Tamil Madhura முழுகதைகள் உன்னிடம் மயங்குகிறேன்

உன்னிடம் மயங்குகிறேன்

உன்னிடம் மயங்குகிறேன்

62 thoughts on “உன்னிடம் மயங்குகிறேன்”

  1. madhura after a long time, a small quick reading to Unnidam mayangukiren. prithvi nandana small replica off vishnu andsarayu nuthonudu. but story entirely different. enna oru otrrumai na. prithivi and vishnu avangaloda kathalikaga edhuvum seyya thayangadavanga. sarayu and nandana vum appa ammavai tholaithavargal. nandanaku periamma and sarayuvirku akka husband. analum nandana suicide attempt panna ana sarayuku romba thairiyam.but than kathaligalai thangi vazhinadati anbal kulipattuvadil rendu perum salaithavargal alla. nanda and prithvi meendum ennai rombave makthizchiyil aazhthivittargal.anda climax rombave touching

  2. Hi mam,
    Ungaloda indha story padichadhuku appuram unga stories ellavatraiyum search panni one week kula padichu mudichuten ellame rombave super ah iruku school daysoda reading palakatha vitachu ipo romba varusam kalichu pratilipi Ungaloda Indha Story Padichu marubadium padikira palakam vandhuduchu daily unga blog pathu next story epo varumnu wait panituruken please seekirama next story update panunga…. Thank You so Much…

  3. unnidam mayangukiren, (madhura ungal eluththu nadaiyil) edhu than muthan muthalil padiththa kathai. muthalum sari, mudivum sari enkku mikavum pidiththu irunthathu..

    kala, kalappana kunam vudaiyavarkal vazhvill perum sokam irukkum enru kuruvarkal. prithvi vazhkkai sokaththai ketkum podhu manam vethanai pattathu. mattravarkal kannirai thudaikkum Avan karangalai vazhththukiren. parth muthar kondu kathalikkum pennudam than kathalai kuramal kanniyam kaththa prithvi vazhka. than kathalikku perum soththidum,Anbodum kidaikum ranjanukkaka vittu kodukkum manbu irukirathey,(prithvi nanraka adikka pokiren.. than kathalikum pen manathai purinthu kondaya?) Ranjan kuda nallavan than. penkalidam pesi avanukku palakkamillai poll irukkiradhu. Avan thalaiyeluththu afvaluvu than. ek kathaiyai periya navalaka vadiththirunthal JANUVUM, naamagiriyum santhisapattuppom….

  4. hi tamil
    naan unga ella kathayum padichi irukken naan penmayil irukken oru thozhi unga story pathi solli scribd link koduthanga superb unga kathi ellam aana enakku unnidam mayangukiren link parkka mudiyala naan enga parkkalamnu sollveerkala please
    ippo chitrangatha padikkiren i love sarayu caracter

  5. சூப்பர் தமிழ் mam.
    நான் படித்தது -பொங்கலுக்கு அடுத்த நாள் -பொன்னு mam review பார்த்துட்டு ,படித்தேன் .டெய்லி இந்த பக்கம் ,வர நான் அன்னைக்கு பார்த்து வரல .நீங்களும் ,அன்னைக்கு பார்த்து ,இந்த கதையை போட்டச்சு.

    review போட ,type பண்ணி வைத்து இருக்கையிலே ,எல்லாம் delete ஆகிடுச்சு .
    ரெம்ப சீக்கிரமா தான் review போட்டுட்டேன் இல்ல ……
    சூப்பர் ,mam .இந்த உலகில் பிறப்புக்கும் ,இறப்புக்கும் இடயில் ,வாழும் …இந்த வரிகள் சூப்பர் ….
    அன்னை தெரசாவின் வரிகளை ,இப்போ தான் படிக்கிறேன் .
    ப்ரித்விக்கு தான் ,என் vote-இல்லாதவனுக்கு தான் அருமை ,தெரியும் .

    ரஞ்சன் ,கையில் கிடைத்த பொக்கிசத்தை தவற விட்ட -அறிவிலி
    நந்தனா-சூப்பர்

    இந்த கதை சூப்பர் -எல்லாவிதத்திலும் ,ரஞ்சனிடம் ,நந்தனா ப்ர்திவிடம் ,வந்ததை போல் வந்திருந்தால் ,ஏத்து கொண்டிருப்பானா ????
    மாட்டான்

    நல்லா இருந்தது ,நிறைய எழுதுங்க -படிக்க காத்திருக்கிறோம்

  6. HI Tamil,
    First thank you Soooooooooooooooooooo much for providing the link 🙂
    Awesome story short and sweet. Nandhana and Prithvi pair thaan serannum nnu ninaichean atheypola avangalai seithuteega mothathil as usual u rocked 🙂

  7. Tamil…. ennalalinka open pannava mudiyala.. Pls link kizha irukura ennoda mail idku anupa mudiyuma… Ellorada comment padichu, I dying to read the story, Pls pa.

