கொண்டவர்கள்…….உணர்வு,ஆசை …………அதில் சுகிப்பவ்ர்கள் நாம் …………ஆனால் ………நாம் சுயநலவாதிகள் ……..அவர்களை விமர்சிக்க தகுதி இல்லைன்னு நினைக்கிறேன்…………நிறைய கண்ணெதிரில் பார்க்கிறேன் ……….மன வருத்தமுண்டு……….பெண்ணும் துரோகம் செய்கிறாளே ………அவர்கள் நாடகத்தை நாமும் விழுந்து விழுந்து பார்க்கிறோம் ..சிலர் மனைவியை விட மரியாதை பெற்று விடுகிறார்கள் …….சமுகத்தில் …….
    இது கொடுமை தான் …….

  7. தமிழ் ஜீரணிக்கவே முடியவில்லை பிரகாஷின் செயலை …. ஆனாலும் நீங்க உங்க ஹீரோவை இப்படி ஒழுக்கம் இல்லாதவனாக கொடுத்திருக்க வேண்டாம்!!!! அழகில்லாத … படிக்காத அசடு மனைவியாக வந்தால் துரோகம் செய்யலாமா ????

    பானு நிச்சயம் தயக்கம் காட்ட தான் செய்வாள் ஆனால் கண்டிப்பாக அவளின் தோழிகளின் உதவியுடன் தன் கணவனை விட்டு பிரிய வேண்டும் ….. சுயமரியாதை உள்ள எந்த பெண்ணும் இந்த துரோக செயலை ஏற்று கொள்ளவே மாட்டாள்… அவளை முதுகெலும்பு இல்லாதவளாக , கணவர் மேல் அன்பு கொண்டு அவன் காதலுக்காக எதையும் தாங்குவேன் என்று கணவரை அனுசரித்து செல்வது போல தயவு செய்து சித்தரித்து விடாதீர்கள் ப்ளீஸ்……

    அவளின் அம்மா..அண்ணன் வேறு சரியில்லை என்னப்பா பானு முடிவு எடுப்பாள்????

    தாலி கட்டிய உரிமை … நான் போய் விட்டாள் அவளுக்கு உரிமை வந்து விடும் போக மாட்டேன் என்று துரோகம் செய்த கணவனுடன் தான் இருக்க போகிறாளா !!!!!!!
    என்னை பொறுத்த வரை பானுவை பத்தாம்பசலி யாக சித்தரிக்கதீர்கள் …அவள் நம் சரயு மாதிரி திடம் உள்ளவளாக காதல் இருந்தாலும் கணவரை பிரிந்து தன் பிள்ளைகளை அருமையாக வளர்த்து … சாதிக்க பிறந்தவளாக கொடுக்க வேண்டும் …. கணவர் மட்டும் தான் வாழ்கையா என்ன????

  8. ஹாய் தமிழ்

    பானுவோட அம்மா பானுவை இளிச்சவாயா நினைப்பதோட மட்டுமில்லை, ஒரு சுயநலவாதியாகவும் இருக்காங்க… மகளுக்கு செய்ததை கூட சொல்லி காட்டும் அம்மாவை என்ன சொல்வது…??

    அவளின் அண்ணாவும், அண்ணியும் சொல்வது கூட ஒரு வகையில் ஏற்றுக்கொள்ள முடியும்…, ஆனால் அம்மா பேசுவது…??

    ஹய்யோ… என்ன ஒரு அன்பு பிரகாஷுக்கு…, பானுவை யாரும் எதுவும் சொல்ல கூடாதாம்…, அதிலும் பூர்வஜா ஏதாவது பானுவை பற்றி சொன்னால் கடித்து குதறி விடுவானாம்… கொடுமைடா …… இவன் பண்ணுற துரோகத்தை விடவா பூர்வஜா பேசிவிட போறா …??

    அழகிகளின் கண்ணீர் ஒரு குடும்பத்தையே அழிக்கும்…!!