  8. ஹாய் தமிழ் ,

    நான் ஜெயந்தி(jv) …..பெண்மையில் இருப்பவள் , உங்களுக்குத் தெரிந்து இருக்கலாம் .

    உன்னிடம் மயங்குகிறேன் படிச்சாச்சு…..மிக மிக அழகான குறு நாவல் .
    பாவம் , நந்தாவை எப்படி எல்லாம் ஏமாத்துறாங்க ….நல்ல வேளை , அவளுக்கு ஒரு ராஜேந்திரன் மற்றும் ப்ரித்வி, இவங்க கிடைச்சது , மனசுக்கு நிறைவா இருக்கு ……

    உங்களோட வழக்கம் போல , மதுரை சுற்று வட்டாரங்களையும் , ஜலந்தர் பற்றிய அனைத்து விளக்கங்களையும் ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க .

    ஒண்ணு தெரியுமா ……ஜலந்தர் , எங்க ஊரு …….நான் பல வருஷங்கள் அங்க இருந்து இருக்கேன் .

    இந்தக் கதையைப் படிச்சபோது , அந்தக் காலமெல்லாம் ஞாபகம் வந்தது .

    தன்னலமில்லாம , ராஜேந்திரன் ஹெல்ப் பண்ணுறது , அசத்தல் .

    ரஞ்சன் , என்ன ஒரு எடுப்பார் கைப்பிள்ளையா இருக்கான் ….யார் என்ன சொன்னாலும், அதுக்கு ஏத்த மாதிரியே யோசிக்கறானே ….இவன் எல்லாம் எப்படி சக்செஸ்புல்லா பிசினஸ் பண்றான் ?

    அகிலாண்டமும் அதுக்கு ஏத்த மாதிரியே நடந்துக்கறாங்களே ?

    என்ன ஒரு அருமையான ஹீரோ , இந்த ப்ரித்வி …..அட ….அட……

    நந்தாவை , மிக அருமையா , ஒவ்வொண்ணும் சொல்லிக்கொடுத்து , அவளை , ரொம்ப நல்லா முன்னேத்துறது , ரொம்ப அருமையா இருக்கு …..

    தன்னோட காதலை சொல்லத் தயங்குறதும் , ரிங்கி , அவனை அதைச் சொல்லி ப்ளாக்மெயில் எல்லாம் செய்யுறதும் ,அதனால , நந்து பொங்கி எழுந்து , இவங்க ரெண்டு பேரும், ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கறதும் , அபாரம் ……ரொம்ப நல்லா கோர்வையா சொல்லி இருக்கீங்க …..

    கடைசில , நந்து , ரஞ்சனை உதாசீனப் படுத்தறதும் , அவனை வேண்டாம் என்கிறதுக்கு அவள் சொல்லும் விளக்கங்களும் , இதெல்லாம் தான் நடக்கணும்னு , நான் கண்டிப்பா விரும்பினேன் ….அதே மாதிரி , கொண்டு போயிட்டீங்க ….சூப்பர் …..

    ஒரு விண்ணப்பம் – உங்க மெயில் id தர முடியுமா , பர்சனல் லா ஒண்ணு சொல்லணும் ……

  9. வணக்கம் தோழிகளே,
    உன்னிடம் மயங்குகிறேன் கதை லிங்க் கேட்டு நீங்கள் அனுப்பிய மெயில், கமெண்ட்ஸ், முகநூல் மெசேஜ் எல்லாம் கிடைத்தது. கதையைப் படிக்கிற வாசகர்களில் ஐந்து சதவிகிதம் பேர் கமெண்ட்ஸ் போட்டாக் கூட நூறுக்கு மேல வந்துடும் போலிருக்கு.
    உங்களுக்காக இன்றும் நாளையும் லிங்கைப் போடுகிறேன். நீங்களும் படித்துவிட்டு உங்களது கருத்தைப் பகிர்ந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். எனது ப்ளாகிலேயே உங்களது கருத்தின் ஒரு காப்பியைப் பதிந்தால் எனக்கு பதிலளிக்க வசதியாக இருக்கும்.
    அன்புடன்,
    தமிழ் மதுரா

    1. Dear tamil,
      i cant read உன்னிடம் மயங்குகிறேன் story,”There is impossible to find ur novel”
      please help me how to read ur novel

  10. மதுரா,

    உங்கள் கதையை இன்று படித்தேன்…அருமை… என்ன அழகான எழுத்து நடை…வசனங்கள் எல்லாம் பிரமாதமாக இருந்தது. நந்தா ப்ரித்வி மீது கொள்ளும் காதலை சம்பவங்கள், வசனங்கள் மூலமாகவே காட்டி இருப்பது அழகாக இருந்தது… அவன் அவளுக்கு தெரியாமல் செய்யும் காதல் குறும்புகளை ரசித்தேன்… ஆனால், பிரத்வி பாத்திரப் படைப்பு அருமை..எல்லாரையும் கொள்ளை கொண்டு போய் விட்டது…ஆனால், ரஞ்சன் பாத்திரத்தை செதுக்க தான் நீங்கள் சிரமப்பட்டு இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்…யதார்த்தமாக இருந்தது. அவன் நல்ல காதலன் இல்லை ஆனால் நல்லவன்.நந்தா ஜலந்தர் சென்றதும் நடக்கும் மனமாற்றத்தை சம்பவங்கள் மூலமாக காட்டுவது நன்றாக் இருந்தது! ஆக மொத்தத்தில் ரசித்து, ருசித்து பொங்கல் உண்ட திருப்தியை அளிக்கிறது உங்கள் நாவலை முதன் முதலாக படிக்கிறேன்…உன்னிடத்தில் மயங்குகிறேன் என்னை உங்கள் எழுத்தில் மயங்க வைத்து விட்டது என்பது மிகையல்ல…

    நிறைய informations கொடுத்து இருந்தீங்க. நல்லாயிருந்தது.

  11. ஹாய் தமிழ் , படிச்சுட்டேன் ……… அருமையா இருக்கு ……….
    நச்சுனு இருந்தது …………
    நந்தா வின் அமைதி , ப்ரித்வியின் – உயிர்ப்பான துடிப்பு – சோகம் இருந்தாலும் அதிலே அமிழாம அவன் மேல வந்தது அழகு ……..
    ராஜேந்திரன் – கொஞ்சமே வந்தாலும் இப்படி ஒரு உடன் பிறவா சகோதரன் கிடைக்க கண்டிப்பா நந்தா கொடுத்து வைத்தவள் ………..
    கௌமாரி திருவிழா , பஞ்சாப் மக்களின் உணவு முறை , கிரிக்கெட் மற்றும் விளையாட்டு சம்பந்த மான செய்திகள் எல்லாமே கதையுடன் நல்லாவே gel ஆச்சு ……..
    ஆரியமாலா /ராதா – பணமா என்றால் பிணமும் வாய் பிளக்கும் போது இதுங்க எம்மாத்திரம் ………..
    ரஞ்சன் – அவனுக்கு இது தேவை தான் ……என்ன அந்த ராதா கிட்ட மாட்டி மிதி பட்டு இருக்கணும் அப்போ நந்தா மனதை உடைத்ததுக்கு தண்டனை யா இருந்து இருக்கும் …………..
    ஜலந்தர் ல நந்தாவின் மாற்றம் cute …….
    சென்னை -ஜலந்தர் ரயில் பயணம் , கர்ஜீவன் குடும்பம் ,கடைசில ரஞ்சன் அம்மாகிட்ட சொல்லும் இடம் and முக்கியமா ப்ரித்வியின் flat ஓட நிலை எல்லாமே சூப்பர் o சூப்பர் ……. ரஞ்சனை பார்த்து ப்ரித்வி தவிப்பு and நந்தா நடந்து கொண்ட விதம் excellent ………
    சிம்பிள் and ஸ்வீட் கதை …….ப்ரித்வி நெஞ்சை அள்ளிடான்…………
    பொங்கல் இனாம் ku ரொம்ப நன்றி ………..

  12. Hai I am new to this site.reading is my hobby.
    This novel is superb.
    I don’t know how to write like others to describe ur story.
    So in my own ur story is good and amazing.
    Bhavani.