    பானு என்ன பண்ணுவான்னு கேட்டு இருக்கீங்க…, அவ என்ன பண்ணுவாளோ எனக்கு தெரியாது.., ஆனா அவ பிரகாஷை மன்னிக்கவே கூடாது… திரும்ப ஏற்றுக்கொள்ளவும் கூடாது…

  9. பானுவுக்கு ரொம்ப கஷ்டம் தான். ஒரு பக்கம் சுயநலமான அம்மா, செய்வதை சொல்லிக்காட்டும் அண்ணன், வார்த்தைகளால் வதைக்கும் அண்ணி, இவர்களை வைத்துக் கொண்டு கணவனை எதிர்த்து வெளியே சென்றால் அவளுக்கு ஆதரவு யார்? ஒரு வேளை மாமியார் வீட்டிற்கு சென்றாலும் பணம் கொடுக்கும் பிள்ளைக்காக பார்ப்பார்களா இல்லை மருமகளை ஆதரிப்பார்களா என்று தெரியவில்லை. அப்படியே பானு வெளியே வந்தாலும், அவள் படிப்பிற்கு வேலை கிடைக்குமா ? அதற்காக பிரகாஷ் கூட வாழ வேண்டும் என்று அவசியமில்லை. அவளுக்கு தேவை மனோதிடமும், தைரியமும் தான். பானு பிரகாஷ் விட்டு வந்தால் தான், பிரகாஷ் திருந்துவான். அவனுக்கு ரொம்ப நாள் பானுவையும், பிள்ளைகளையும் விட்டு இருக்க முடியாது என்று நினைக்கிறேன். பிரகாஷ் விட்டே பூர்வாஜாவை வெளியே அனுப்பவேண்டும்.

  10. ponga Tamil.
    Banu vai aval kanavan thaan ippadi oru throgam seigiraan nu paarthaal, aval amma vum ippadi nadakkaraangalae!!!!

    Banu ku unmai therinthaal???

    Banu oda characterukku , aval veru vazhiyillaamal iruppaal nu thaan thonuthu, aval kanavanukku adangiyae pazhakkappattaval, aval udanae puratchigaramaana mudivu edukka mudiyaathu
    1.pirantha veettil muzhuthaaga thanga mudiyaathu
    2.2 penpillaigal irukku, athan ethirkaalam ennaagum nu think pannuvaal
    3.kanavan kettavanaaga irunthaalum avanai matravargalidam vittu kudukka maattaal

    so avaloda anbaal avanai maatruvaal nu ninaikkiraen…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 06ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 06

6 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்   அன்று முழுவதுமே இருவரும் எந்த பிரச்சனையும் இல்லாமல் குறை கூறாமல் வேலை செய்தனர். ஆதர்ஷ் அக்சராவிற்கு தெரியாமல் அவளிடம் வம்பு செய்தவனை கண்டுபிடித்து புரட்டி எடுத்து மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டான். ஏன் அத்தனை கோபம்

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 24ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 24

24 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் கேந்திரனுக்கு பிஸ்னஸ், பைரவிக்கு அவங்க அப்பா அம்மா தங்கச்சி கல்யாணி என குடும்பத்துடன் இணைந்தது, ஆனந்த்க்கு தம்பி மேல் இருந்த பாசம், அதோட தான் காணாத பல சொந்தங்கள் கிடைத்தது, வெங்கட்ராமன் தனக்கான அடுத்து

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 46ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 46

46 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் அனைவர்க்கும் ஆச்சரியமாக இருந்தது. அதெப்படி இரண்டுபேரும் சொல்லாமலே லவ் பண்ண ஆரம்பிச்சிட்டீங்களா சரி அது எப்போ எப்படி புரிஞ்சுக்கிட்டீங்க, லவ் அட் பஸ்ட் சைட்டா, என்ன நடந்ததுனு எங்களுக்கு முதல இருந்து சொல்லு” என