  13. [QUOTE=TamilMadhura;944232]நன்றி அமிர்தா. என்னுடைய கதைகளில் வரும் கதாநாயகனைப் பிடித்ததற்கு நன்றி. எந்த கதாநாயகனை உங்களுக்கு மிகவும் பிடித்தது?
    மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – மாதவன்
    ஒரு கல் ஒரு கண்ணாடி – ரிஷி, அர்ஜுன்
    கண்ணாமூச்சி – கோகுல்
    என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – அரவிந்த்
    அத்தை மகனே என் அத்தானே – மனோகர், அகில்
    சித்ராங்கதா – ஜிஷ்ணு, ராம்
    உன்னிடம் மயங்கிகிறேன் – ப்ரித்வி, ரஞ்சன்[/QUOTE]

    உங்கள் கதைகளில் எனக்கு பிடித்தவர்கள் , அர்விந்த், பிரிதிவ், ரஞ்சன், அர்ஜுன், மனோகர், ரிஷி, அகில்.

    இப்போது எழுதும் சித்ராங்கதா ல் ஜிஷ்ணு மிகவும் பிடிக்கும், ராம் பற்றி இன்னும் விரிவாக சொல்லவில்லை.

    இந்த ஹீரோஸ்ல ரிஷி, ரஞ்சன், இரண்டு பேரும் முன்கோபிகள். கோபத்தில் வாயை விடுகிறார்கள். ரஞ்சன் கெட்டவன் இல்லை. அந்த நதிக்கரையோரம், என சந்தோஷத்தை தொலைத்து விட்டேன் என்று மருகும் போதும், அமிர்தசரஸ் இருந்து திரும்பி வரும் போது தன அம்மாவிடம் தான் அவளுடைய நம்பிக்கையை, காதலை சிதைத்து விட்டதாக கூறும் போதும் அவனுடைய மனதை படம் பிடித்து காட்டுகிறது. இவனுக்கு ஒரு செகண்ட் இன்னிங்க்ஸ் கொடுத்தல் இவனும் ஜெயிப்பான். இவனை வைத்து இன்னும் ஒரு சிறுகதை எழுதுங்கள். படிக்கச் ஆவலாக உள்ளோம்.

  14. ஹாய் தமிழ் …..
    பொங்கல் ட்ரிட் super ….. மாதம் ஒரு பொங்கல் வந்த சூப்பரா இருக்கும் …. ரஞ்சன் திரும்ப வந்த உடன் கடுப்பாயடேன்…. எங்க நந்தாவையும் பிரிதிவையும் பிரிசிடுவிங்கலோனு பயந்துட்டேன் …. நல்ல வேலை … நந்தா ப்ருதிவ் சேர்ந்ததில் சந்தோசமே … முடிவு மட்டும் மாறி இருந்தது …. சப்பாத்தி தான் …..

    1. நன்றி க்ளோ. மாதம் ஒரு பொங்கலா…. உங்களுக்கே அலுத்துப் போயிடும்.
      ப்ரித்வியை பிடித்ததற்கு நன்றி. எனக்கும் நந்தா-ப்ரித்விதான் எல்லா விதத்திலும் பொருத்தமா தோணினாங்க. நல்லவேளை சப்பாத்தி வாங்காம தப்பிச்சுட்டேன்.

  15. ஹாய் தமிழ்,
    நன்றி.
    குறிப்பிட்டு சொன்னதுக்கும் நன்றி.
    நான் ரஞ்சன் மற்றும் பிர்த்வி கவனித்தேன்.
    நீங்க பதிக்க கொடுப்பிங்க அதில் தவறு வேண்டாமேன்னு சொன்னேன்.

  16. அன்புத் தமிழே,

    கதை களம் ரொம்ப அழகா இருந்தது. அழகான நந்தா…அட்டகாசம் செய்யும் ப்ரித்வி இவர்களின் காதல் இலைமறை காயை போல காட்டினது வெகு அருமை.

    ரஞ்சனுக்கு இது வேணும். அவளை அப்படியே ஒத்துகொள்ளாமே நண்பனோட பேச்ச கேட்டு….என்ன சின்ன புள்ள தனம் …ஆனா அதுனால தானே நந்தாவின் வாழ்க்கை வசந்தமா போச்சு.

    பொங்கலுக்கு வந்த இந்த கதை சக்கரை பொங்கல் தான் டா. எதுவுமே அதிகம் இல்லாமே அளவா தேவைக்கேற்ப சுவையோட இருந்தது. மிகவும் ரசித்து மறுபடி படிச்சேன்.

    உன்னிடம் (கதையிடம்) மயங்கித்தான் போனேன். 🙂

    இதே போல பல கதைகள் எழுதுங்க. வாழ்த்துக்கள்

    1. ஹாய் ஜெயா. எப்படி இருக்க? இந்த சர்க்கரைப் பொங்கலுக்கு ஏலக்காயாய் இருந்ததுக்கு நன்றி ஜெயா.
      ரஞ்சனோட ஒரு சிறு சலனம் எவ்வளவு பெரிய இழப்பை சந்தித்துவிட்டான். ரஞ்சன் double mindedஆக இல்லாமல் இருந்திருந்தால் நந்தனாவுக்கு அவன் மேல் ஏற்பட்ட ஈர்ப்பை அப்படியே காதலாக மாற்றியிருக்க முடியும். சரியான முட்டாபீசு. அவன் மட்டும் ஒழுங்கா இருந்திருந்தா ப்ரித்வி நந்தனாவை நெருங்கியிருக்க முடியுமா? ப்ரித்வி வில்லனா இல்ல மாறியிருப்பான். இதை நீ நெனச்சுப் பாத்தியா? 🙂

  17. ப்ரித்வி பெரிய பணக்காரன் இல்லை, புஜபல பராக்கிரமம் எதுவும் காமிக்கவில்லை. சொலப்போனால் ஆரியமாலா குடும்பத்தை ஒரு வழி செய்ததும் ரஞ்சன்தான். இருந்தும் ப்ரித்வி உங்களைக் கொள்ளை கொண்டது எனக்கு மகிழ்ச்சி.
    ஆகையால் நம் அழகிய தமிழ் மகன்களே. நம்ம தமிழ் பொண்ணுங்களைக் கவர உங்களுக்குத் தேவை அன்பு, அன்பு, அன்பு மட்டுமே
    ஹை நான் பார்முலாவைக் கண்டு பிடிச்சுட்டேனே

  18. தமிழ் உங்களின் புது முயற்சி நன்றாகவே இருக்கிறது. பொங்கல் அன்று ஸ்வீட்டான ஒரு கதையை கொடுத்து இருக்கீங்க .super.keep it up.

    1. நன்றி திவ்யா. எனது பொங்கல் வெண்பொங்கல் இல்லை கண்டிப்பாய் சர்க்கரைப் பொங்கல்தான் என்று நீங்கள் அளித்த ISI சான்றிதழுக்கு நன்றி.

  19. hai,unnedam mayangukiren novel is superb.prithvi character is-no words to say.really nice.anaithu pengalum ethirparkum oru hero.
    pongal treat nallaerundhadhu.

    1. நன்றி சரளா. பொங்கலை ரசித்து சாப்பிட்டதற்கு நன்றி. ப்ரித்விகிட்ட உங்க பாராட்டை சொல்லிடுறேன்.

  20. தமிழ் “உன்னிடம் மயங்குகிறேன் ” படித்துவிட்டேன் …ரொம்ப அருமையா இருந்தது கதை …பொங்கல் ட்ரீட் சூப்பர்…வெலந்தியான நந்தனா , குறும்பு + பொறுப்பு+ காதல் ப்ரிதீவ், ப்ரிதீவ்-ாஜேந்திரன் நட்பு எல்லாம் ரொம்ப பிடிச்சி இருந்தது ….ஜலந்தரில் ப்ரிதீவ் -நந்தனா வாழ்க்கை ரொம்ப சுவையா சொல்லி இருந்திங்க ..சிறு கதை மாதிரி தெரியல நிறைவான முழு கதை படித்த திருப்தி ….

    Uma Uday.(repplyuma)

    1. வாங்க உமா. கதை உங்களுக்கு நிறைவை தந்ததா. இதைக் கேட்கும்போது எனக்கும் நிறைவா இருக்கு. ப்ரித்வி என்னை மட்டுமில்லை உங்கள் எல்லாரையும் கூட கவர்ந்துட்டான்னு நினைக்கிறேன்.

    1. சுட்டிக் காட்டியதுக்கு நன்றி பொண்ணு. திருத்திடுறேன்
      இதுக்குத்தான் டீச்சர உசுப்பேத்தி விடக்கூடாதுன்னு சொல்லுறது. தப்பெல்லாம் நோட் பண்ணுறாங்களே…… டீச்சர் மார்க்கை குறைச்சுடாதிங்க டீச்சர்.

  21. hai tamil stry supera irunthathupa. nantha and pritvi pair arumaya irunthathu.pritvi real hero than .nantha avaloda innocence ahattam lastla pritvikitta kovapattu thannoda urimaya kaamikkurathu aahattum azhaka irunthathu.rajentran nalla annan.

    1. நன்றி பென்ஸி. ஆமாம் உரிமை இருக்குமிடத்தில் தானே கோவத்தைக் காட்ட முடியும். நந்தா- ப்ரித்வி ஜோடியை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி

  22. ஹாய் தோழிகளே,
    தமிழின் பொங்கல் சாப்பிட்டுட்டேன்.
    super இனிப்பு,நெய்,ஏலாக்காய் என பக்குவமாக செய்யப்பட்ட சர்க்கரைப்பொங்கல்.
    பெரியகுளம் கௌரி அம்மன் உற்சவத்தில் தொடங்குகிறது.
    திருவிழா காண வரும் வடஇந்தியன் பிர்த்வி.
    தன் ராஜேந்திரன் வீட்டிற்கு வருகிறான்.அம்மன் மகிமையில் ,தன் சம்யுக்த்தையை நவீன முறையில் தொடர் வண்டியில் தூக்கிட்டு போறான்.இதில் வந்தாரை வாழவைக்கும்,தமிழ் குணம்,ஏமாளி அப்பா,சமூகத்துக்குப் பயந்த முதுகெலும்பு இல்லா அக்மார்க் தமிழ் பெண்மை,அடிமை கிடைத்தால் ஏறி மிதிக்கும் பெண்களும் உண்டு எனும் எதார்த்தம்,கவர்ச்சி,நட்பு,காதல்,உறவு ,சோகம் என நவரசங்களுடன் ஒரு கதை.
    நந்தனா ——-ஒரு பாசமும்,இரக்கமும் கொண்ட ஏமாளித் தந்தைக்கு ஒரே பொண்ணு.செல்லப்பொண்ணு.
    அவர் அன்பை ………ஏமாளித்தனாமாக ஆக்கிய அன்பு ….தம்பி செந்தூரன் ஆரியமாலா அவர்கள் பொண்ணு ராதா.
    இருக்க இடம் கொடுத்தா ……… மடத்தை புடுங்கிற குடும்பம்.
    அவள் அன்புக்கும்,பாதுகாப்புக்கும் பொறுப்பதை பயன்படுத்தி,அவள் பணம்,சொத்து,காதல் மட்டுமல்ல வாழ்க்கையும் பறித்து,உயிரையும் பறிக்க துணிகின்றனர்.அதிலிருந்து காப்பாற்றி கூ ட்டிச் செல்கிறார் ஹீரோ.
    ரஞ்சன்.இன்றைய இளைஞர்களின் மனதை பிரதிபலிக்கிறான்.நண்பன்,அம்மா,நாகரிகம் என்ற பெயரில் தேவதை இழக்கிறான்.சாப்பிடத் தெரியலை,ஆங்கிலம் பேசத் தெரியலை.டிரெஸ்ஸிங் சென்ஸ் இல்லன்னு நினைத்த அவன் தன் சொல்லால் அவளை சாவின் விளிம்பிற்கு அனுப்புகிறான்.
    அவளை காப்பாற்றி,உயிர் மட்டுமல்ல,எவை இல்லை என்று உதறினானோ ,அவற்றை கற்று கொடுத்து,கூடவே தைர்யம்,தன்னம்பிக்கை கொடுத்து அவளை முழுமை பெறச் செய்கிறான்.
    தவறு உணர்ந்து நந்தானா வை தேடி வரும் ரஞ்சன் மன்னிப்புக் கேட்டு மணம் புரியக்கேட்கிறான்.
    அதற்கு அவள் பதில் super. நீங்க கதைப் படித்தே தெரிந்து கொள்ளுங்கள்.
    இதில் பிருத்வியின் காதலும்,அவன் குறும்பும் கலக்கல்.

    ஏதோ குறிப்பு இருக்குன்னு சொல்லி பரிச்சைக்கு படிப்பது போல் படிக்க வச்சுட்டாங்க தமிழ்.இன்னும் ஒரு முறை ஜாலியா படிச்சுட்டு வாரேன்.

    பொன் .

    1. வாங்க பொண்ணு. இவ்வளவு அழகா கதைக்கு விமர்சனம் தந்திருக்கிங்க. இதில் இருந்து நான் செஞ்ச சக்கரைப் பொங்கலோட ருசி உங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்குன்னு தெரியுது.
      உங்களோட விமர்சனமும் தேனுவோட விமர்சனமும் நல்லா இருக்கு. டீச்சருக்கே பரிட்சை வச்சுட்டேனா?

      சின்ன சம்பவங்களுக்கு உதாரணம் ஒண்ணு ரெண்டு சொல்லுறேன். கதையோட ஆரம்பத்தில் பாவாடை தாவணி கட்டிட்டு வரும் நந்தா, கடைசி அத்தியாயங்களில் பைஜாமா போட்டுட்டு சப்பாத்தி தேச்சுட்டு இருப்பா. இது அவ மனமாற்றத்தைக் குறிக்கும் செயல்களில் ஒன்று.

      ப்ரித்வி தொட்டு பேசினாலே கூச்சப் படுறவ, ப்ரித்வி மனசு கஷ்டத்தில் இருக்கும்போது சாப்பாட்டை ஊட்டி விடுவா, அவனது முகத்தைத் தன்புறம் திருப்புவது போன்ற செயல்களையும் தயக்கமில்லாம செய்வா.

      ரஞ்சன் இல்லைன்னு சொன்னா வாங்கித் தந்திருப்பேனே என்று கோவிக்கும் பொழுது தன் தன்மானத்தை விட்டு உன்னிடம் கேட்க வேண்டுமா என்று நினைப்பவள், ப்ரித்வியிடம் நீ சம்பாரிப்பதை நான் எப்படி செலவு செய்வேன் பார் என்று மனமார சொல்வாள். அது அவன் பணம் வேறு தன் பணம் வேறு என்று அவள் நினைக்கவில்லை என்று காட்டுகிறது.

      ப்ரித்வி அவளிடம் ஓரிடம் தவிர ‘நம் வீடு’ என்றே பேசுவான். நந்தாவும் அப்படியே.

      இதைப் போல சிறு சிறு விஷயங்களில் அவர்கள் மனதில் காதல் பூப்பதைக் காட்டியிருக்கிறேன்.

  23. ஹாய் தமிழ்

    இது தேனு.. பெண்மைல இருக்கேன்…, உங்களுக்கு தெரியும்னு
    நினைக்கிறேன்… உங்களோட கதை “உன்னிடம் மயங்குகிறேன்” படிச்சேன்… உடனே இங்க வந்துட்டேன்…., கமெண்ட்ஸ் கொடுக்க…

    கதை முழுக்க நந்தாவை சுற்றியே வந்தாலும் என் மனதில் இடம் பிடித்தவன் ப்ரித்வி.. & ராஜேந்திரன் also.. பிறக்கும்போதே தாயை இழந்து, பின் தந்தையையும் இழந்து ஆதரவின்றி தவிப்பவளை கொடுமைப்படுத்த அவர்களுக்கு (பெரியப்பா & பெரியம்மா) எப்படித்தான் மனசு வந்துச்சோ…

    அவர்களை விட கொடுமைக்காரன் அந்த ரஞ்சன்… அவனுடையது காதலே இல்லை… வெறும் இனக்கவர்ச்சி…, பார்த்ததும் மயங்கினான்…, பேசினான், காதல்னு அவனே நினைத்துக்கொண்டு அவளின் மனதிலும் அதை புகுத்தி….. கடைசியில் அவன் நண்பன் சொன்னானாம்…, பொருத்தும் இல்லாதவள்னு … so இவரு யோசிக்க ஆரம்பித்து பின் எல்லாரும் சேர்ந்து செய்த குழப்பத்தில் அவளை தற்கொலை வரை தூண்டியவன் …. மனிதனே அல்ல…

    அவளிடம் இருக்கும் குறைகளோடு அவளை ஏற்று…, அதை நிறைகளாக மாற்றிக்காட்டிய ப்ரித்வி உயர்ந்துட்டான்… அவனோட ஜானுவே அவனுக்கு போதும்… தாயா …தாரமா … பேபியா …எல்லாமுமா அவளே இருப்பா….

    1. வாங்க தேனுராஜ் உங்களைத் தெரியாம இருக்குமா? இன்னொரு க்ளு சொல்லட்டுமா ராஜ் ஊர் குளிர்தண்டலை அருகே.

      சுட சுடக் கதையைப் படித்து ரிவிய்யூ தந்ததுக்கு மிகவும் நன்றி. எனக்கு இந்தக் கதையில் ரஞ்சனை நந்தனாவோடு சேர்த்து வைக்க எதிர்பார்ப்பீர்கள் என்று நினைத்தேன். ப்ரித்வியின் காதலையும், நந்தனாவின் மனநிலையையும் புரிந்து கொண்டதற்கு நன்றி. உங்க ஆசைப்படியே நந்தாவே இனி ப்ரித்வியின் தாயாய் தாரமாய் பேபியாய் ஜானுவாய் சந்தோஷமாய் இருப்பாள்

      1. அதே…அதே…கரெக்டா நியாபகம் வச்சி இருக்கீங்க… சூப்பர் தமிழ் நீங்க…

        ஹய்யோ….போயும் போயும் ரஞ்சனோட நந்தா சேருவதா…நோ சான்ஸ்… நிலையில்லாத மனது அவனுக்கு…, நண்பன் சொன்னதையும், அம்மா சொன்னதையும் கேட்டுக்கொண்டு அவளை ஒதுக்கியவன்… so வேண்டாம்…

        ப்ரித்வி தான் சரியான சாய்ஸ்

        தமிழ்…, உங்க மெயில் idக்கும் நான் கமெண்ட்ஸ் அனுப்ப ட்ரை பண்ணினேன்… but failureனு வருது…

  24. வணக்கம் தோழிகளே,

    அனைவருக்கும் எனது இனிய தைப் பொங்கல் வாழ்த்துகள்.

    இந்தப் பொங்கல் மகிழ்ச்சியாய் பொங்கி
    நமது வாழ்வு கரும்பாய் இனிக்கட்டும்

    பொங்கல் பரிசா என்னுடைய புதிய, சிறிய புதினம் ‘உன்னிடம் மயங்குகிறேன்’ உங்களுக்காகக் காத்திருக்கிறது.

    இந்த கதையில் நீங்கள் வழக்கமாய் பார்க்கும் பார்முலா இருக்காது. அப்பறம் அவள் அப்படி நினைத்தாள், இப்படி நினைத்து உருகினாள் என்று எழுதுவதற்கு பதில் சில சம்பவங்கள் மற்றும் செயல்கள் மூலம் கதாபாத்திரங்களின் மனநிலைமையை விளக்கியிருப்பேன். இது ஒரு புதிய முயற்சிதான். கருத்துக்களைக் கச்சிதமாகக் கவ்விக் கொண்டு போகும் உங்களுக்கு நான் subtle-லாய் சொல்வது புரியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    படித்துவிட்டு ஒரு வார்த்தை எழுதினால் என்னைப் போன்ற வளரும் எழுத்தாளர்களுக்கு உதவியாக இருக்கும். செய்வீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    ‘உன்னிடம் மயங்குகிறேன்’ கதையினை மெருகேற்ற உதவிய, படித்து கருத்து சொன்ன தோழிகளுக்கும் எனது ஆயிரமாயிரம் நன்றிகள்.

    அன்புடன்,
    தமிழ் மதுரா.

Leave a Reply to lavanya lakshmi Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ராணி மங்கம்மாள் – முழுகதைராணி மங்கம்மாள் – முழுகதை

ராணி மங்கம்மாள் – முன்னுரை  ராணி மங்கம்மாளின் கதை தென்னாட்டு வாழ்க்கையோடு இரண்டறக் கலந்திருப்பது, சுவையானது.   மங்கம்மாள் சாலை, மங்கம்மாள் சத்திரம், மங்கம்மாள் தானதருமம் என்று மக்கள் அன்றாடம் பேசி மகிழும் சிறப்புடன் கதாபாத்திரமாக அவள் விளங்குகிறாள்.   அந்த

யாழ் சத்யாவின் ‘உயிருள்ளவரை…!’யாழ் சத்யாவின் ‘உயிருள்ளவரை…!’

வணக்கம் தோழமைகளே! எழுத்தாளர் யாழ் சத்யாவின் ‘உயிருள்ளவரை…!’ முழு கதையின் பதிவு உங்களுக்காக. இத்தனை நாளும் தனது பதிவுகளின் மூலம் உங்களது மனதைக் கொள்ளை கொண்ட எழுத்தாளருக்கு ஓரிரு நிமிடங்கள் செலவழித்து உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாமே ! [googleapps domain=”drive”